சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எளிய அறிவியல் சோதனைகள் செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எளிய அறிவியல் சோதனைகள் செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயற்பியல் மாற்றமும்,வேதியியல் மாற்றமும் எவ்வாறு நிகழ்கிறது? என்பதனை மாணவர்கள் நேரடியாக கற்று தெரிந்து கொண்டனர்.

பயிற்சியாளர்கள் தனசேகர், ஜோதி மீனாள் மற்றும் அரங்குலவன் ஆகியோர் அறிவியல் உபகரணங்களை கொண்டு அறிவியல் சார்ந்த விளக்கங்களை நேரடி சோதனைகள் மூலம் செய்து காண்பித்து விளக்கினார்கள். எலக்ட்ரான்,புரோட்டான்,வெப்ப கொள்வினை, வெப்ப உமிழ்வினை,அனுவின் தன்மை,விசையும் ,இயக்கமும், இயற்பியல்,வேதியியல் மாற்றங்கள் உள்ளிட்ட அறிவியல் பயன்பாடு தொடர்பான செயல்முறைகள் போன்றவற்றை செய்து காண்பித்து தெளிவாக விளக்கம் அளித்தனர்.

மாணவர்கள் பலர் கேள்விகள் கேட்டு, அதற்குரிய பதில்களைப் பெற்றனர். இந்த நிகழ்ச்சியை ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார். அ.மு.மு. அறக்கட்டளையினர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
ஜனநாயகன் வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றத்தையே அணுக உச்சநீதிமன்றம் உத்தரவு
பொங்கல் மட்டுமல்ல இன்று.. இன்னொரு நாளும் இன்று கொண்டாடப்படுகிறது.. அது என்ன?
இந்தியாவை எஃகு கோட்டையாக்கி .. எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம் ஆகி!
வழிந்தோடும் பொங்கலுடன் இணையும் அனைத்து நற்பலன்கள்!
பொங்கலோ பொங்கல் என்றுரத்துக் கூவிட.. கிண்டிடக் கிண்டிடக்.. குலவையிட்டு!
மங்கலத் தை மலர்ந்த நாள் பொங்கல் வைத்து எங்கும் இன்பம்!
தை மாதம் பிறந்தது பொங்கலோ பொங்கல் .. பொங்கலோ பொங்கல் !
வைகைத் துயில் கலைந்து வாசலில் போட்ட கோலங்கள்!
வருக வருக.. தை மகளே வருக..!
{{comments.comment}}