சொர்க்கமே என்றாலும் அது எங்கூரைப் போல வருமா.. வாக்கப்பட்ட மண்!

Dec 10, 2025,11:07 AM IST

- ஆ.வ. உமாதேவி


எனது ஊர் எனது பெருமை! 


இங்கு வீசும் காற்று தென்றலாய் இருக்கும். என்னை சுமக்கும் மண், மணம் வீசும். நான் குடிக்கும் நீர், என்னை வாழ வைக்கிறது. எனது ஊரின் பெருமையை நான் சொல்லாமல் வேறு யார் சொல்வார்? 


முருகனின் ஐந்தாம் படை வீடான "திருத்தணிகை" தான், நான் வாக்கப்பட்ட மண். இது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடமாகும். இங்கு சுற்றுலா தளங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இது ஒரு மலைக்கோயில் ஆகும். இங்குள்ள 365 படிகள் ஆண்டின் 365 நாட்களை குறிக்கின்றன.


முருகப்பெருமான் வள்ளியை திருமணம் செய்து கொண்ட தல மாகவும் கருதப்படுகிறது. அருணகிரிநாதர் பாடல் பெற்ற தலங்களில் இதுவும் ஒன்றாகும். சூரபத்மனை வதம் செய்த பிறகு முருகப்பெருமான் கோபம் தணிந்து அமர்ந்த தலமாகும். கோபம் தணிந்ததால் தான், திருத்தணிகை என பெயர் பெற்றது. பின்னாளில் மருவி, "திருத்தணி" என்றானது. இந்த இடம், மன அமைதி மற்றும் வாழ்வில் நிம்மதி வேண்டுபவர்களுக்கு மிகவும் முக்கியமான தலமாக கருதப்படுகிறது. இங்கு ஆடி கிருத்திகை விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆண்டிற்கு ஒருமுறை காணும் பொங்கல் அன்று முருகப்பெருமான் நம்மை காண கீழே வந்து, வீதி உலா வருவார். அன்று ஊர் முழுவதும் மிகவும் கொண்டாட்டமாக இருக்கும். 




அடுத்து டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் நினைவகம் நமது திருத்தணியில் உள்ளது. சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் ஆன டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த இடம் திருத்தணியில் தான் உள்ளது. அவர் படித்த தொடக்க, உயர்நிலைப்பள்ளி இன்றும் அவர் பெயரிலேயே சிறப்பாக இயங்குகின்றது. இவை நூற்றாண்டை கடந்த உன்னத பள்ளிகளாக செயல்படுகிறது. அவர் வாழ்ந்த வீடு, நூலகமாகவும் சிறார் காப்பகமாகவும் செயல்படுகிறது. அவருடைய வீடு அமைந்துள்ள தெருவுக்கு "டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரு" என்று பெயரிடப்பட்டுள்ளது. 


திருத்தணி நந்தி ஆற்றங்கரையில் மிக மிகப் பழமையான விராட் டேசுவரர்   கோவில் அமைந்துள்ளது. இங்கு பிரதோஷ வழிபாடும் அன்னாபிஷேகமும் மிகச் சிறப்பாக நடைபெறும். திருத்தணியை சுற்றிலும் பல கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள சிவன் கோயில்கள் மிகவும் பழமையானவை. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தவை. திருத்தணியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் முருக்கம்பட்டு கிராமம் உள்ளது. இங்குள்ள சிவன் கோயில் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பழமை உடையது. 


முருகன், தன் தந்தையைக் காண, தன் கால்களால் நடந்து வந்ததாக, தலபுராணம் கூறுகிறது. எனவே தான் இவ்வூருக்கு "முருகனது திருவடிப்பட்டு" என பெயர் வந்தது. காலப்போக்கில் மருவி "முருக்கம்பட்டு" என்று ஆகிவிட்டது. இவ்வளவு பெருமைமிகு ஊரில் நான், ஆசிரியராக பணிபுரிவது நான் பெற்ற பாக்கியமே.. மறக்காம எங்க ஊருக்கு வாங்க.. முருகன் அருள் பெற்றுச் செல்லுங்கள்.


(ஆ.வ. உமாதேவி, இடைநிலை ஆசிரியர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனியைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணியாற்றுகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Crab.. வீட்டுக்கு நண்டு வந்தா நல்லதா கெட்டதா?.. வாங்க தெரிஞ்சுக்கலாம்!

news

சொர்க்கமே என்றாலும் அது எங்கூரைப் போல வருமா.. வாக்கப்பட்ட மண்!

news

சட்டசபை அலங்கார முகப்புடன் அ.தி.மு.க பொதுக்குழு.. 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன!

news

Quick Tips: சப்பாத்தியை பல்லு இல்லாத தாத்தாவும் சாப்பிடுவாரு இப்படி தந்தா!

news

திருமுக்கீச்சரம் என்ற உறையூர்.. தேவாரத் திருத்தலங்கள் (2)

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 10, 2025... இன்று நினைத்தது நிறைவேறும்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்