சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல பூஜை காலத்தின் போது கிடைத்த காணிக்கை மற்றும் பிரசாத விற்பனை மூலம் கிடைத்த வருமானம் ஆகியவற்றின் விபத்தை திருவிதாங்கூர் தேவசம் போர்டு வெளியிட்டுள்ளது.
தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் வெளியிட்டுள்ள தகவலில், இந்த ஆண்டு டிசம்பர் 15 ம் தேதி துவங்கி டிசம்பர்26ம் தேதி வரையிலான 41 நாட்கள் நடைபெற்ற மண்டல கால பூஜையின் போது கோவிலுக்கு ரூ.297 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டு மண்டல கால பூஜையின் போது கிடைத்த வருமானத்தை விட ரூ.82 கோடி அதிகமாகுமாகும். கடந்த ஆண்டு இதே நேரத்தில் ரூ.215 கோடி மட்டுமே வருமானமாக கிடைத்திருந்தது.

அதே போல் அரவணை பாயசம், அப்பம் போன்ற பிரசாத விற்பனை மூலமாக கிடைத்த வருமானமும் கடந்த ஆண்டை விட ரூ.22 கோடி அதிகம். மண்டல பூஜை காலத்தின் போது மொத்தமாக 32 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இத கடந்த ஆண்டை விட 4 லட்சம் அதிகமாகும். கடந்த ஆண்டு மண்டல கால பூஜையின் போது 28 பேர் மட்டுமே சாமி தரிசனம் செய்திருந்தனர் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது டிசம்பர் 30ம் தேதி துவங்கி மகரவிளக்கு பூஜைகள் நடைபெற்று வருகிறது. ஜனவரி 19 ம் தேதி மட்டுமே பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்பதால் சபரிமலையில் கட்டுக்கடங்காமல் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த பல புதிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது தினசரி ஆன்லைன் புக்கிங் மூலம் வரும் 60,000 பேர் மற்றும் ஸ்பாட் புக்கிங் மூலம் வரும் 10,000 பக்தர்கள் என தினமும் 70,000 பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகரஜோதி தரிசனத்தின் மேலும் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் ஜனவரி 12ம் தேதி முதல் ஜனவரி 14 வரை தினசரி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தவெக ஆட்சியமைப்பது உறுதியானது.. தொடங்குகிறது விஜய் சகாப்தம்!
தமிழகத்தில் ஆட்சி அமைக்க முயற்சி செய்யவில்லை.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
பிளஸ்டூ தேர்வு முடிவுகள்: ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகளில் அசத்தலான தேர்ச்சி விகிதம்!
ஆட்சியமைப்பதில் சிக்கல்.. இப்போது கூட விஜய் பேசாமல் இருப்பது ஏன்.. என்னதான் பிரச்சினை?
நல்லதே நடக்கும்.. ஒரு நிமிடக் கதை (8)
மாணிக்க மகனே மரகத செல்வா.. மகனுக்கு ஓர் மடல்!
மே 1ம் தேதி மட்டுமல்ல.. எப்போதுமே கொண்டாடுவோம் தொழிலாளர்களை!
எண்ணங்களை நிறுத்துவது எப்படி? (How to Stop Thoughts?)
சென்னை ஹஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி +2 பொதுத்தேர்வில் 98.10% தேர்ச்சி!
{{comments.comment}}