செய்தித் தாள்களின் புரட்சி!

Jan 29, 2026,05:12 PM IST
- தி.மீரா

அச்சில் பிறந்த ஒவ்வொரு எழுத்தும்
அறிவின் விதையாக மண்ணில் விழுந்தது.
மௌனமாக இருந்த சமூகத்தை
சிந்திக்க வைத்த சத்தமற்ற சங்கு அது.

அரண்மனை கதவுகளுக்குள் மறைந்த
அதிகார உண்மைகளை வெளிக்கொணர்ந்தது.
பாமரனின் கையில் அறிவை கொடுத்து
பயத்தைப் புரட்டிப் போட்டது.



காகிதத்தில் பதிந்த செய்தி
காலத்தைத் தாண்டி பயணித்தது.
ஊர்க் குரலை உலகிற்கு சொல்லி
ஒற்றுமையின் பாலம் கட்டியது.

அடக்குமுறைக்கு எதிராக
எழுத்தே ஆயுதம் ஆனது.
ரத்தம் சிந்தாமல் நடந்த
புரட்சி  செய்தித் தாள் தான்.

தகவல் மட்டுமல்ல,
திசையும் தந்தது.
செய்தித் தாள் —
சமூகத்தை மாற்றிய
மௌனமான மகா புரட்சி

(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஓபிஎஸ்.,க்கு இடமில்லை...ஸ்டாலினுக்கு அனுபவமில்லை...விஜய் தலைவரே அல்ல...வெளுத்து வாங்கிய இபிஎஸ்

news

நான் ரெடி.. அருமை அண்ணன் இபிஎஸ்ஸுடன் பேச டிடிவி தினகரன் தயாரா.. ஓ.பி.எஸ். அதிரடி சவால்!

news

பிப்ரவரி 3ம் தேதி கூட்டணியை அறிவிக்கும் தேமுதிக.. யாருடன் இணைகிறது?

news

தமிழக வாக்காளர் பட்டியல் 2026...பெயர் சேர்க்க 10 நாட்கள் கால அவகாசம் நீட்டிப்பு

news

மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்... பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

news

முருக பக்தர்களுக்கு குட் நியூஸ்...தைப்பூசத்திற்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்

news

அக்கறையற்ற அமைச்சரின் பேச்சு... வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியதும்: எடப்பாடி பழனிச்சாமி

news

நெல்லை தொகுதியையும், என்னையும் பிரித்து பார்க்க முடியாது: நயினார் நாகேந்திரன்

news

டி20 உலகக் கோப்பை: இந்தியாவைப் புறக்கணிக்கும் முடிவில் பாகிஸ்தான் தீவிரம்?

அதிகம் பார்க்கும் செய்திகள்