- சசிகலா விஸ்வநாதன்
அலைபேசியில் பேசும் வாய்...
அவன் கண்களும் கருத்தும்,
என்றும்
கணினியிலும்,
இன்னொரு அலைபேசியிலும்,
துணி துவைக்கும் எந்திரத்திலும்,
அடுப்பில் ஏற்றிய வாணலியில்
கொதிக்கும் குழம்பிலும்;
நானே பேசிக் கொண்டிருக்க;
ஒற்றை வார்த்தையில்
பதில்கள் உதிர
என் உதிரம் கொதிக்க;
கண்ணோடு கண் நோக்கி பேசாத
மகனிடம்,நான் துரிதமாக
கையசைத்து விடை பெறும் நேரத்தில்;

என்னைவிட துரிதமாக அவன்
“அம்மா! அடுத்த வாரம் மீண்டும் பேசலாம்“
கசிந்த கண்கள் இப்போதெல்லாம்
கசியாமல் இருக்கப் பழகிக் கொண்டன.
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)
மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விட மாட்டோம்: சட்டசபையில் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்!
சட்டசபையில் முதல்வர் விஜய் பேச்சு...எக்ஸ்தளத்தில் கவுன்ட்டர் கொடுத்த உதயநிதி
முதல்வர் விஜய் சொன்ன 'பார்ட்டி ஃபண்ட்'...திமுக கொந்தளித்து வெளிநடப்பு செய்தது ஏன்?
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. செப்டம்பர் 15ல் தொடக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு
மின்சாரத் துறை வெள்ளை அறிக்கை ஜூன் 25-ல் வெளியீடு: அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு
திருவள்ளூர் அமோனியா கசிவு விவகாரம்: முதல்வரிடம் இடைக்கால அறிக்கை தாக்கல்
Aliya Riaz: யார் இந்த அலியா ரியாஸ்.. ஏன் இப்படி திடீரென வைரலாகியுள்ளார்?
அலைபேசி பேச்சு
அது ஒரு அழகிய மழைக்காலம்
{{comments.comment}}