கடலூரில்.. பாம்பு பிடித்த தன்னார்வலர் உயிழப்பு: எப்படி தெரியுமா?

Apr 13, 2024,03:59 PM IST

கடலூர்: தீயணைப்புத்துறையினரால் பிடிக்கப்பட்ட பாம்பை காட்டில் விடுவதற்காக டப்பாவில் அடைத்த போது, பாம்பு கடித்ததினால் தன்னார்வலர் உமர் அலி என்பவர் உயிரிழந்தார்.


கடலூர் மாவட்டம் நெல்லிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் உமர் அலி. இவருக்கு வயது 36. உமர் அலி வனத்துறையினர்களுடன் சேர்ந்து பாம்பு பிடிக்கும் பணியில் கடந்த 12 வருடமாக ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று பண்ருட்டி முத்தையா நகரில் கனகராஜ்  என்பவரது வீட்டில் நல்ல பாம்பு புகுந்துள்ளது. கனகராஜ் தகவல் கொடுத்ததன் பேரில் தீயணைப்பு துறையினர் அங்கு சென்றுள்ளனர். 




அந்த பாம்பினை லாவகமாக தீயணைப்பு துறையினர் பிடித்தும் விட்டனர். அப்போது அங்கு வந்த உமர் அலி பாம்பினை நான் காட்டில் விட்டு விடுகிறேன் என்று கூற, தீயணைப்பு துறையினரும் பாம்பினை அவரிடம் கொடுத்துள்ளனர். அந்த பாம்பை தன்னுடைய டப்பாவிற்கு மாற்றும் போது அந்த பாம்பு உமர் அலியை கடித்துள்ளது. கடித்தது நல்ல பாம்பு என்பதால் தியணைப்பு வீரர்கள் உமர் அலியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 


பண்ருட்டி மருத்துவமனையில் அவருக்கு  முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் கொண்டு  செல்லும் வழியிலேயே உமர் அலி இறந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்