புதுப் பொலிவு கண்ட "கலைஞர்" கருணாநிதி நினைவிடம்.. பிப்ரவரி 26ம் தேதி திறப்பு.. முதல்வர் அறிவிப்பு

Feb 22, 2024,07:25 PM IST

சென்னை: புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் மற்றும் கலைஞர் கருணாநிதி நினைவிடம் வருகின்ற 26ம் தேதி திறக்கப்பட உள்ளதாக சட்டசபையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


தமிழக அரசு சார்பில் 2.21 ஏக்கர் பரப்பளவில்  39 கோடி மதிப்பீட்டில் நவீனமான முறையில் இந்த நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் தற்பொழுது முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. இதனை அடுத்து வரும் 26 ஆம் தேதி கருணாநிதி நினைவிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.




தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி உடல் நலம் பாதிப்பால் காலமானார். இதை அடுத்து அவரது உடல், அண்ணா சமாதிக்குப் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் நினைவிடம் கட்ட 2021 ஆம் ஆண்டு தமிழக அரசு  சார்பில் நிதி ஓதுக்கப்பட்டது. இதையடுத்து 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ. 39 கோடியில் இந்த நினைவிடம் அமைக்கப்பட்டது. ஏற்கனவே இருந்த நினைவிடம் புனரமைக்கப்பட்டு வரும் திங்கட்கிழமை திறக்கப்படுகிறது.


பிப்ரவரி 26ஆம் தேதி இரவு 7 மணிக்கு கலைஞர் நினைவிடம் திறக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்,  நின்ற தொகுதிகளில் எல்லாம் வென்ற தலைவர். நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய தலைவர். கலைஞர் நினைவிடம் முழுமை அடைந்திருக்கிறது. அது மட்டுமல்ல கலைஞரை உருவாக்கிய நமது தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. 


புதுப்பிக்கப்பட்ட அண்ணாவின் நினைவிடமும் கலைஞரின் நினைவிடமும் வருகின்ற பிப்ரவரி 26ஆம் தேதி இரவு 7 மணிக்கு திறக்கப்பட உள்ளது. நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் அச்சிடப்படவில்லை. விழாவாக கொண்டாட விரும்பவில்லை. நிகழ்ச்சியாக நடத்த முடிவெடுத்துள்ளோம். ஆகவே நிகழ்ச்சிக்கு எதிர்க்கட்சி மற்றும் தோழமைக் கட்சி உட்பட எல்லா கட்சி உறுப்பினர்களும் வர வேண்டும் என்று சபாநாயகர் மூலம் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

"யாரைக் காப்பாற்ற இந்த அறிக்கை?" - வெள்ளை அறிக்கை பற்றி தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி

news

சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

news

"கட்சியாக மாறினால் வேற மாதிரி இருப்போம்".. 'We The Leaders' இயக்கம் குறித்து அண்ணாமலை

news

விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு...விரைவில் 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

news

டெலிகிராம் தடைக்கு எதிராக வழக்கு: மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து நிறுவனம் மனு!

news

டெலிகிராம் தடையால் 15 கோடி பயனாளர்கள் பாதிப்பு.. CEO பவெல் துரோவ் அதிருப்தி

news

பயிர்கடன் தள்ளுபடி அறிவிப்பிற்கு எதிர்ப்பு...ஜூன் 22-ல் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

news

கலையின் ஹைக்கூ கவிதைகள்!

news

ஆலோலம் பாட்டுக் கேட்குதே

அதிகம் பார்க்கும் செய்திகள்