இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்.. விறுவிறுப்பான வாக்குப் பதிவு.. 4 மணிக்கு மேல் வாக்கு எண்ணிக்கை!

Nov 14, 2024,11:59 AM IST

கொழும்பு: இலங்கையில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.


ஜனாதிபதித் தேர்தல் முடிந்து தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க புதிய ஜனாதிபதியாக பதவியேற்றார். இதையடுத்து செப்டம்பர் 24ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதை‌ தொடர்ந்து  உடனடியாக நாடாளுமன்றத் தேர்தல்  வரும் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.




இந்த நிலையில் 225 தொகுதிகளை கொண்ட இலங்கையில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் இன்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது இலங்கையின் 17 வது நாடாளுமன்ற தேர்தலாகும். இந்த தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.  வாக்குப்பதிவு நிறைவு பெற்ற உடனேயே வாக்குகள் எண்ணும் பணி தொடங்க இருக்கிறது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடு தீவிர படுத்தப்பட்டுள்ளது.


இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்காக 13,421 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் அரசியல் கட்சியை சார்ந்த வேட்பாளர்கள் 5,464 பேரும், சுயேச்சை வேட்பாளர்கள் 3,357  என மொத்தம் 8,821 பேர் போட்டியிடுகின்றனர். குறிப்பாக இதில் மூத்த அரசியல் கட்சியைச் சார்ந்த தலைவர்கள் போட்டியிடுவதை விட சுயேச்சையாக களம் காணும் வேட்பாளர்களே அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


நாடாளுமன்ற தேர்தல் இன்று காலை 4 மணிக்கு தொடங்கி அமைதியான முறையில் வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகிறது. இதற்காக பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வந்து வரிசையில் காத்திருந்து தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். நாடாளுமன்றத்தை ஜனாதிபதியின் அனுரா கட்சி கைப்பற்றினால், ஆட்சி நிர்வாகம் சிக்கல் இல்லாமல் போகும். வேறு கட்சி நாடாளுமன்றத்தைக் கைப்பற்றி விட்டால் அதிபரின் செயல்பாடுகள், திட்டங்கள் சிக்கலுக்குள்ளாகும் என்பதால் தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளன.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து விதமான தாக்குதல்களும் நிறுத்தப்பட்டன - இந்தியா அறிவிப்பு

news

தாக்குதலை உடனடியாக நிறுத்த இந்தியா, பாகிஸ்தான் ஒப்புதல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்

news

இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பேரணி.. ஆளுநர் பாராட்டு!

news

எனது வருவாயை தேசிய பாதுகாப்பிற்காக அளிக்கிறேன்...இளையராஜா அறிவிப்பு

news

அமேசானில் ரூபாய் 3 லட்சத்துக்கு பில்.. எதற்கு தெரியுமா?.. இந்த பயலை வச்சுக்கிட்டு!!

news

முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனைக் கூட்டம்

news

பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில்.. காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு.. பீதியில் உறைந்த மக்கள்‌‌..!

news

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இவரா?...செம சம்பவம் காத்திருக்கு போலவே

news

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்...aicwa அறிவுறுத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்