சென்னை: லேசான எலும்பு முறிவு காரணமாக எஞ்சிய ஐபிஎல் தொடர் போட்டிகளிலிருந்து விலகி உள்ள ருதுராஜ் கெய்க்வாட் உருக்கமான பதிவு ஒன்றே வெளியிட்டுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி உள்ளது.இதில் நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அது மட்டுமல்லாமல் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது.
இதற்கிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல் அணியுடன் மோதியது. அப்போது தேஜ் பாண்டேவின் பந்துவீச்சில் ருதுராஜ் கெய்க்வாடுக்கு எதிர்பாராத விதமாக முழங்கையில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் காயத்தை பொருட்படுத்தாமல் தொடர்ந்து டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் அவர் விளையாடினார். ஆனால் அவரது வலியின் தீவிரம் அதிகமாக இருப்பதால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

இந்த நிலையில் எலும்பு முறிவு காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார். இதனைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளவிங் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அதில் ருதுராஜ் கெய்க்வாடுக்கு பதிலாக சிஎஸ்கே அணியின் கேப்டனாக மீண்டும் தோனி அணியை வழிநடத்துவார் என அறிவித்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இரவு 7:30 மணிக்கு நடைபெறுகிறது. தோனி தலைமை ஏற்கும் இந்தப் போட்டி ரசிகர்களால் உற்று நோக்கப்படுகிறது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக பொறுப்பில் இருந்து விலகிய ருதுராஜ் உருக்கமான பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில் லேசான எலும்பு முறிவால் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்கவில்லை. ஆனால் வீரர்களுடன் தொடர்ந்து பயணித்து அவர்களை ஊக்கப்படுத்துவேன். கடந்த சில போட்டிகளில் நாங்கள் சிறப்பாக ஆடவில்லை. இளம் விக்கெட் கீப்பர் அணியை வழிநடத்த உள்ளதால் அனைத்தும் மாறும் என உறுதியாக நான் நம்புகிறேன்.
2025 ஆம் ஆண்டு
ஐபிஎல் தொடர் எங்களுக்கு சிறந்ததாக அமையும் என எதிர்பார்க்கிறேன். தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு மிக்க நன்றி என கூறியுள்ளார்.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}