செய்தித் தாள்களின் புரட்சி!

Jan 29, 2026,05:12 PM IST
- தி.மீரா

அச்சில் பிறந்த ஒவ்வொரு எழுத்தும்
அறிவின் விதையாக மண்ணில் விழுந்தது.
மௌனமாக இருந்த சமூகத்தை
சிந்திக்க வைத்த சத்தமற்ற சங்கு அது.

அரண்மனை கதவுகளுக்குள் மறைந்த
அதிகார உண்மைகளை வெளிக்கொணர்ந்தது.
பாமரனின் கையில் அறிவை கொடுத்து
பயத்தைப் புரட்டிப் போட்டது.



காகிதத்தில் பதிந்த செய்தி
காலத்தைத் தாண்டி பயணித்தது.
ஊர்க் குரலை உலகிற்கு சொல்லி
ஒற்றுமையின் பாலம் கட்டியது.

அடக்குமுறைக்கு எதிராக
எழுத்தே ஆயுதம் ஆனது.
ரத்தம் சிந்தாமல் நடந்த
புரட்சி  செய்தித் தாள் தான்.

தகவல் மட்டுமல்ல,
திசையும் தந்தது.
செய்தித் தாள் —
சமூகத்தை மாற்றிய
மௌனமான மகா புரட்சி

(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

news

National Vaccination Day.. குணப்படுத்துவதை விட தடுப்பதே சிறந்தது!

news

அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதி...பொது மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

news

பட்டு பட்டு... பட்டாம்பூச்சி.. பார்த்துப் பார்த்து ரசிச்சாலே.. மனதுக்கு மகிழ்ச்சி!

news

தேர்தல் 2026 ஓட்டு போட சொந்த ஊருக்கு போறீங்களா? இதை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க

news

அன்பு உயர்த்தும் மொழி .. ஆணவே அழிக்கும் மொழி!

news

நாங்கள் யாருடனும் கூட்டணி பற்றி பேசவில்லை..தவெக திட்டவட்டம்

news

முதல் நாளிலேயே ரூ.1.26 கோடி பறிமுதல்...தலைமைத் தேர்தல் அதிகாரி சொன்ன பகீர் தகவல்

news

சிபிஐ-க்கு விஜய் கடிதம்: விசாரணையை சென்னையில் நடத்த கோரிக்கை

அதிகம் பார்க்கும் செய்திகள்