என் மகனை ஆசிர்வாதம் பண்ணுங்க.. 3வது மகனுக்கு பவன் என பெயர் சூட்டிய சிவகார்த்திகேயன்

Jul 15, 2024,05:40 PM IST

சென்னை: கடந்த மாதம் சிவகார்த்தி்யேனுக்கு 3வதாக ஆண் குழந்தை பிறந்தது. தற்போது அந்த குழந்தைக்கு பவன் என பெயர் வைத்து பெயர் சூட்டு விழாவை நடத்தியிருக்கிறார்.


தமிழ் திரையுலகின் முக்கிய நடிகர்களுள் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் படிப்படியாக தனது வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்தவர். இவருக்கொன்று தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. சமீபத்தில் வெளிவந்த பிரின்ஸ், அயலான் படங்கள் கடும் தோல்வியடைந்த நிலையில், தற்போது அமரன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படம் புல்வாமா தாக்குதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார். இந்த படத்தில் மேஜர் முகுந்த் கதாப்பத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு அடுத்தபடியாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடக்க உள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கும் ஒரு படத்திலும் இவர் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.




திரைத்துறைக்கு வருவதற்கு முன்னரே சிவகார்த்திகேயன் தனது மாமா மகள் ஆர்த்தியைத் திருமணம் செய்து கொண்டார். சிவகார்த்திகேயன்-ஆர்த்தி தம்பதியனருக்கு ஆராதனா என்ற மகளும், குகன் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் தங்களுக்கு 3வதாக ஒரு மகன் பிறந்துள்ளதாக சிவகார்த்திகேயன் அறிவித்திருந்தார். தற்போது தன் மகனுக்கு பெயர் சூட்டு விழா நடத்தி இருக்கும் வீடியோவையும் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


இந்த பெயர் சூட்டு விழாவிற்கு இரு வீட்டார் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். சிவகார்த்திகேயன் வெளியிட்ட வீடியோவில் தனது குழந்தைக்கு காதில் பெயர் கூறும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. தனது 3வது குழந்தைக்கு பவன் என பெயர் சூட்டியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்