- -வர்ஷினி
சென்னை: இயக்குனர் சீனு ராமசாமி நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்பதே சமூக நீதி என்பது அனைத்து சமூகத்திற்கும் பொருந்தும் என்பதை உரக்கச் சொல்லும் புதிய திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் சீனு ராமசாமி.
சென்னையில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. தங்கம் சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் சீனு ராமசாமி. விஜய் கார்த்திக் எழுதி இயக்குகிறார். இப்படத்தின் ஒளிப்பதிவை ஏ எஸ் சூர்யா கவனிக்க படத்தொகுப்பை விபி வெங்கட் கையாளுகிறார். எஸ் ஆர் ஹரி இசையமைக்கிறார்.
தேசிய விருது பெற்ற வெற்றி பட இயக்குனரான சீனு ராமசாமி பல்வேறு கலைஞர்களை வெற்றி நாயகர்களாக மாற்றிய பெருமைக்குரியவர். விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், சுனைனா என பலரை இதில் சொல்லலாம். தென் மேற்குப் பருவக் காற்று, நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், தர்மதுரை, மாமனிதன் ஆகியவை இவரது இயக்கத்தில் வெளியான சில அற்புதமான படங்கள்.
தர்மதுரை படத்தில் ஒரு காட்சியில் வந்து போயிருப்பார் சீனு ராமசாமி. இப்போது முக்கியாமான பாத்திரத்தில் அவர் நடிக்கவுள்ளார். இப்படத்தின் கதாநாயகனாக அருண் நடிக்க அவரது ஜோடியாக நிரஞ்சனா நடிக்கிறார். இவர்களுடன் யூடியூப் புகழ் விஜய் டியோ ஹிமோர் ரூஸ்வெல்ட் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பில் நூற்றுக்கணக்கான துணை நடிகர், நடிகைகள் பங்கு பெற்ற முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. தொடர்ந்து விழுப்புரம், கோவை ,பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
புதிய சமுதாய மாற்றத்திற்கான வழிகாட்டியாக இப்படம் அமையும் என்று இயக்குனர் விஜய் கார்த்திக் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார். மேலும் இப்படம் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்பதே சமூகம் நீதி என்ற கருத்தையும் ஆழமாகவும், அழுத்தமாகவும் பதிவு செய்யும் என கூறினார்
உதயநிதி ஸ்டாலின் கைது : டெல்லியில் எம்.பிக்கள்.. தமிழ்நாடு முழுவதும் திமுக.,வினர் ஆர்ப்பாட்டம்!
தஞ்சாவூர் நிகழ்ச்சியில் சர்ச்சை பேச்சு: உதயநிதி ஸ்டாலின் சென்னையில் கைது
உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூரில் தவெக மகளிர் அணி சார்பில் போலீசில் புகார்
வசவாளர்களை வாழ்க என சொல்லலாம்.. ஆனால் ஆபாசநிதிகளை.. அமைச்சர் என்.ஆனந்த் கண்டனம்
மெய்நட்பு!
பாசமும் நேசமும் பகிர்ந்த நினைவுகள் மனதில் இனிய நினைவுகளாய்!
நட்பற்ற வாழ்க்கையில் முழுமையாகாது நாளும்!
சிந்தனைச் சிதறல்.. புன்னகை ஒன்றையே விதைத்திடுவார்!
வான் மழையும் காற்றும் தந்து வாழ்வு கொடுக்கும் மரங்களே!
{{comments.comment}}