சென்னை: எஸ்கே புரொடக்ஷன்ஸ் பெயரை தவறாக பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தனது இணையதள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகாராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவருக்கொன்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தனது எதார்த்த நடிப்பில் ரசிகர்களை கவர்ந்தவர். இவர் நடிப்பு மட்டும் இன்றி சிவகார்த்தகேயன் புரொடக்ஷன்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் ஏராளமான படங்களை தயாரித்து வருகிறார். சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த கனா, அருவி, டாக்டர், டான், குரங்கு பெடல், கொட்டுக்காளி போன்ற திரைப்படங்கள் தயாரித்துள்ளார். இவரின் தயாரிப்பு நிறுவனம் பெயரில் காஸ்டிங் ஏஜென்ட்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. இந்த நிலையில், அது போலியானது என்றும், மேலும், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் பெயரை தவறாக பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,

எங்கள் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் எந்தத் திரைப்படங்களுக்கும் காஸ்டிங் ஏஜென்ட்கள் நியமிக்கப்படவில்லை என்பதை தெளிவாக அறிவிக்கிறோம்.
இதற்கு மாறாகத் தோன்றும் எந்த மின்னஞ்சல்கள், செய்திகள் அல்லது சமூக வலைதள பதிவுகளையும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் பெயரை தவறாக பயன்படுத்துவோருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
புத்தகம்
Kavi Kalai poem: விதை
தோல்வியில் துவளேல்!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
தேடலும் தொலைதலும்!
Haiku by Ira Mumtaz Begum: கண்ணாடி பெட்டிக்குள்.. கண்ணீர் விடும் மீன்கள்!
கலைநிகழ்ச்சி களைகட்டுது.. பள்ளி வளாகம்.. ரசித்து பார்க்குது!
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
{{comments.comment}}