அகர்தலா: திரிபுராவில் உள்ள ஒரு கல்லூரியில் சரஸ்வதி சிலையை ஆபாசமான கோலத்தில் வைத்திருந்ததாக கூறி, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
திரிபுரா தலைநகர் அகர்தலாவில், அரசு கலை மற்றும் கைவினை கல்லூரி உள்ளது. இங்குள்ள வளாகத்தில் சரஸ்வதி சிலை ஒன்று அமைந்துள்ளது. கடந்த புதன்கிழமை வசந்த பஞ்சமி அன்று சரஸ்வதி சிலைக்கு பூஜைகள் நடைபெற்றன.அப்போது பாரம்பரிய சேலை இல்லாமல் சரஸ்வதி சிலை ஆபாசமான கோலத்தில் இருப்பதாக கூறி சிலர் வீடியோவை வைரலாக்கினர்.
இதை இப்போது பாஜகவின் மாணவர் அணியான ஏபிவிபி பிரச்சினையாக்கியுள்ளது. சரஸ்வதி சிலை ஆபாசமாக இருப்பதாக கூறி அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஏபிவிபி அமைப்பின் இணைச் செயலாளர் திபாகர் ஆச்சார்ஜி கூறுகையில், சரஸ்வதி தேவியின் சிலையில் உள்ள சேலை அகற்றப்பட்டு சித்தரித்தது மிகவும் கொடூரமானது. இது மத உணர்வை புண்படுத்துவது என்றார்.
இந்த விவகாரம் குறித்து திரிபுரா கலை மற்றும் கைவினைப் கல்லூரி முதல்வர் அபிஷித் பட்டாச்சாரி கூறுகையில், இந்த சிலை வட மற்றும் தென்னிந்திய கோயில்களில் காணப்படும் சிலை அமைப்பை பின்பற்றியது. இதனால் நாங்கள் யாருடைய மனதையும் புண்படுத்தவில்லை. அவர்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் சிலையை மாற்றி உள்ளோம் என கூறினார்.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}