ரவி சாஸ்திரியின்.. சிறந்த இந்திய வீரர்கள் லிஸ்ட்டில்.. யாரெல்லாம் இருக்காங்க பாருங்க!

Jul 22, 2025,04:54 PM IST

மும்பை: முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த ஐந்து வீரர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார்.


93 வருட காலமாக இந்தியா கிரிக்கெட் விளையாடி வருகிறது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பல சிறந்த வீரர்கள் விளையாடியுள்ளனர். அவர்களில் இருந்து ஐவரைத் தேர்ந்தெடுப்பது கடினமான பணியாக இருந்தது என்று கூறியுள்ளார் ரவி சாஸ்திரி.


டேவிட் லாயிட், அலஸ்டர் குக் மற்றும் மைக்கேல் வாகன் ஆகியோருடன் 'Stick To Cricket' Podcast On The Overlap Cricket Youtube சேனலில் சாஸ்திரி பேசினார். அப்போது அவர் ஐந்து சிறந்த இந்திய வீரர்களை தெரிவித்தார்.


1983 உலகக் கோப்பையை வென்ற அணியில் இருந்து கபில் தேவ் மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகிய இருவரைத் தேர்ந்தெடுத்தார். மேலும், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, MS தோனி ஆகியோரையும் அவர் தேர்ந்தெடுத்தார். இதில் சச்சினை சிறந்த வீரராகவும் சாஸ்திரி குறிப்பிட்டார்.




இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பல சிறந்த வீரர்கள் உள்ளனர். ஆனால், சாஸ்திரி குறிப்பிட்ட இந்த ஐந்து வீரர்களும் மிகவும் முக்கியமானவர்கள். கபில் தேவ் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர். அவரைப் போன்ற ஒரு வீரரை இந்திய அணி இன்னும் கண்டுபிடிக்கவில்லை. சுனில் கவாஸ்கர் மிகச் சிறந்த பேட்ஸ்மேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை எடுத்த முதல் வீரர் அவர். சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் என்ற சாதனையைப் படைத்துள்ளனர். MS தோனி மூன்று ICC வெள்ளை பந்து கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் ஆவார். சச்சினைப் போலவே இவரது சாதனைப் பட்டியலும் மிகப் பெரியது.


அப்போது ரவி சாஸ்திரி பேசுகையில், நிச்சயமாக கவாஸ்கர், கபில், சச்சின், விராட் ஆகியோர் சிறந்த வீரர்கள். அந்தந்த காலக்கட்டத்தில் மிகவும் செல்வாக்கு செலுத்திய வீரர்களாக நான் பார்க்கிறேன். பிஷன் சிங் பேடியும் இருந்திருப்பார். ஆனால்... MS தோனியும் சிறந்த வீரர்தான். பும்ரா இன்னும் இளம் வீரர். அவர் இன்னும் நிறைய கிரிக்கெட் விளையாட இருக்கிறார். நான் கிரிக்கெட்டை முடித்த வீரர்களைப் பற்றி சொல்கிறேன். 70களில் சுனில் கவாஸ்கர், 80களில் கபில் தேவ், 90களில் சச்சின், தோனி மற்றும் விராட் ஆகியோர் சிறந்த வீரர்கள்.


கவாஸ்கர் பேட்டிங்கில் சிறந்தவர். கபில் ஒரு அற்புதமான வீரர். அவர் ஒரு முழுமையான தொகுப்பு. ஆனால், சச்சின் டெண்டுல்கர்தான் நம்பர் ஒன். ஏனென்றால், அவர் மீது இருந்த எதிர்பார்ப்பு அதிகம். அவர் 24 வருடங்கள் விளையாடினார். 100 சதங்கள் அடித்துள்ளார். வாசிம், வகார், இம்ரான் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களை அவர் எதிர்கொண்டார். பின்னர் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து பந்துவீச்சையும் சந்தித்தார். அவர் ஒரு சிறந்த டெக்னிக் கொண்ட வீரர் என்றார் ரவி சாஸ்திரி.


ரவி சாஸ்திரி இந்திய அணிக்காக 80 டெஸ்ட் போட்டிகளிலும், 150 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 3830 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 11 சதங்கள் அடங்கும். மேலும், 151 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 1985ல் இந்தியா உலக சாம்பியன்ஷிப் வென்றபோது, சாஸ்திரி தொடர் நாயகன் விருதை வென்றார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்