- -வர்ஷினி
சென்னை: இயக்குனர் சீனு ராமசாமி நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்பதே சமூக நீதி என்பது அனைத்து சமூகத்திற்கும் பொருந்தும் என்பதை உரக்கச் சொல்லும் புதிய திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் சீனு ராமசாமி.
சென்னையில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. தங்கம் சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் சீனு ராமசாமி. விஜய் கார்த்திக் எழுதி இயக்குகிறார். இப்படத்தின் ஒளிப்பதிவை ஏ எஸ் சூர்யா கவனிக்க படத்தொகுப்பை விபி வெங்கட் கையாளுகிறார். எஸ் ஆர் ஹரி இசையமைக்கிறார்.
தேசிய விருது பெற்ற வெற்றி பட இயக்குனரான சீனு ராமசாமி பல்வேறு கலைஞர்களை வெற்றி நாயகர்களாக மாற்றிய பெருமைக்குரியவர். விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், சுனைனா என பலரை இதில் சொல்லலாம். தென் மேற்குப் பருவக் காற்று, நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், தர்மதுரை, மாமனிதன் ஆகியவை இவரது இயக்கத்தில் வெளியான சில அற்புதமான படங்கள்.
தர்மதுரை படத்தில் ஒரு காட்சியில் வந்து போயிருப்பார் சீனு ராமசாமி. இப்போது முக்கியாமான பாத்திரத்தில் அவர் நடிக்கவுள்ளார். இப்படத்தின் கதாநாயகனாக அருண் நடிக்க அவரது ஜோடியாக நிரஞ்சனா நடிக்கிறார். இவர்களுடன் யூடியூப் புகழ் விஜய் டியோ ஹிமோர் ரூஸ்வெல்ட் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பில் நூற்றுக்கணக்கான துணை நடிகர், நடிகைகள் பங்கு பெற்ற முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. தொடர்ந்து விழுப்புரம், கோவை ,பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
புதிய சமுதாய மாற்றத்திற்கான வழிகாட்டியாக இப்படம் அமையும் என்று இயக்குனர் விஜய் கார்த்திக் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார். மேலும் இப்படம் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்பதே சமூகம் நீதி என்ற கருத்தையும் ஆழமாகவும், அழுத்தமாகவும் பதிவு செய்யும் என கூறினார்
பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
{{comments.comment}}