பிரதமரை சந்தித்ததில்..எந்த அரசியலும் கிடையாது..அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்!

Mar 05, 2024,06:09 PM IST

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி-அமைச்சர் பி.டி. ஆர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு பேசு பொருளாகி உள்ள நிலையில், பிரதமரை சந்தித்ததில் எந்த அரசியலும் கிடையாது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.


கடந்த வாரம் இரண்டு நாள் பயணமாக தமிழகத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி முன்னதாக  பல்லடத்தில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இதனை அடுத்து மதுரைக்குச் சென்று அங்கு தொழில் முனைவோர் கூட்டத்தில் பங்கேற்ற பின் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து அன்று இரவு மதுரை பசுமலையில் உள்ள தாஜ் ஹோட்டலில் தங்கி இருந்தார். அப்போது அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், பிரதமர் மோடியை சந்தித்து பேசி உள்ளதாகவும், இந்த பேச்சு பத்து நிமிடம் நீடித்ததாகவும் சமூக வலைதளங்களில் பாஜகவினர் தகவல்கள் பரப்பி வந்ததனர்.




இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் தெரிவித்து கூறுகையில், அரசாங்கத்தை சிறப்பாக நடத்துவது என்பது சாதாரண பணி கிடையாது. அதெல்லாம் கடந்து தான் நாங்களும் முதல்வரும் பணி செய்து வருகிறோம். பிரதமருக்கும் எனக்கும் தனிப்பட்ட உறவு இருப்பது போல் செய்தி வந்துள்ளது. முதல்வர் கொடுத்த பணியை தான் நான் செய்தேன். அதனால்தான் மதுரைக்குச் சென்று பிரதமரை சந்தித்து வழி அனுப்பி வைத்தேன். அதில் எந்த அரசியலும் கிடையாது. அரசாங்க பணியை தான் நான் செய்தேன் என கூறியுள்ளார் .

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!

news

பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!

news

வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

news

மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!

news

திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!

news

ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!

news

Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!

news

சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!

news

Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்