கடலூர்: தீயணைப்புத்துறையினரால் பிடிக்கப்பட்ட பாம்பை காட்டில் விடுவதற்காக டப்பாவில் அடைத்த போது, பாம்பு கடித்ததினால் தன்னார்வலர் உமர் அலி என்பவர் உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம் நெல்லிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் உமர் அலி. இவருக்கு வயது 36. உமர் அலி வனத்துறையினர்களுடன் சேர்ந்து பாம்பு பிடிக்கும் பணியில் கடந்த 12 வருடமாக ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று பண்ருட்டி முத்தையா நகரில் கனகராஜ் என்பவரது வீட்டில் நல்ல பாம்பு புகுந்துள்ளது. கனகராஜ் தகவல் கொடுத்ததன் பேரில் தீயணைப்பு துறையினர் அங்கு சென்றுள்ளனர்.

அந்த பாம்பினை லாவகமாக தீயணைப்பு துறையினர் பிடித்தும் விட்டனர். அப்போது அங்கு வந்த உமர் அலி பாம்பினை நான் காட்டில் விட்டு விடுகிறேன் என்று கூற, தீயணைப்பு துறையினரும் பாம்பினை அவரிடம் கொடுத்துள்ளனர். அந்த பாம்பை தன்னுடைய டப்பாவிற்கு மாற்றும் போது அந்த பாம்பு உமர் அலியை கடித்துள்ளது. கடித்தது நல்ல பாம்பு என்பதால் தியணைப்பு வீரர்கள் உமர் அலியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பண்ருட்டி மருத்துவமனையில் அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் கொண்டு செல்லும் வழியிலேயே உமர் அலி இறந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
IPL 2026: நூர் அகமது அபாரம்.. கொல்கத்தாவை 32 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்!
தமிழ்ப் புத்தாண்டு .. பராபவத் தாய் பிறப்பெடுத்தாள் ஆண்டு அறுபதில் அவளும் ஒருதாய்!
புத்தாண்டே வருக, புன்னகையுடன் வாழ்த்திடு, ஒவ்வொருவரின் வாழ்விலும் புது பொலிவை தந்திடு!
உன் குரலில் என் இதயம் இளைப்பாறுகிறது.. அவளின் (ல்) அவன்! (9)
தமிழ்ப் புத்தாண்டில் இதைக் கற்போம்.. பூ கோர்க்கலாம் வாங்க!
Tamil New Year: முத்திரை பதிக்கப் போகும் தமிழ்ப் புத்தாண்டு.. சித்திரை மாத சிறப்புகள்!
கோவிலில் நடந்த கலாட்டா.. விஷாலின் விளையாட்டுகள் 10
சிந்தனைச் சிதறல்.. குறையை குறைவாய்க் காண்போம்.. நிறையை நிறைவாய்க் காண்போம்!
Dr Ambedkar Birth Anniversary: அறிவின் உச்சம் அம்பேத்கரின் சட்டம்!
{{comments.comment}}