ஹைதராபாத் : மலையாளத்தை போல் தெலுங்கு திரையுலகிலும் நடக்கும் பாலியல் தொல்லை தொடர்பான விசாரணை அறிக்கையையும் வெளியிட்டு, பாதுகாப்பான பணி சூழல் அமைத்து தர வேண்டும் என தெலுங்கானா அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார் நடிகை சமந்தா.
மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து நீதிபதி ஹேமா விசாரணை அறிக்கையை வெளியிட்டிருந்தார். இதில் பெண்களுக்கு பாலியல் தொல்லை நடப்பது உண்மை தான் என அம்பலப்படுத்தி இருந்தார். இதனையடுத்து மலையாள திரையுலகை சேர்ந்த நடிகர் ஜெயசூர்யா உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து மலையாள நடிகைகள் பலரும் தாங்களும் இது போல் தொல்லைகளை அனுபவித்து பாதிக்கப்பட்டிருப்பதாக தொடர்ந்து புகார் அளிக்க துவங்கினர்.
நடிகர் பலர் மீது பாலியல் புகார்கள் அளிக்கப்பட்டதால் மலையாள நடிகர் சங்கமான அம்மா கலைக்கப்பட்டது. அடுத்தடுத்த பாலியல் புகார்களால் மலையாள திரையுலகில் பெரும் புயல் வீசி வருகிறது. இந்நிலையில் நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கையை பாராட்டி நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் முக்கிய பதிவு ஒன்றை வைத்துள்ளார். அதில், தெலுங்கு திரையுலகை சேர்ந்த பெண்களாகிய நாங்கள் ஹேமா கமிட்டியின் அறிக்கையை வரவேற்கிறோம். கேரளாவை போல் தெலுங்கு திரையுலகில் பெண்களுக்கு ஆதரவாக வாய்ஸ் ஆஃப் வுமன் அமைப்பு 2019ல் உருவாக்கப்பட்டது.
மலையாள சினிமாவை போல் தெலுங்கு திரையுலகிலும் நடக்கும் பாலியல் தொல்லை தொடர்பான விசாரணை குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும் என தெலுங்கானா அரசிடம் கோரிக்கை வைக்கிறோம். இந்த அறிக்கையை வெளியிடுவதன் மூலமாக பெண்களுக்கு பாதுகாப்பான பணிச் சூழல் அமையும் என சமந்தா குறிப்பிட்டுள்ளார். இதேபோல நடிகை அமலாவும் கூட பாதுகாப்பான பணிச் சூழலை தெலங்கானா அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகைகள் சிலரும் மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் தொல்லைகளுக்காக குரல் கொடுத்து வருவதால் மலையாளம், தெலுங்கை தொடர்ந்து தமிழிலும் இதே போன்ற பிரச்சனை எழுவதற்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}