டெல்லி: பழைய நாடாளுமன்றத்திற்கு விடை கொடுத்து விட்டது இந்தியா.. இனிமேல் நாடாளுமன்ற நிகழ்வுகள் புதிய நாடாளுமன்றத்தில்தான் நடைபெறும். இந்த நிலையில் பழைய நாடாளுன்றத்திற்குப் புதிய பெயர் சூட்டியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
சம்விதான் சதன் என்று பழைய நாடாளுமன்றத்திற்குப் பெயர் கொடுத்துள்ளார் பிரதமர் மோடி. இந்த இந்திப் பெயருக்கு தமிழில் அர்த்தம் என்னவென்றால் அரசியல்சாசன கட்டடம் என்று பெயர் . 96 ஆண்டுகள் பழமை வாய்ந்த பழைய நாடாளுமன்றக் கட்டடம் மிகப் பெரும் வரலாறுகளை தன்னுள் வைத்துக் கொண்டு இன்னும் கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது.
இந்த பழைய நாடாளுமன்ற சென்டிரல் ஹாலில் இன்று கடைசி எம்.பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியபோதுதான் இந்தப் பெயரை அறிவித்தார்.
இந்த உரைக்குப் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து எம்.பிக்களும் புதிய நாடாளுமன்றத்திற்கு நடந்தே சென்றனர். இனிமேல் இந்திய நாடாளுமன்றம் புதிய கட்டடத்தில்தான் செயல்படும்.
சர் எட்வின் லூத்யென்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆகிய பிரிட்டிஷ் கட்டடக் கலை என்ஜீனியர்கள்தான் பழைய நாடாளுமன்றக் கட்டடத்தை வடிவமைத்தவர்கள். 1927ம் ஆண்டு இதன் கட்டுமானப் பணிகள் முடிவடைந்தன. 96 வயதாகிறது இந்தக் கட்டடத்திற்கு என்பது குறிப்பிடத்தக்கது.
இளம் அரசு ஊழியர்களை ஒட்டுமொத்தமாக வசீகரித்த தவெக.. திமுகவின் பின்னடைவு!
சட்டசபையை வென்ற கையோடு.. நாடாளுமன்றத்திற்குள்ளும் நுழைய தவெகவுக்கு ஒரு அரிய வாய்ப்பு!
விஜய்யின் எழுச்சி.. தப்புக் கணக்குப் போட்டு விட்டார்களா திராவிடக் கட்சிகள்?
ஆர் பி சௌத்ரி .. அவர் ஒரு அபூர்வம்!
The Clockmaker’s Apprentice.. ஒரு கடிகாரத்தை வைத்து பின்னப்பட்ட கதை!
Strong and of good courage.. இரும்பை விட மேலான வலிமை!
தனித்துவத்தையும், பண்பாட்டு விழுமியங்களையும்.. மெல்ல மெல்ல இழந்து வருகின்றோம்!
No one stands closer to you.. மனசாட்சியை விட சிறந்த நண்பர் யார்?
Following your own heart is a brave thing .. அங்க என்ன சொல்லுதோ.. அதுவே சரியானது!
{{comments.comment}}