ஹைதராபாத் : மலையாளத்தை போல் தெலுங்கு திரையுலகிலும் நடக்கும் பாலியல் தொல்லை தொடர்பான விசாரணை அறிக்கையையும் வெளியிட்டு, பாதுகாப்பான பணி சூழல் அமைத்து தர வேண்டும் என தெலுங்கானா அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார் நடிகை சமந்தா.
மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து நீதிபதி ஹேமா விசாரணை அறிக்கையை வெளியிட்டிருந்தார். இதில் பெண்களுக்கு பாலியல் தொல்லை நடப்பது உண்மை தான் என அம்பலப்படுத்தி இருந்தார். இதனையடுத்து மலையாள திரையுலகை சேர்ந்த நடிகர் ஜெயசூர்யா உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து மலையாள நடிகைகள் பலரும் தாங்களும் இது போல் தொல்லைகளை அனுபவித்து பாதிக்கப்பட்டிருப்பதாக தொடர்ந்து புகார் அளிக்க துவங்கினர்.
நடிகர் பலர் மீது பாலியல் புகார்கள் அளிக்கப்பட்டதால் மலையாள நடிகர் சங்கமான அம்மா கலைக்கப்பட்டது. அடுத்தடுத்த பாலியல் புகார்களால் மலையாள திரையுலகில் பெரும் புயல் வீசி வருகிறது. இந்நிலையில் நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கையை பாராட்டி நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் முக்கிய பதிவு ஒன்றை வைத்துள்ளார். அதில், தெலுங்கு திரையுலகை சேர்ந்த பெண்களாகிய நாங்கள் ஹேமா கமிட்டியின் அறிக்கையை வரவேற்கிறோம். கேரளாவை போல் தெலுங்கு திரையுலகில் பெண்களுக்கு ஆதரவாக வாய்ஸ் ஆஃப் வுமன் அமைப்பு 2019ல் உருவாக்கப்பட்டது.
மலையாள சினிமாவை போல் தெலுங்கு திரையுலகிலும் நடக்கும் பாலியல் தொல்லை தொடர்பான விசாரணை குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும் என தெலுங்கானா அரசிடம் கோரிக்கை வைக்கிறோம். இந்த அறிக்கையை வெளியிடுவதன் மூலமாக பெண்களுக்கு பாதுகாப்பான பணிச் சூழல் அமையும் என சமந்தா குறிப்பிட்டுள்ளார். இதேபோல நடிகை அமலாவும் கூட பாதுகாப்பான பணிச் சூழலை தெலங்கானா அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகைகள் சிலரும் மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் தொல்லைகளுக்காக குரல் கொடுத்து வருவதால் மலையாளம், தெலுங்கை தொடர்ந்து தமிழிலும் இதே போன்ற பிரச்சனை எழுவதற்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}