மாசி அமாவாசை.. சேலத்தில் களை கட்டிய பிரபலமான மயானக் கொள்ளை!

Feb 27, 2025,11:43 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


மாசி மாதம் அமாவாசை வந்து விட்டாலே.. சேலத்தில் உள்ள அங்காளம்மன் கோவில் களை கட்டிக் காணப்படும். அங்கு நடைபெறும் மயான கொள்ளை மிகவும் பிரசித்தமானது. ஆயிரக்கணக்கில் மக்கள் இங்கு கூடி அம்மனை வழிபடுவார்கள்.


பிப்ரவரி 27 ,2025 வியாழக்கிழமை ,மாசி மாத அமாவாசை நாளாகும். இந்த அமாவாசை நாளில் மயான கொள்ளை நிகழ்ச்சி சேலத்தில் அங்காளம்மன் கோவிலில் மிகவும் பிரபலமானது.


இந்த மயான கொள்ளை நிகழ்ச்சி பொதுவாக அம்மன் கோயில்களுக்கு அருகில் உள்ள மயானங்களில் நடைபெறுவது முக்கிய சிறப்பம்சமாகும். இது அங்காளம்மன் சக்தியின் ஒரு வெளிப்பாடாகவும் மயானத்தின் சக்தி அடக்குவதாகவும் கருதப்படுகிறது. பக்தர்கள் அவரவர்களுடைய பிரார்த்தனைகளை நிறைவேற்றும் ஒரு வழிபாடாகவும் கொண்டாடப்படுகிறது.




சேலம் டவுன் தேர் வீதி பெரிய அங்காளம்மன் கோவிலில் சாமி சிலைகள் அலங்காரம் செய்து சாமி சிலைகளுக்கு முன்னால் பக்தர்கள் காளி, சிவபெருமான், அங்காளம்மன் போன்று பல்வேறு சாமிகள் போல வேடமிட்டு மேளதாளம் முழங்க நடனம் ஆடுவர். இதுபோலவே ஒவ்வொரு பகுதியிலும் உள்ள காளியம்மன், பெரியாண்டிச்சி அம்மன் கோவில்களில் இருந்து ஊர்வலமாக மயானங்களுக்கு வரும் பக்தர்கள் அங்கு சிறப்பு பூஜை செய்து வழிபடுவர். 


சேலம் டவுன் தேர் வீதி பெரிய அங்காளம்மன் கோவில்  ,அம்மாபேட்டை அங்காளம்மன் கோவில், ஜான்சன் பேட்டை அங்காளம்மன் கோவில், வின்சென்ட் அங்காளம்மன் கோவில் ,நாராயண நகர் ஏரிக்கரை அங்காள பரமேஸ்வரி கோவில், கிச்சிபாளையம் அங்காள பரமேஸ்வரி கோவில், ஆண்டிப்பட்டியில் உள்ள அங்காளம்மன் கோவில் மற்றும் மாநகரில் உள்ள மாரியம்மன் ,காளியம்மன் கோவில்களில் இருந்து சாமி சிலைகள் ஊர்வலம் வருவது வழக்கம்.


ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இன்னும் சில பக்தர்கள் கோழியை வாயில்  கவ்வியபடி அதன் ரத்தத்தை குடித்தவாறு ஆடிக்கொண்டே சுடுகாடு நோக்கி செல்வார்கள். அப்படி ஆடிக் கொண்டு வரும் சாமி ஆடிகள் பாதையில் பக்தர்கள் கீழே தரையில் படுத்து கொள்வார்கள் .அவர்கள் அதை தாண்டி வரும்பொழுது அவர்களுடைய வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.


குழந்தை வரம் வேண்டுபவர்கள், திருமண தோஷம் இருப்பவர்கள், தீராத நோய் நொடிகள் இருப்பவர்கள் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.  அப்போது ஆக்ரோஷத்துடன் ஆடும் பக்தர்கள் அங்கு கூடியிருந்த பொது மக்களுக்கு விபூதி கொடுத்து ஆசி வழங்குவார். இதனைக் காண பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து மயான கொள்ளை நிகழ்ச்சியை கண்டு களிப்பார்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல சில உள்ளங்களை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

news

ஜூன் 21, 22 சென்னை எழும்பூர் டூ திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

news

22ம் தேதி முருகனை கையில் எடுப்பது போல் 2026ல் தமிழகத்தை கையில் எடுப்போம்: நயினார் நாகேந்திரன்

news

சுப்ரீம் கோர்ட்டே சொல்லிடுச்சு... தமிழ்த் திரையுலகுக்கு புதுத் தெம்பு.. கமல்ஹாசனின் ரியல் Thuglife

news

கமல்ஹாசனை எப்படி மன்னிப்பு கேட்கச் சொல்லலாம்.. தக்லைபுக்கு தடை இல்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி

news

காவிரி நதிநீர் பற்றி பேச பொம்மை முதல்வருக்கு துளியும் அருகதை இல்லை: எடப்பாடி பழனிச்சாமி!

news

வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.840 குறைவு!

news

சிறுவன் கடத்தல் வழக்கு: கைது செய்யப்பட்டுள்ள ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட்

news

4 ராசிகளில் நீங்களும் ஒருவரா?..2025ல் பெரிய கோடீஸ்வரரா ஆய்ருவீங்களாம்ய்யா..பாபா வங்காவே சொல்லிட்டாரு

அதிகம் பார்க்கும் செய்திகள்