சபரிமலையில் செம கூட்டம்.. ஸ்பாட் புக்கிங்கை நிறுத்தியது தேவஸ்தானம்.. ஜனவரி 15 வரை கிடையாது!

Jan 02, 2024,04:47 PM IST

திருவனந்தபுரம்: சபரிமலையில் கடும் கூட்ட நெரிசல் நிலவி வருவதாலும், கூட்டம் அதிகரித்து வருவதாலும், ஜனவரி  10ம் தேதி முதல் ஸ்பார்ட் புக்கிங் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.


சபரிமலையில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை மிகவும் பிரசித்தி பெற்றவை ஆகும். இது ஆண்டு தோறும் கார்த்திகை மாதம்  முதல்  தேதி தொடங்கி 60 நாட்கள் நடைபெறும். இங்கு நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். 


மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து 41 நாட்களாக சாமி தரிசனம் செய்து வந்தனர். வருடாந்திர மண்டல பூஜை கடந்த மாதம் நிறைவடைந்தது. இதனைத்  தொடர்ந்து கடந்த 27ம் தேதி இரவு 10 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் நடை சாத்தப்பட்டது.




இந்த நிலையில் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை கடந்த டிசம்பர் 30ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. வரும் 15ஆம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. இந்த மகரஜோதி விழாவிற்கு கூட்டம் அதிகமாக வரும் என்பதால் கோயில் நிர்வாகம் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மண்டல பூஜை சமயத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேவஸ்தனம் போர்டு செய்து வருகிறது. 


அதன் ஒரு நடவடிக்கையாக ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு குறைக்கப்பட்டுள்ளது.  ஜனவரி 15ம் தேதி வரை ஆன்லைன் டிக்கெட் மூலம் 80 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், ஜனவரி 14,15ம் தேதிகளில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைன் முன்பதிவு ஐம்பதாயிரம் ஆகவும், ஸ்பாட் புக்கிங் 10 ஆயிரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்பாட் புக்கிங்  வரும் 10ம் தேதியுடன் நிறுத்தப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 


பூஜை நிறைவடைந்த பின்னர் 20ம் தேதி காலை 7 மணிக்கு மீண்டும் நடை சாத்தப்படும் என்று தெரியப்படுத்தப்பட்டுள்ளது

சமீபத்திய செய்திகள்

news

மூத்த தலைவர்களைத் தேடிச் சென்று சந்திக்கும் விஜய்.. தமிழகத்தில் உருவாகும் புதிய அரசியல் டிரெண்ட்

news

JCD Prabhakar: தமிழகத்தின் புதிய சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் தேர்வு.. துணை சபாநாயகரானார் விஜய் சங்கர்

news

தமிழ்நாட்டின் 17-ஆவது சட்டசபை கூடியது.. உளமார உறுதிமொழி எடுத்த முதல்வர் விஜய்

news

N Anand: புஸ்ஸி ஆனந்த்.. இதுவரை வென்றது 2 முறை.. இரண்டு முறையும் வென்றது யாரைத் தெரியுமா?

news

'உளமாற உறுதி ஏற்கிறேன்' இந்த சொல்லின் வரலாறு தெரியுமா?

news

சிந்தனைச் சிதறல்.. ஆணவம் அறிய விடாமல் நம்மைக் கெடுக்கும்

news

Proverb: தாயைப் பார்த்து பெண்ணை கொள், பாலை பார்த்து பசுவைக் கொள்!

news

ஆசையில பாத்திகட்டி!

news

நிதானம்

அதிகம் பார்க்கும் செய்திகள்