ஹைதராபாத் : மலையாளத்தை போல் தெலுங்கு திரையுலகிலும் நடக்கும் பாலியல் தொல்லை தொடர்பான விசாரணை அறிக்கையையும் வெளியிட்டு, பாதுகாப்பான பணி சூழல் அமைத்து தர வேண்டும் என தெலுங்கானா அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார் நடிகை சமந்தா.
மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து நீதிபதி ஹேமா விசாரணை அறிக்கையை வெளியிட்டிருந்தார். இதில் பெண்களுக்கு பாலியல் தொல்லை நடப்பது உண்மை தான் என அம்பலப்படுத்தி இருந்தார். இதனையடுத்து மலையாள திரையுலகை சேர்ந்த நடிகர் ஜெயசூர்யா உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து மலையாள நடிகைகள் பலரும் தாங்களும் இது போல் தொல்லைகளை அனுபவித்து பாதிக்கப்பட்டிருப்பதாக தொடர்ந்து புகார் அளிக்க துவங்கினர்.
நடிகர் பலர் மீது பாலியல் புகார்கள் அளிக்கப்பட்டதால் மலையாள நடிகர் சங்கமான அம்மா கலைக்கப்பட்டது. அடுத்தடுத்த பாலியல் புகார்களால் மலையாள திரையுலகில் பெரும் புயல் வீசி வருகிறது. இந்நிலையில் நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கையை பாராட்டி நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் முக்கிய பதிவு ஒன்றை வைத்துள்ளார். அதில், தெலுங்கு திரையுலகை சேர்ந்த பெண்களாகிய நாங்கள் ஹேமா கமிட்டியின் அறிக்கையை வரவேற்கிறோம். கேரளாவை போல் தெலுங்கு திரையுலகில் பெண்களுக்கு ஆதரவாக வாய்ஸ் ஆஃப் வுமன் அமைப்பு 2019ல் உருவாக்கப்பட்டது.
மலையாள சினிமாவை போல் தெலுங்கு திரையுலகிலும் நடக்கும் பாலியல் தொல்லை தொடர்பான விசாரணை குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும் என தெலுங்கானா அரசிடம் கோரிக்கை வைக்கிறோம். இந்த அறிக்கையை வெளியிடுவதன் மூலமாக பெண்களுக்கு பாதுகாப்பான பணிச் சூழல் அமையும் என சமந்தா குறிப்பிட்டுள்ளார். இதேபோல நடிகை அமலாவும் கூட பாதுகாப்பான பணிச் சூழலை தெலங்கானா அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகைகள் சிலரும் மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் தொல்லைகளுக்காக குரல் கொடுத்து வருவதால் மலையாளம், தெலுங்கை தொடர்ந்து தமிழிலும் இதே போன்ற பிரச்சனை எழுவதற்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!
35 புதிய கல்லூரிகள் புதிதாக திறந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்
ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்!
தவெக.,வில் இணைந்த அதிமுக, திமுக முன்னாள் எம்எல்ஏ.,க்கள்.. விஜய் தரும் மெசேஜ் என்ன?
IRS அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பதவி: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
Out Of Controlலில் இருக்கும் பாலியல் SIRகளை Control செய்யவது எப்போது?: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி
தவெகவுடன் கூட்டணி குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்... கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது; பிரேமலதா
இன்று வைகாசி விசாகம் 2025 : முருகனுக்கு இந்த நைவேத்தியம் படைத்தால் வாழ்க்கையே மாறும்
ராஜமெளலி படத்தில் இணைந்த மாதவன்.. என்ன ரோல் தெரியுமா?
{{comments.comment}}