அலைபேசி பேச்சு

Jun 23, 2026,03:55 PM IST

- சசிகலா விஸ்வநாதன்


அலைபேசியில் பேசும் வாய்...

அவன் கண்களும் கருத்தும், 

என்றும்

கணினியிலும்,

இன்னொரு அலைபேசியிலும்,

துணி துவைக்கும் எந்திரத்திலும், 

அடுப்பில் ஏற்றிய வாணலியில்

கொதிக்கும் குழம்பிலும்;


நானே பேசிக் கொண்டிருக்க;

ஒற்றை வார்த்தையில்

பதில்கள் உதிர

என் உதிரம் கொதிக்க;

கண்ணோடு கண் நோக்கி பேசாத

மகனிடம்,நான் துரிதமாக

கையசைத்து விடை பெறும் நேரத்தில்;



என்னைவிட துரிதமாக அவன் 

அலைபேசியைத் துண்டிக்கும் 

தருணத்தில்;அவன் சொன்னது

“அம்மா! அடுத்த வாரம் மீண்டும் பேசலாம்“

கசிந்த கண்கள் இப்போதெல்லாம் 

கசியாமல் இருக்கப் பழகிக் கொண்டன.


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை;  கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

உனைப் போற்றி வாழ்கின்ற என்னை வாழ வைக்கிறாய்!

news

சிந்தனைச் சிதறல்.. நமக்கு மறுக்கப்பட்டது.. அவர்களுக்கு வழங்கப்படுகிறது!

news

வட்ட நிலா பொட்டுக்காரி வாழைப்பூக் கொண்டக்காரி

news

Short Story: "யாரும்மா அது? ஞாயிற்றுக்கிழமைல!

news

வரலக்ஷ்மி வரம் அருள்வாய்!

news

அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா.. மறக்க முடியாத செளகார் ஜானகி.. பின்னி எடுத்த வேடங்கள்..!

news

"திமுக எம்எல்ஏ.,க்களுக்கு கார் வேண்டாம்!" – சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

news

ஃபைலை திறக்க ஜோசியக்காரர் சொல்லணுமா? உதயநிதி காரசார பேச்சு

news

எம்எல்ஏ.,க்களுக்கு கார் கொடுப்பது ஏன்? அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்