சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல பூஜை காலத்தின் போது கிடைத்த காணிக்கை மற்றும் பிரசாத விற்பனை மூலம் கிடைத்த வருமானம் ஆகியவற்றின் விபத்தை திருவிதாங்கூர் தேவசம் போர்டு வெளியிட்டுள்ளது.
தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் வெளியிட்டுள்ள தகவலில், இந்த ஆண்டு டிசம்பர் 15 ம் தேதி துவங்கி டிசம்பர்26ம் தேதி வரையிலான 41 நாட்கள் நடைபெற்ற மண்டல கால பூஜையின் போது கோவிலுக்கு ரூ.297 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டு மண்டல கால பூஜையின் போது கிடைத்த வருமானத்தை விட ரூ.82 கோடி அதிகமாகுமாகும். கடந்த ஆண்டு இதே நேரத்தில் ரூ.215 கோடி மட்டுமே வருமானமாக கிடைத்திருந்தது.

அதே போல் அரவணை பாயசம், அப்பம் போன்ற பிரசாத விற்பனை மூலமாக கிடைத்த வருமானமும் கடந்த ஆண்டை விட ரூ.22 கோடி அதிகம். மண்டல பூஜை காலத்தின் போது மொத்தமாக 32 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இத கடந்த ஆண்டை விட 4 லட்சம் அதிகமாகும். கடந்த ஆண்டு மண்டல கால பூஜையின் போது 28 பேர் மட்டுமே சாமி தரிசனம் செய்திருந்தனர் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது டிசம்பர் 30ம் தேதி துவங்கி மகரவிளக்கு பூஜைகள் நடைபெற்று வருகிறது. ஜனவரி 19 ம் தேதி மட்டுமே பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்பதால் சபரிமலையில் கட்டுக்கடங்காமல் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த பல புதிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது தினசரி ஆன்லைன் புக்கிங் மூலம் வரும் 60,000 பேர் மற்றும் ஸ்பாட் புக்கிங் மூலம் வரும் 10,000 பக்தர்கள் என தினமும் 70,000 பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகரஜோதி தரிசனத்தின் மேலும் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் ஜனவரி 12ம் தேதி முதல் ஜனவரி 14 வரை தினசரி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் SIR... நவ 2ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நெருங்கும் மோன்தா புயல்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து விஜய் ஆறுதல்!
மழையினால் சரக்குந்துகளிலேயே முளைத்த 36,000 நெல் மூட்டைகள்..திமுக அரசின் புதிய சாதனை:அன்புமணி ராமதாஸ்
பொய்கள் மூலம் திசைதிருப்ப முயற்சிக்க வேண்டாம்..தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர்:நயினார்
நடித்தாலே நாட்டை ஆளக் கூடிய அனைத்து திறமையும் வந்து விடுகிறது... இது ரொம்ப கொடுமையானது: சீமான்!
கல்வி மறுக்கப்பட்டோர் இன்று உயர் பதவிகளில் இருப்பதற்கு காரணம் திமுக தான் : முதல்வர் முக ஸ்டாலின்!
மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்.. சீமான் கண்டனம்
ராகுல்காந்தி என் மீது காட்டும் அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}