தெலுங்கு திரையுலகிலும் பாலியல் தொல்லை... பாதுகாப்பான சூழல் தேவை.. அறிக்கை கேட்கும் சமந்தா

Aug 31, 2024,01:44 PM IST

ஹைதராபாத் :   மலையாளத்தை போல் தெலுங்கு திரையுலகிலும் நடக்கும் பாலியல் தொல்லை தொடர்பான விசாரணை அறிக்கையையும் வெளியிட்டு, பாதுகாப்பான பணி சூழல் அமைத்து தர வேண்டும் என தெலுங்கானா அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார் நடிகை சமந்தா. 


மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து நீதிபதி ஹேமா விசாரணை அறிக்கையை வெளியிட்டிருந்தார். இதில் பெண்களுக்கு பாலியல் தொல்லை நடப்பது உண்மை தான் என அம்பலப்படுத்தி இருந்தார். இதனையடுத்து மலையாள திரையுலகை சேர்ந்த நடிகர் ஜெயசூர்யா உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து மலையாள நடிகைகள் பலரும் தாங்களும் இது போல் தொல்லைகளை அனுபவித்து பாதிக்கப்பட்டிருப்பதாக தொடர்ந்து புகார் அளிக்க துவங்கினர். 




நடிகர் பலர் மீது பாலியல் புகார்கள் அளிக்கப்பட்டதால் மலையாள நடிகர் சங்கமான அம்மா கலைக்கப்பட்டது. அடுத்தடுத்த பாலியல் புகார்களால் மலையாள திரையுலகில் பெரும் புயல் வீசி வருகிறது. இந்நிலையில் நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கையை பாராட்டி நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் முக்கிய பதிவு ஒன்றை வைத்துள்ளார். அதில், தெலுங்கு திரையுலகை சேர்ந்த பெண்களாகிய நாங்கள் ஹேமா கமிட்டியின் அறிக்கையை வரவேற்கிறோம். கேரளாவை போல் தெலுங்கு திரையுலகில் பெண்களுக்கு ஆதரவாக வாய்ஸ் ஆஃப் வுமன் அமைப்பு 2019ல் உருவாக்கப்பட்டது.


மலையாள சினிமாவை போல் தெலுங்கு திரையுலகிலும் நடக்கும் பாலியல் தொல்லை தொடர்பான விசாரணை குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும் என தெலுங்கானா அரசிடம் கோரிக்கை வைக்கிறோம். இந்த அறிக்கையை வெளியிடுவதன் மூலமாக பெண்களுக்கு பாதுகாப்பான பணிச் சூழல் அமையும் என சமந்தா குறிப்பிட்டுள்ளார்.  இதேபோல நடிகை அமலாவும் கூட பாதுகாப்பான பணிச் சூழலை தெலங்கானா அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகைகள் சிலரும் மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் தொல்லைகளுக்காக குரல் கொடுத்து வருவதால் மலையாளம், தெலுங்கை தொடர்ந்து தமிழிலும் இதே போன்ற பிரச்சனை எழுவதற்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்