நீண்ட நாட்களுக்கு பின்னர் நடிகர் செந்தில் கதையின் ஹீரோவாக நடித்திருக்கும் படம் வாங்கண்ணா வணக்கங்கண்ணா. இருபது நாட்களுக்குள் இந்தப் படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது.
நீண்ட நாட்களுக்கு பின்னர் இந்தப் படத்தில் நகைச்சுவை நடிகர் செந்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். ஹீரோவாக சுந்தர் மஹா ஸ்ரீ , சந்தியா ராமசுப்பிரமணியன் ,அபினய ஸ்ரீ இருவரும் முதன்மைக் கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். வில்லியாக நதியா வெங்கட் நடிக்கிறார். இந்தப் படம் ஒரே நாளில் நடக்கும் கதையில் உருவாகிறது. முழுக்க முழுக்க காமெடி கலந்த கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் மொத்தம் 5 பாடல்கள் உள்ளன.

எழுத்து, இயக்கம் ராஜ் கண்ணாயிரம். கதை, திரைக்கதை, வசனம் சுந்தர் மஹாஸ்ரீ எழுதியுள்ளார். இப்படத்திற்கு வெங்கட் முனிரத்னம் ,ஏ சி மணிகண்டன், ஸ்ரீநாத் ஒளிப்பதிவு செய்துள்ளனர். படத்தொகுப்பு ரமேஷ் மணி, ஜோஸப் சந்திரசேகர் இப்பத்திற்கு இசையமைத்துள்ளார்.
இது சமூக வலைதள காலம்.. யூடியூபர்கள்தான் கலக்கி வருகின்றனர். அந்த வகையில் ஒரு எம்.எல்.ஏ.வுக்கும் ஒரு யூ டியூபருக்கும் இடையில் நடக்கும் பிரச்சினையை மையப்படுத்தி உருவாகியுள்ளது. யூ டியூபர் எம்.எல்.ஏ.வின் கோபத்துக்கு ஆளாகிறார். இந்தப் பிரச்சனையில் இருந்து இருபத்தி நாலு மணிநேரத்திற்குள் அந்த யூ டியூபர் தப்பினாரா.. இல்லையா.. என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

இருபது நாட்களுக்குள் இந்தப் படத்தின் மொத்தப் படப்பிடிப்பு நிறைவடைந்தது . செந்தில் காமெடியில் கலக்கும் நபர். இந்தப் படத்தில் கதை நாயகனாக எப்படி அசத்தியிருக்கிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பார்க்கலாம்.
தவெக ஆட்சியமைப்பது உறுதியானது.. தொடங்குகிறது விஜய் சகாப்தம்!
தமிழகத்தில் ஆட்சி அமைக்க முயற்சி செய்யவில்லை.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
பிளஸ்டூ தேர்வு முடிவுகள்: ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகளில் அசத்தலான தேர்ச்சி விகிதம்!
ஆட்சியமைப்பதில் சிக்கல்.. இப்போது கூட விஜய் பேசாமல் இருப்பது ஏன்.. என்னதான் பிரச்சினை?
நல்லதே நடக்கும்.. ஒரு நிமிடக் கதை (8)
மாணிக்க மகனே மரகத செல்வா.. மகனுக்கு ஓர் மடல்!
மே 1ம் தேதி மட்டுமல்ல.. எப்போதுமே கொண்டாடுவோம் தொழிலாளர்களை!
எண்ணங்களை நிறுத்துவது எப்படி? (How to Stop Thoughts?)
சென்னை ஹஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி +2 பொதுத்தேர்வில் 98.10% தேர்ச்சி!
{{comments.comment}}