செய்தித் தாள்களின் புரட்சி!

Jan 29, 2026,05:12 PM IST
- தி.மீரா

அச்சில் பிறந்த ஒவ்வொரு எழுத்தும்
அறிவின் விதையாக மண்ணில் விழுந்தது.
மௌனமாக இருந்த சமூகத்தை
சிந்திக்க வைத்த சத்தமற்ற சங்கு அது.

அரண்மனை கதவுகளுக்குள் மறைந்த
அதிகார உண்மைகளை வெளிக்கொணர்ந்தது.
பாமரனின் கையில் அறிவை கொடுத்து
பயத்தைப் புரட்டிப் போட்டது.



காகிதத்தில் பதிந்த செய்தி
காலத்தைத் தாண்டி பயணித்தது.
ஊர்க் குரலை உலகிற்கு சொல்லி
ஒற்றுமையின் பாலம் கட்டியது.

அடக்குமுறைக்கு எதிராக
எழுத்தே ஆயுதம் ஆனது.
ரத்தம் சிந்தாமல் நடந்த
புரட்சி  செய்தித் தாள் தான்.

தகவல் மட்டுமல்ல,
திசையும் தந்தது.
செய்தித் தாள் —
சமூகத்தை மாற்றிய
மௌனமான மகா புரட்சி

(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

செம்மொழியான தமிழ் மொழியே

news

தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருந்தால்!

news

இயற்கை நீதி!

news

பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்

news

ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை

news

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்

news

கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

news

டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு

news

சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்

அதிகம் பார்க்கும் செய்திகள்