சென்னை: பராமரிப்பு பணிக்காக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே நாளை (மார்ச்-3) 44 புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மெட்ரோ ரயில் நிறுவனமும், மாநகர போக்குவரத்துக் கழகம் சிறப்பு மெட்ரோ மற்றும் பஸ்களை இயக்க ஏற்பாடு செய்துள்ளன.
சென்னை மக்கள் போக்குவரத்து நெரிசல் இன்றி பயணம் சென்று வர முக்கிய பங்கு வகிப்பது ரயில் சேவை தான். ரயில் சேவை இல்லை என்றால் சென்னை வாசிகள் பெரும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுவிடும் அந்த அளவிற்கு ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் அது மிகையல்ல என்றே சொல்லலாம். கடந்த சில வாரங்களாக வார இறுதியில் மின்சார ரயில்கள் பாராமரிப்பு பணி காரணமாக சேவைகள் ரத்து செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி நாளையும் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 44 ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை கோடம்பாக்கம் - தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (மார்ச் - 3) ஞாயிற்றுக்கிழமை சென்னை கடற்கரையிலிருந்து காலை 10:30 மணி முதல் மதியம் 2:30 மணிவரை தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதே போல் தாம்பரத்திலிருந்து காலை 10:05 மணி முதல் மாலை 4:30 மணி வரை சென்னை கடற்கரைக்கு வரும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து காலை 11:00 மணி முதல் மதியம் 2:15 மணி வரை செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் செங்கல்பட்டில் இருந்து காலை 9:40 மணி முதல் மதியம் ஒரு மணி வரை சென்னை கடற்கரைக்கு வரும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையிலிருந்து மதியம் 1:00 புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில் காஞ்சிபுரத்திலிருந்து காலை 9:30 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரைக்கு வரும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. மொத்தம் 44 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதையடுத்து மெட்ரோ ரயில் நிறுவனம் சிறப்பு ரயில்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதேபோல மாநகரப் போக்குவரத்துக் கழகமும், தாம்பரத்திலிருந்து சிறப்புப் பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}