அகர்தலா: திரிபுராவில் உள்ள ஒரு கல்லூரியில் சரஸ்வதி சிலையை ஆபாசமான கோலத்தில் வைத்திருந்ததாக கூறி, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
திரிபுரா தலைநகர் அகர்தலாவில், அரசு கலை மற்றும் கைவினை கல்லூரி உள்ளது. இங்குள்ள வளாகத்தில் சரஸ்வதி சிலை ஒன்று அமைந்துள்ளது. கடந்த புதன்கிழமை வசந்த பஞ்சமி அன்று சரஸ்வதி சிலைக்கு பூஜைகள் நடைபெற்றன.அப்போது பாரம்பரிய சேலை இல்லாமல் சரஸ்வதி சிலை ஆபாசமான கோலத்தில் இருப்பதாக கூறி சிலர் வீடியோவை வைரலாக்கினர்.

இதை இப்போது பாஜகவின் மாணவர் அணியான ஏபிவிபி பிரச்சினையாக்கியுள்ளது. சரஸ்வதி சிலை ஆபாசமாக இருப்பதாக கூறி அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஏபிவிபி அமைப்பின் இணைச் செயலாளர் திபாகர் ஆச்சார்ஜி கூறுகையில், சரஸ்வதி தேவியின் சிலையில் உள்ள சேலை அகற்றப்பட்டு சித்தரித்தது மிகவும் கொடூரமானது. இது மத உணர்வை புண்படுத்துவது என்றார்.
இந்த விவகாரம் குறித்து திரிபுரா கலை மற்றும் கைவினைப் கல்லூரி முதல்வர் அபிஷித் பட்டாச்சாரி கூறுகையில், இந்த சிலை வட மற்றும் தென்னிந்திய கோயில்களில் காணப்படும் சிலை அமைப்பை பின்பற்றியது. இதனால் நாங்கள் யாருடைய மனதையும் புண்படுத்தவில்லை. அவர்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் சிலையை மாற்றி உள்ளோம் என கூறினார்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}