ஒரு காலத்தில் திருமாவளவனின் வலதுகரம்.. இன்று தமிழ்நாடு காங்கிரஸின் தலைவர்.. செல்வப்பெருந்தகை!

Feb 17, 2024,10:22 PM IST

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மிகப் பெரிய முக்கியத் தலைவராக ஒரு காலத்தில் விளங்கியவர் கு. செல்வப்பெருந்தகை.. இன்று தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது, ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்குக் கிடைத்துள்ள புதிய பெருமையாக அமைந்துள்ளது.


தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவது முதல் முறையல்ல என்றாலும் கூட செல்வப்பெருந்தகையின் நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது.


வட தமிழ்நாட்டின் முக்கிய  தலித் தலைவர்களில் ஒருவர்தான் செல்வப்பெருந்தகை. பூவை ஜெகன் தொடங்கிய புரட்சி பாரதம் கட்சியில் ஆரம்பத்தில் இணைந்து செயல்பட்டார். பின்னர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார். இக்கட்சியில் இருந்தபோது 2006ம் ஆண்டு மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு வென்று சட்டசபைக்கு முதல் முறையாகப்  போனார். அதன் பிறகு செங்கம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் 2 முறை போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.




விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் திருமாவளவனின் வலது கரமாகவே செயல்பட்டு வந்தார் செல்வப் பெருந்தகை. அப்போது அவரது பெயர் வெறும் செல்வம்தான். பின்னர்தான் தனது பெயரை செல்வப் பெருந்தகை என்று மாற்றிக் கொண்டார்.


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அரசியல் சக்தியாக மாற்ற திருமாவளவன் கடுமையாக போராடிக் கொண்டிருந்தபோது அவருக்கு மிகப் பெரிய உதவியாக இருந்தவர் செல்வப்பெருந்தகை. அதன் பின்னர் திருமாவுடன் மனக் கசப்பு ஏற்படவே, செல்வப்பெருந்தகை பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். மாநிலத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். அங்கு அவருக்கு செட் ஆகவில்லை. இதையடுத்து காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.


கடந்த பல ஆண்டுகளாக காங்கிரஸில் பயணித்து வரும் அவர் கடந்த சட்டசபைத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இப்போது மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் காலை நேரப் பனிமூட்டம் நீடிக்கும்...சென்னை வானிலை மையம் தகவல்

news

திமுக.,வின் அடுத்த தலைவர் உதயநிதியா?...முதல்வர் பேசியதற்கு என்ன அர்த்தம்?

news

செங்கோட்டையன் செல்லாத நோட்டு... விஜயை எந்த நாட்டுக்கு முதல்வராக்க போகிறார்: செல்லூர் ராஜூ பேட்டி

news

வெற்று வாக்குறுதியளித்து ஊராட்சி செயலாளர்களை வஞ்சிக்கும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் தாக்கு!

news

விஜய் பேசினால் எதிர்க்கட்சிகளின் கதை முடிந்துவிடும்...செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு

news

பாமக யாருக்கு? அன்புமணி தரப்பிற்கு அங்கீகாரம் வழங்கி வழக்கு முடித்து வைப்பு

news

மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எதிராக திமுக எம்.பி., திருச்சி சிவா உரிமை மீறல் நோட்டீஸ்

news

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மருத்துவமனையில் அனுமதி

news

ஜனநாயகன் படத்திற்கு புதிய சிக்கல்: மறுதணிக்கைக்கு அனுப்ப சென்னை ஐகோர்ட் உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்