சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்.. ஆரஞ்சு அலர்ட் மட்டுமே.. ஹேப்பி அண்ணாச்சி!

Oct 16, 2024,10:03 PM IST

சென்னை : சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை மையம் வாபஸ் பெற்றுள்ளது. இதனால் சென்னை மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். ஆரஞ்சு அலர்ட் மட்டும் விடுக்கப்பட்டுள்ளது.  இதனால் மக்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.


தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை வெளுத்து வாங்கி வந்தது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான புதிய காற்றழுத்தம், பிறகு காற்றழுத்த மண்டலமாக மாறி, பிறகு வலுவடைந்தது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எனப்படும் மிக அதிக கனமழை எச்சரிக்கையும், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எனப்படும் அதிக கனமழை எச்சரிக்கையும் விடப்பட்டது.


ரெட் அலர்ட் வருவதற்கு முன்பிருந்தே சென்னையில் கனமழை பெய்து வந்தது. குறிப்பாக அக்டோபர் 14ம் தேதி இரவு துவங்கிய மழை, அக்டோபர் 16ம் தேதி காலை வரை நீடித்தது. இதனால் சென்னையில் பல பகுதிகள் நீரில் மூழ்கின. பால், பிரட், காய்கறிகள், குடி தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. பல பகுதிகளில் சுரங்க பாதைகளுக்குள் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதித்தது. சில பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வந்தனர். 




வங்கடக் கடலில் உருவாக காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுப்பெற்று புதுச்சேரி மற்றும் நெல்லூருக்கு இடையே அக்டோபர் 17ம் தேதி அதிகாலை கரையை கடக்கும் என வானிலை மையம் கூறி இருந்தது. ஆனால் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னைக்கு 15 கி.மீ., தொலைவிலேயே இருந்து வந்ததால் ரெட் அலர்ட் வாபஸ் பெறாமல் இருந்தது. 


இது சலசலப்பை ஏற்படுத்தியது. சுத்தமாக மழையே இல்லை. பிறகு ஏன் ரெட் அலர்ட் என்று பலரும் கேள்வி எழுப்பினர். முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த அலர்ட் என்று வானிலை மையம் கூறியிருந்தது. இந்நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதால் சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.


மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.  இதனால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். பெரிய அளவில் மழை இருக்காது என்று ஏற்கனவே தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருந்தது நினைவிருக்கலாம். 



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கனிமொழி தலைமையில்... திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைப்பு!

news

2026 ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

news

ஐபிஎஸ் 2026க்கு பிறகு தோனி ஓய்வா?...கிரிக்கெட் பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்

news

டெல்லியில் கட்டாயமாகிறது work from home...ஊழியர்கள் மகிழ்ச்சி

news

அமைதியாகவே இருந்தால் எப்படி? ஏதாவது சொல்லுங்க...விஜய்யை விளாசிய அண்ணாமலை

news

குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கலான சாந்தி மசோதா...காங்கிரஸ், திமுக கடும் எதிர்ப்பு

news

ஆஸ்கார் 2026 ஷார்ட்லிஸ்ட் வெளியானது...பட்டியலில் இடம்பிடித்த ஒரே ஒரு இந்திய படம்

news

விஜய் பேசக்கூடிய இடத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பாதுகாப்பு அரண் செய்யப்பட்டுள்ளன: செங்கோட்டையன்

news

True love has no expiry date.. உண்மைதானே.. காதலுக்கு எக்ஸ்பைரி வைக்க முடியுமா!!

அதிகம் பார்க்கும் செய்திகள்