லண்டன்: இங்கிலாந்துடன் டெஸ்ட் போட்டியில் அனல் பறக்க இந்தியா விளையாடிக் கொண்டுள்ள நிலையில் மறுபக்கம் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, தனது மனைவியுடன் அதே இங்கிலாந்தில் ஜாலியாக விடுமுறையைக் கழித்துக் கொண்டுள்ளார்.
இங்கிலாந்துக்கும், இந்தியாவுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக போய்க் கொண்டுள்ளது. முதல் டெஸ்ட்டை இங்கிலாந்தும், 2வது டெஸ்ட்டை இந்தியாவும் வென்ற நிலையில் தற்போது 3வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக போய்க் கொண்டுள்ளது.
இந்த நிலையில் டெஸ்ட் போட்டிக்கு குட்பை சொல்லி விட்ட முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா, தனது குடும்பத்துடன் இங்கிலாந்தில் ஜாலியாக விடுமுறையைக் கழித்து வருகிறார்.

ரோஹித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். லண்டனில் தனது மனைவி ரித்திகா சஜ்தேவுடன் சிம்பிளாக ஓய்வைக் கழிப்பது போன்ற புகைப்படத்தை அதில் போட்டுள்ளார். ரோஹித் சர்மாவின் இன்ஸ்டாகிராம் பதிவில், லண்டனின் கோடை வெயிலில் ஒரு பூங்காவில் உள்ள குன்றின் மீது அமர்ந்து அவர் ஓய்வெடுக்கும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
அதேபோல இன்னொரு படத்தில், ரோஹித் ஒரு ஊஞ்சலில் மகிழ்ச்சியுடன் படுத்துக்கொண்டு, விரல்களால் 'பீஸ் அவுட்' சைகை காட்டுவதாக உள்ளது.
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}