சென்னை: பராமரிப்பு பணிக்காக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே நாளை (மார்ச்-3) 44 புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மெட்ரோ ரயில் நிறுவனமும், மாநகர போக்குவரத்துக் கழகம் சிறப்பு மெட்ரோ மற்றும் பஸ்களை இயக்க ஏற்பாடு செய்துள்ளன.
சென்னை மக்கள் போக்குவரத்து நெரிசல் இன்றி பயணம் சென்று வர முக்கிய பங்கு வகிப்பது ரயில் சேவை தான். ரயில் சேவை இல்லை என்றால் சென்னை வாசிகள் பெரும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுவிடும் அந்த அளவிற்கு ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் அது மிகையல்ல என்றே சொல்லலாம். கடந்த சில வாரங்களாக வார இறுதியில் மின்சார ரயில்கள் பாராமரிப்பு பணி காரணமாக சேவைகள் ரத்து செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி நாளையும் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 44 ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை கோடம்பாக்கம் - தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (மார்ச் - 3) ஞாயிற்றுக்கிழமை சென்னை கடற்கரையிலிருந்து காலை 10:30 மணி முதல் மதியம் 2:30 மணிவரை தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதே போல் தாம்பரத்திலிருந்து காலை 10:05 மணி முதல் மாலை 4:30 மணி வரை சென்னை கடற்கரைக்கு வரும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து காலை 11:00 மணி முதல் மதியம் 2:15 மணி வரை செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் செங்கல்பட்டில் இருந்து காலை 9:40 மணி முதல் மதியம் ஒரு மணி வரை சென்னை கடற்கரைக்கு வரும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையிலிருந்து மதியம் 1:00 புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில் காஞ்சிபுரத்திலிருந்து காலை 9:30 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரைக்கு வரும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. மொத்தம் 44 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதையடுத்து மெட்ரோ ரயில் நிறுவனம் சிறப்பு ரயில்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதேபோல மாநகரப் போக்குவரத்துக் கழகமும், தாம்பரத்திலிருந்து சிறப்புப் பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?
விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!
அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
{{comments.comment}}