சபரிமலை மண்டல பூஜை காலத்தில் ரூ.332.77 கோடி வருமானம்

Dec 29, 2025,05:31 PM IST

சபரிமலை : சபரிமலை மண்டல யாத்திரை காலத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவில் நிர்வாகமான திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு (TDB) தகவலின்படி, இந்த மண்டல யாத்திரையின் போது கோவில் வருவாய் ரூ.332.77 கோடியாக உயர்ந்துள்ளது.இது கடந்த ஆண்டை விட ரூ.35.7 கோடி அதிகம். இந்த யாத்திரையில் 30.56 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.


சபரிமலை கோவிலில் மண்டல யாத்திரை கடந்த சனிக்கிழமை இரவு நிறைவடைந்தது. இந்த யாத்திரையின் போது, தங்கக் கொள்ளை குறித்த சர்ச்சைகள் எழுந்தாலும், பக்தர்கள் கூட்டம் குறையவில்லை. அவர்கள் கோவிலுக்கு வந்து மனமுருகி சாமி தரிசனம் செய்து, தங்களால் இயன்ற காணிக்கைகளைச் செலுத்திச் சென்றனர். கோவில் நிர்வாகம், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு (TDB) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்த மண்டல யாத்திரையின் மொத்த வருவாய் ரூ.332.77 கோடியை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் மண்டல யாத்திரையின் வருவாயான ரூ.297.06 கோடியை விட அதிகமாகும்.




மண்டல பூஜை நிறைவடைந்த பிறகு சனிக்கிழமை இரவு 10 மணிக்கு 'ஹரிவரசனம்' பாடலுடன் கோவில் நடை சாத்தப்பட்டது. டிசம்பர் 30 ஆம் தேதி மாலை மகர விளக்கு திருவிழாவிற்காக கோவில் மீண்டும் திறக்கப்படும். TDB தலைவர் கே. ஜெயக்குமார் கூறுகையில், வெள்ளிக்கிழமை வரை ரூ.332,77,05,132 வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதில் காணிக்கை, அப்பம் மற்றும் அரவணை பிரசாத விற்பனை, அறை வாடகை, ஏல விற்பனை மூலம் கிடைத்த வருவாய் அடங்கும். உண்டியல் காணிக்கை மூலம் மட்டும் ரூ.83.17 கோடி வசூலாகியுள்ளது.


இந்த யாத்திரையில் இதுவரை 30.56 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்துள்ளனர். வெள்ளிக்கிழமை அன்று 37,521 பக்தர்கள் தரிசனம் செய்தனர். மண்டல பூஜை அன்று மதியம் 1 மணி வரை 17,818 பக்தர்கள் கோவிலை வந்தடைந்தனர். கடந்த ஆண்டு மண்டல காலத்தின் முடிவில் பக்தர்களின் எண்ணிக்கை 32.49 லட்சமாக இருந்தது.


TDB தலைவர் கே. ஜெயக்குமார் மேலும் கூறுகையில், உச்சகட்ட நாட்களில் கூட்டம் அதிகமாக இருந்தபோதிலும், தேவஸ்வம் போர்டு, காவல்துறை மற்றும் பல்வேறு துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட்டதால், திறப்பு நாளில் ஏற்பட்ட சிறு குழப்பத்தைத் தவிர, சீசன் முழுவதும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்தனர். கோவில் நடை சாத்தப்பட்ட பிறகு, அரவணை பிரசாத உற்பத்தி அதிகரிக்கப்படும். மகர விளக்கு திருவிழாவிற்காக கோவில் மீண்டும் திறக்கப்படும் போது, 12 லட்சம் டின் அரவணை கையிருப்பில் இருக்கும். ஒரு பக்தருக்கு 10 டின் என்ற வரம்பு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 20 ஆம் தேதிக்குப் பிறகு, கூடுதல் அரவணையை தபால் மூலம் அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்படும்.


மகர விளக்கு திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து பம்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் தேவஸ்வம் அமைச்சர் வி.என். வாசன் ஆய்வு செய்தார். புல்மேடு உள்ளிட்ட வனப்பகுதிகள் தொடர்பான பிரச்சனைகளை சமாளிக்க, டிசம்பர் 29 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் வனத்துறையுடன் மற்றொரு கூட்டம் நடைபெறும் என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

போராட்ட வாழ்க்கையை வெல்ல.. இறைவன் துணை நிற்பான்.. Pray Almighty God

news

குட்டி பயணம் தாங்க வாழ்க்கை.. மறக்காமல் அனுபவிங்க.. It is a short trip, enjoy it.!

news

தமிழ்நாட்டிலிருந்து மலேசியாவுக்கு.. From Tamil Nadu to Malaysian Skies

news

தமிழகத்தில் நாளை மறுநாள் கொட்டப் போகிறது மழை... வார்னிங் கொடுத்த வானிலை மையம்!

news

இவள் ஒரு தேவதை.. மறையாத மாமகள்.. A Little Angel "A Lifelong Legacy"

news

மதுரை சித்திரை திருவிழா 2026 எப்போது ? தேதி முழு விபரங்கள் இதோ

news

அகத்தி வேகாமல் கெட்டது முருங்கை வெந்து கெட்டது... உணவுப் பழக்கம் பழமொழி வடிவில்!

news

தமிழ்நாடு வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்

news

எது வேண்டும்.. யார் வேண்டும்.. சாய்ஸ் உங்கள் கையில்.. Choose Your Table

அதிகம் பார்க்கும் செய்திகள்