சென்னை: பிரதமர் நரேந்திர மோடி-அமைச்சர் பி.டி. ஆர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு பேசு பொருளாகி உள்ள நிலையில், பிரதமரை சந்தித்ததில் எந்த அரசியலும் கிடையாது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த வாரம் இரண்டு நாள் பயணமாக தமிழகத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி முன்னதாக பல்லடத்தில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இதனை அடுத்து மதுரைக்குச் சென்று அங்கு தொழில் முனைவோர் கூட்டத்தில் பங்கேற்ற பின் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து அன்று இரவு மதுரை பசுமலையில் உள்ள தாஜ் ஹோட்டலில் தங்கி இருந்தார். அப்போது அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், பிரதமர் மோடியை சந்தித்து பேசி உள்ளதாகவும், இந்த பேச்சு பத்து நிமிடம் நீடித்ததாகவும் சமூக வலைதளங்களில் பாஜகவினர் தகவல்கள் பரப்பி வந்ததனர்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் தெரிவித்து கூறுகையில், அரசாங்கத்தை சிறப்பாக நடத்துவது என்பது சாதாரண பணி கிடையாது. அதெல்லாம் கடந்து தான் நாங்களும் முதல்வரும் பணி செய்து வருகிறோம். பிரதமருக்கும் எனக்கும் தனிப்பட்ட உறவு இருப்பது போல் செய்தி வந்துள்ளது. முதல்வர் கொடுத்த பணியை தான் நான் செய்தேன். அதனால்தான் மதுரைக்குச் சென்று பிரதமரை சந்தித்து வழி அனுப்பி வைத்தேன். அதில் எந்த அரசியலும் கிடையாது. அரசாங்க பணியை தான் நான் செய்தேன் என கூறியுள்ளார் .
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
தவெகவை முடக்க முயற்சிக்கிறார்கள்... எங்களுக்கு யாரும் நெருக்கடி கொடுக்க முடியாது... சிடிஆர் நிர்மல்
ICC ODI ranking: ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசையில்.. ரோஹித் சர்மா புதிய சாதனை!
வைரலானது.. ஜப்பானின் முதல் பெண் பிரதமரின் கைப்பை.. உள்ளூர் நிறுவனத்திற்கு கிராக்கி!
{{comments.comment}}