விநாயகனே வெவ்வினையைவேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து.
மார்ச் மாதம் 17ஆம் தேதி திங்கட்கிழமை பங்குனி மூன்றாம் நாள் வரும் தேய்பிறை சதுர்த்தி திதி சங்கடஹர சதுர்த்தி ஆகும். ஒவ்வொரு மாதம் பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காவது நாள் சதுர்த்தி திதி. இன்று வரும் சதுர்த்தி திதியில் நம் சங்கடங்களை தீர்க்கும் முழுமுதற் கடவுள் ஆன விநாயகரை வழிபாடு செய்து வந்தால் நம் கஷ்டங்கள் நீங்கி, குடும்பத்தில் சுபிட்சம் பெருகும் .சந்திர தோஷம் ஏற்படாது என்பது நம்பிக்கை.

விநாயகர் பெருமானே இன்று மாலை அருகில் உள்ள கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வழிபட, வாழ்வில் உயர்வை தந்தருள்வார். அனைத்து தடைகளும் நீங்கி வெற்றிகள் கிடைக்கும். அருகிலுள்ள சிவாலயங்கள் ,அம்மன் ஆலயங்களில் உள்ள விநாயகர் சன்னதிகளுக்கு சென்று வழிபட நினைத்தது நிறைவேற்றி தருவார் விநாயகர் பெருமான். கோவிலுக்கு செல்பவர்கள் அபிஷேகப் பொருட்கள் வாங்கிச் செல்லலாம் .பால் ,நெய், மலர்கள் ,அருகம்புல் மாலை சார்த்துவதும், வெள்ளெருக்கு மாலை சார்த்துவது விசேஷம்.
வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றி விநாயகருக்கு மலர்களால் அலங்கரித்து சர்க்கரை பொங்கல் ,பால் பாயாசம், கேசரி ,கொழுக்கட்டை, சுண்டல் இவற்றில் ஏதேனும் அவரவர்க்கு உகந்தவாறு நெய்வேத்தியமாக வைத்து வழிபடுவது மகத்துவம். அருகம்புல் மாலை சாற்றி விநாயகனே வழிப்பட பிறவிப் பிணி நீங்கி இன்பம் பெருகும். அவ்வையார் அருளிய விநாயகர் அகவல் படிக்கலாம். கணேச காயத்ரி படிக்கலாம். இவை மனதையும் ,புத்தியையும் தெளிவாக வைக்கும். படிக்கும் குழந்தைகள், பொது தேர்வு எழுதும் குழந்தைகளுக்கு விநாயகர் அருள் கிட்டும். அந்த குழந்தைகளின் வீட்டில் உள்ள பெரியவர்கள் விரதமிருந்து வழிபட அவர்களுக்கு வெற்றி நிச்சயம்.
'சங்கட 'என்பது துன்பம், 'ஹர 'என்பது நீங்குதல், சங்கடஹர என்பது சங்கடங்களில் அதாவது துன்பங்களில் இருந்து விடுபடுதல் என்று பொருள். இவ்வாறு சங்கடஹர சதுர்த்தி அன்று வழிபாடு செய்தால் சகல சங்கடங்களையும் தீர்த்து வைப்பார் விநாயகர் பெருமான்.
மேலும் ஆன்மீக தகவலுக்கு இணைந்திருங்கள் தென் தமிழுடன். உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
சென்னை சூப்பர் கிங்ஸை.. 13 ஓவர்களிலேயே நசுக்கி எடுத்து.. பெரும் வெற்றியைத் தட்டிய ராஜஸ்தான்
ரூ.14.20 கோடி கார்த்திக் சர்மா.. பொசுக்கென்று ஜோலியை முடித்த ரூ. 30 லட்சம்!
Chennai Super Kings New Record: தோனி, ரெய்னா இல்லாமல்... 17 ஆண்டுகளில் இது முதல் முறை!
CSK in Trouble: அடுத்தடுத்து விழும் விக்கெட்டுகள்.. கடும் அப்செட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள
எம்.பியாக இருக்கும் திருமாவளவன்.. எம்.எல்.ஏவாக முடிவெடுத்தது ஏன்.. உற்று நோக்கும் திமுக!
திமுக விரைவில் விடைபெறப்போகிறது - கொளத்தூர் தொகுதியில் விஜய் பிரச்சாரம்
தர்மபுரியில் செளமியா.. முதல் முறையாக சட்டசபைத் தேர்தல் களத்தில்.. பெரம்பூரில் திலகபாமா!
தமிழகத்தில் பிரதமர் மோடி சூறாவளிப் பிரச்சாரம்.. சென்னையில் ஏப். 4ல் பிரம்மாண்ட ரோடு ஷோ!
போர்ச் சூழலை குழந்தைகளுக்கு எப்படி விளக்குவது? – பெற்றோருக்கான 15 வழிகாட்டுதல்கள்
{{comments.comment}}