- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: சிறு தானியங்களை இப்போது நமது வீடுகளில் மக்கள் அதிக அளவில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இது நல்ல விஷயம்தான். அந்த வகையில் நாமும் கூட இப்போது ஒரு சிறு தானிய உணவைத்தான் பார்க்கப் போகிறோம்.
அதாங்க சாமை பொங்கல்..எப்படி இதை செய்யலாம் என்பது குறித்துப் பார்ப்போம். நாளைக்கு செய்து சாப்பிட்டுப் பார்த்துட்டு சொல்லுங்க.. செம டேஸ்ட்டா இருக்கும்.. தொடர்ந்து பயன்படுத்துங்க. ஹெல்த்துக்கும் நல்லது.
தேவையான பொருட்கள்

சாமை அரிசி - ஒரு கப்
பாசிப்பருப்பு - ஒரு கப் (இரண்டையும் லேசாக வறுத்து கழுவிக் கொள்ளவும்)
சீரகம் - ஒரு ஸ்பூன்
மிளகு - ஒரு ஸ்பூன்
இஞ்சி அண்ட் பூண்டு - ஒரு ஸ்பூன் கட் செய்தது பொடியாக
நெய் - 2 ஸ்பூன்
கருவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
முந்திரி - 10
சாமை அண்ட் பாசிப்பருப்பு அதற்கு நான்கரை (அதாவது 4கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் வைக்கவும் அளவுக்கு ஒரே கப் எடுத்துக் கொள்ளவும்
செய்முறை
1. சீரகம் மிளகு லேசாக வறுத்து கொண்டு அதில் சேர்க்கவும்
2. கருவேப்பிலை கொஞ்சம் சேர்க்கவும்
3. இஞ்சி பூண்டு உப்பு சேர்த்து நான்கு விசில் விடவும் கமகம சாமை பொங்கல் ரெடி
4. ஒரு கொதி வர வேண்டும்
5. குக்கரில் விசில் அடங்கியதும் நெய் ஊற்றி முந்திரி வறுத்து பொங்கல் உடன் சேர்க்கவும்
வெண்பூசணி சாம்பாருடன் சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும். தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் நாளை சாம்பாருடைய ரெசிபி வரும்
பயன்கள்
1. எலும்புகளுக்கு நல்ல ஊட்டம் கொடுக்கும்
2. எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நல்ல பலன்
3. லிட்டில் மில்லட்னு இத சொல்லுவாங்க
4. இயற்கையான சுண்ணாம்பு சத்து இருக்கிறது
5. புரதச்சத்து கொழுப்புச்சத்து தாது உப்புகள் மக்னீசியம் சோடியம் மாவுச்சத்து கால்சியம் இரும்புச்சத்து நிறைந்தது
6. அதிக நார்ச்சத்து உள்ளதால் சர்க்கரை அளவு சீராகும்
7. மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது
8. உடலுக்கு நன்மை தரும் கொழுப்பு இருப்பதால் இதயம் சம்பந்தமான நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும்
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
சிந்தனைச் சிதறல்.. நாளைய வளர்ச்சியின் அடிநாதமாய் அமைவது எது தெரியுமா?
Heritage day.. தமிழ்ப் பாரம்பரியத்தைப் போற்றுவோம்.. கொண்டாடுவோம்!
{{comments.comment}}