லண்டன் : வார இறுதி நாட்களில் அதிகமாக தூங்குவதால் இதய பாதிப்பு குறைவதுடன், இதயம் பலப்படும் என லண்டனில் நடத்தப்பட்ட புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தூக்கத்திற்கும், மனிதர்களுக்கு ஏற்படும் இதய நோய்க்கும் தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. வாரம் முழுவதும் பிஸியான வேலைகளால் பலருக்கும் இரவில் தூக்கம் பாதிக்கப்படுவது உண்டு. ஆனால் ஒரு மணிதன் தினமும் இரவில் குறைந்தபட்சம் 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் வார நாட்களில் இப்படியான தூக்கத்திற்கு வாய்ப்பு இல்லாதவர்கள், வார இறுதி நாட்களில் அதிகமான நேரத்தை தூக்கத்திற்காக செலவிடுகிறார்கள்.

வார இறுதி நாட்களில் இது போல் முரட்டுத்தனமாக தூங்குவது உடலுக்கு கெடுதலை ஏற்படுத்தும் என பலரும் சொல்லி கேள்விபட்டிருக்கிறோம். இந்நிலையில் வார இறுதி நாட்களில் அதிக நேரம் தூங்குவதால் மனிதனுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகிறது? குறிப்பாக இதயத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதை கண்டறிவதர்காக லண்டன் இதயவியல் கழகம் ஒரு ஆய்வை நடத்தியது. மொத்தமாக 90.903 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்களில் அதிகமான நேரம் தூங்குபவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படும் அபாயம் 19 சதவீதம் வரை குறைவதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இதே போன்ற ஆய்வு சீனாவிலும் நடத்தப்பட்டுள்ளது. குறைவான தூக்கம் உடல்நலத்தை பாதிக்கும் என்றால், அதிகமான தூக்கம் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை கண்டறிவதற்காக தான் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் இது போல் அதிக நேரம் தூங்குவதால் நொறுக்கு தீனி சாப்பிடும் பழக்கம் அதிகரித்து, உடல் எடையும் அதிகரிப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது நடத்தப்பட்டுள்ள ஆய்வில, வார இறுதி நாட்களில் 16 மணி நேரம் வரை தூங்குபவர்களுக்கு இதய பாதிப்பு 19 சதவீதம் குறைவு. இதனால் வார நாட்களில் ஏற்படும் குறைவான தூக்கம், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை இது சமன் செய்து விடுவதாக சொல்லப்படுகிறது. சரியாக தூங்குவதால் உடல்பருமன் அபாயம் ஏற்படுவதை குறைத்து விட முடியாது.
.jpg)
அமெரிக்காவில் வசிப்பவர்களில் 42 சதவீதம் பேர் மட்டும் தான் போதுமான அளவிற்கு தூங்குகிறார்கள். ஆனால் 57 சதவீதம் பேர், வார இறுதியில் அதிக நேரம் தூங்குவதால் மட்டுமே தான் உற்சாகமாகவும், ஆரோக்கியமாகவும் உணர்வதாக தெரிவித்துள்ளனர்.
பிறகென்னப்பா.. வார இறுதி நாட்களில் உங்க வீட்டுல யாராச்சும் நல்லா இழுத்துப் போர்த்திக்கிட்டு சூப்பரா தூங்கினா.. அப்படியே விட்ருங்க.. தட்டி எழுப்பி அவங்க இதயத்தை நோகடிச்சுராதீங்க!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தினசரி 2 முறை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும்.. செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்
"வீட்டிலிருந்தபடியே ஓபி சீட்": அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு
TET ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளுக்கு இடைக்காலத் தடை: ஐகோர்ட் அதிரடி!
ஆரோக்கியா பால் மற்றும் தயிர் விலை திடீர் உயர்வு - நாளை முதல் அமல்!
அனைத்து தகுதியான பயனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் : முதல்வர் விஜய் உத்தரவு
கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை...அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!
Wayanad: வயநாடு நிலச்சரிவிற்கு இது தான் காரணம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
கிரீடம் அணிந்த மொட்டுகள்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
இமயமலையில் அவதரித்த.. தனித்துவ மலர்.. பிரம்ம கமலம்!
{{comments.comment}}