கடலூரில்.. பாம்பு பிடித்த தன்னார்வலர் உயிழப்பு: எப்படி தெரியுமா?

Apr 13, 2024,03:59 PM IST

கடலூர்: தீயணைப்புத்துறையினரால் பிடிக்கப்பட்ட பாம்பை காட்டில் விடுவதற்காக டப்பாவில் அடைத்த போது, பாம்பு கடித்ததினால் தன்னார்வலர் உமர் அலி என்பவர் உயிரிழந்தார்.


கடலூர் மாவட்டம் நெல்லிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் உமர் அலி. இவருக்கு வயது 36. உமர் அலி வனத்துறையினர்களுடன் சேர்ந்து பாம்பு பிடிக்கும் பணியில் கடந்த 12 வருடமாக ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று பண்ருட்டி முத்தையா நகரில் கனகராஜ்  என்பவரது வீட்டில் நல்ல பாம்பு புகுந்துள்ளது. கனகராஜ் தகவல் கொடுத்ததன் பேரில் தீயணைப்பு துறையினர் அங்கு சென்றுள்ளனர். 




அந்த பாம்பினை லாவகமாக தீயணைப்பு துறையினர் பிடித்தும் விட்டனர். அப்போது அங்கு வந்த உமர் அலி பாம்பினை நான் காட்டில் விட்டு விடுகிறேன் என்று கூற, தீயணைப்பு துறையினரும் பாம்பினை அவரிடம் கொடுத்துள்ளனர். அந்த பாம்பை தன்னுடைய டப்பாவிற்கு மாற்றும் போது அந்த பாம்பு உமர் அலியை கடித்துள்ளது. கடித்தது நல்ல பாம்பு என்பதால் தியணைப்பு வீரர்கள் உமர் அலியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 


பண்ருட்டி மருத்துவமனையில் அவருக்கு  முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் கொண்டு  செல்லும் வழியிலேயே உமர் அலி இறந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

அதிகம் பார்க்கும் செய்திகள்