சங்கடஹர சதுர்த்தி.. விநாயகரை வழிபட்டால்.. கஷ்டங்கள் நீங்கி.. குடும்பத்தில் சுபிட்சம் பெருகும்!

Mar 17, 2025,01:35 PM IST

விநாயகனே வெவ்வினையைவேரறுக்க வல்லான்

விநாயகனே வேட்கை தணிவிப்பான்

விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்

தன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து.


மார்ச் மாதம் 17ஆம் தேதி திங்கட்கிழமை பங்குனி மூன்றாம் நாள் வரும் தேய்பிறை சதுர்த்தி திதி சங்கடஹர சதுர்த்தி ஆகும். ஒவ்வொரு மாதம் பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காவது நாள் சதுர்த்தி திதி. இன்று வரும் சதுர்த்தி திதியில் நம் சங்கடங்களை தீர்க்கும் முழுமுதற் கடவுள் ஆன விநாயகரை வழிபாடு செய்து வந்தால் நம் கஷ்டங்கள் நீங்கி, குடும்பத்தில் சுபிட்சம் பெருகும் .சந்திர தோஷம் ஏற்படாது என்பது நம்பிக்கை.




விநாயகர் பெருமானே இன்று மாலை அருகில் உள்ள கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வழிபட, வாழ்வில் உயர்வை தந்தருள்வார்.  அனைத்து தடைகளும் நீங்கி வெற்றிகள் கிடைக்கும். அருகிலுள்ள சிவாலயங்கள் ,அம்மன் ஆலயங்களில் உள்ள விநாயகர் சன்னதிகளுக்கு சென்று வழிபட நினைத்தது நிறைவேற்றி தருவார் விநாயகர் பெருமான். கோவிலுக்கு செல்பவர்கள் அபிஷேகப் பொருட்கள் வாங்கிச் செல்லலாம் .பால் ,நெய், மலர்கள் ,அருகம்புல் மாலை  சார்த்துவதும், வெள்ளெருக்கு மாலை  சார்த்துவது விசேஷம்.


வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றி விநாயகருக்கு மலர்களால் அலங்கரித்து சர்க்கரை பொங்கல் ,பால் பாயாசம், கேசரி ,கொழுக்கட்டை, சுண்டல் இவற்றில் ஏதேனும் அவரவர்க்கு உகந்தவாறு நெய்வேத்தியமாக வைத்து வழிபடுவது மகத்துவம். அருகம்புல் மாலை சாற்றி விநாயகனே வழிப்பட பிறவிப் பிணி நீங்கி இன்பம் பெருகும். அவ்வையார் அருளிய விநாயகர் அகவல் படிக்கலாம். கணேச காயத்ரி படிக்கலாம். இவை மனதையும் ,புத்தியையும் தெளிவாக வைக்கும். படிக்கும் குழந்தைகள், பொது தேர்வு எழுதும் குழந்தைகளுக்கு விநாயகர் அருள் கிட்டும். அந்த குழந்தைகளின் வீட்டில் உள்ள பெரியவர்கள் விரதமிருந்து வழிபட அவர்களுக்கு வெற்றி நிச்சயம்.


'சங்கட 'என்பது துன்பம், 'ஹர 'என்பது நீங்குதல், சங்கடஹர என்பது சங்கடங்களில் அதாவது துன்பங்களில் இருந்து விடுபடுதல் என்று பொருள். இவ்வாறு சங்கடஹர சதுர்த்தி அன்று வழிபாடு செய்தால் சகல சங்கடங்களையும் தீர்த்து வைப்பார் விநாயகர் பெருமான்.


மேலும் ஆன்மீக தகவலுக்கு இணைந்திருங்கள் தென் தமிழுடன். உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

காங்கிரஸ் செய்த தவறுகளைத் திருத்தவே எங்களுக்கு நேரம் போதவில்லை.. பிரதமர் மோடி

news

பிரதமர் மீது தாக்குதல் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டம்...பகீர் கிளப்பிய சபாநாயகர் ஓம் பிர்லா

news

சபாநாயகர் சொன்னது மிகப்பெரிய பொய்...காங்கிரஸ் எம்.பி சுதா காந்திமதிநாதன் காட்டம்

news

பார்லிமென்ட்டில் புயலை கிளப்பிய திமுக அமைச்சரின் பேச்சு...திமுக-காங்கிரஸ் கடும் மோதல்

news

"அந்தப் பெரிய இடம் யார்?" - மடப்புரம் அஜித்குமார் மரண விவகாரத்தில் தாய் ஆவேச பேட்டி

news

மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு

news

தவெக தேர்தல் அறிக்கைக்காக மக்களிடம் கருத்து கேட்க புதிய இணையதளம்

news

தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம்: பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு

news

பீகார் தேர்தல் முடிவுகளை ரத்து செய்யுங்க...சுப்ரீம் கோர்ட்டில் பிரசாந்த் கிஷோர் மனு

அதிகம் பார்க்கும் செய்திகள்