லண்டன்: இங்கிலாந்துடன் டெஸ்ட் போட்டியில் அனல் பறக்க இந்தியா விளையாடிக் கொண்டுள்ள நிலையில் மறுபக்கம் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, தனது மனைவியுடன் அதே இங்கிலாந்தில் ஜாலியாக விடுமுறையைக் கழித்துக் கொண்டுள்ளார்.
இங்கிலாந்துக்கும், இந்தியாவுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக போய்க் கொண்டுள்ளது. முதல் டெஸ்ட்டை இங்கிலாந்தும், 2வது டெஸ்ட்டை இந்தியாவும் வென்ற நிலையில் தற்போது 3வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக போய்க் கொண்டுள்ளது.
இந்த நிலையில் டெஸ்ட் போட்டிக்கு குட்பை சொல்லி விட்ட முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா, தனது குடும்பத்துடன் இங்கிலாந்தில் ஜாலியாக விடுமுறையைக் கழித்து வருகிறார்.

ரோஹித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். லண்டனில் தனது மனைவி ரித்திகா சஜ்தேவுடன் சிம்பிளாக ஓய்வைக் கழிப்பது போன்ற புகைப்படத்தை அதில் போட்டுள்ளார். ரோஹித் சர்மாவின் இன்ஸ்டாகிராம் பதிவில், லண்டனின் கோடை வெயிலில் ஒரு பூங்காவில் உள்ள குன்றின் மீது அமர்ந்து அவர் ஓய்வெடுக்கும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
அதேபோல இன்னொரு படத்தில், ரோஹித் ஒரு ஊஞ்சலில் மகிழ்ச்சியுடன் படுத்துக்கொண்டு, விரல்களால் 'பீஸ் அவுட்' சைகை காட்டுவதாக உள்ளது.
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}