சபரிமலையில் குவியும் காணிக்கை...41 நாளில் வருமானம் எவ்வளவு தெரியுமா?

Jan 04, 2025,07:12 PM IST

சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல பூஜை காலத்தின் போது கிடைத்த காணிக்கை மற்றும் பிரசாத விற்பனை மூலம் கிடைத்த வருமானம் ஆகியவற்றின் விபத்தை திருவிதாங்கூர் தேவசம் போர்டு வெளியிட்டுள்ளது.


தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் வெளியிட்டுள்ள தகவலில், இந்த ஆண்டு டிசம்பர் 15 ம் தேதி துவங்கி டிசம்பர்26ம் தேதி வரையிலான 41 நாட்கள் நடைபெற்ற மண்டல கால பூஜையின் போது கோவிலுக்கு ரூ.297 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டு மண்டல கால பூஜையின் போது கிடைத்த வருமானத்தை விட ரூ.82 கோடி அதிகமாகுமாகும். கடந்த ஆண்டு இதே நேரத்தில் ரூ.215 கோடி மட்டுமே வருமானமாக கிடைத்திருந்தது. 




அதே போல் அரவணை பாயசம், அப்பம் போன்ற பிரசாத விற்பனை மூலமாக கிடைத்த வருமானமும் கடந்த ஆண்டை விட ரூ.22 கோடி அதிகம். மண்டல பூஜை காலத்தின் போது மொத்தமாக 32 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இத கடந்த ஆண்டை விட 4 லட்சம் அதிகமாகும். கடந்த ஆண்டு மண்டல கால பூஜையின் போது 28 பேர் மட்டுமே சாமி தரிசனம் செய்திருந்தனர் என தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் தற்போது டிசம்பர் 30ம் தேதி துவங்கி மகரவிளக்கு பூஜைகள் நடைபெற்று வருகிறது. ஜனவரி 19 ம் தேதி மட்டுமே பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்பதால் சபரிமலையில் கட்டுக்கடங்காமல் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த பல புதிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது தினசரி ஆன்லைன் புக்கிங் மூலம் வரும் 60,000 பேர் மற்றும் ஸ்பாட் புக்கிங் மூலம் வரும் 10,000 பக்தர்கள் என தினமும் 70,000 பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகரஜோதி தரிசனத்தின் மேலும் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் ஜனவரி 12ம் தேதி முதல் ஜனவரி 14 வரை தினசரி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்