அகர்தலா: திரிபுராவில் உள்ள ஒரு கல்லூரியில் சரஸ்வதி சிலையை ஆபாசமான கோலத்தில் வைத்திருந்ததாக கூறி, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
திரிபுரா தலைநகர் அகர்தலாவில், அரசு கலை மற்றும் கைவினை கல்லூரி உள்ளது. இங்குள்ள வளாகத்தில் சரஸ்வதி சிலை ஒன்று அமைந்துள்ளது. கடந்த புதன்கிழமை வசந்த பஞ்சமி அன்று சரஸ்வதி சிலைக்கு பூஜைகள் நடைபெற்றன.அப்போது பாரம்பரிய சேலை இல்லாமல் சரஸ்வதி சிலை ஆபாசமான கோலத்தில் இருப்பதாக கூறி சிலர் வீடியோவை வைரலாக்கினர்.

இதை இப்போது பாஜகவின் மாணவர் அணியான ஏபிவிபி பிரச்சினையாக்கியுள்ளது. சரஸ்வதி சிலை ஆபாசமாக இருப்பதாக கூறி அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஏபிவிபி அமைப்பின் இணைச் செயலாளர் திபாகர் ஆச்சார்ஜி கூறுகையில், சரஸ்வதி தேவியின் சிலையில் உள்ள சேலை அகற்றப்பட்டு சித்தரித்தது மிகவும் கொடூரமானது. இது மத உணர்வை புண்படுத்துவது என்றார்.
இந்த விவகாரம் குறித்து திரிபுரா கலை மற்றும் கைவினைப் கல்லூரி முதல்வர் அபிஷித் பட்டாச்சாரி கூறுகையில், இந்த சிலை வட மற்றும் தென்னிந்திய கோயில்களில் காணப்படும் சிலை அமைப்பை பின்பற்றியது. இதனால் நாங்கள் யாருடைய மனதையும் புண்படுத்தவில்லை. அவர்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் சிலையை மாற்றி உள்ளோம் என கூறினார்.
மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தரக் கூடாது.. மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம்
மேகதாது அணை விவகாரம்... ஜூலை 23 டெல்லியில் ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
தவெக.,விற்கு எதிரான குதிரை பேர வழக்கு தள்ளுபடி...உச்ச நீதிமன்றம் அதிரடி
தமிழகத்தில் இன்று வெளுத்து வாங்கப்போகும் கனமழை: 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
ஆஸ்திரேலியா செல்லும் மாணவர்களுக்கான விசா கட்டணம் அதிரடி உயர்வு!
சட்டசபை நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது ஏன்?...இபிஎஸ் சரமாரி கேள்வி
'தடை நியாயமானதே..' டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு விதித்த தடையை நீக்க மறுப்பு!
ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி, முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து
முதல் முறை வேலைக்குச் சேர்ந்தவர்களுக்கு இபிஎஃப் ரூ.15,000 ஊக்கத்தொகை
{{comments.comment}}