கொழும்பு: இலங்கையில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
ஜனாதிபதித் தேர்தல் முடிந்து தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க புதிய ஜனாதிபதியாக பதவியேற்றார். இதையடுத்து செப்டம்பர் 24ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து உடனடியாக நாடாளுமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் 225 தொகுதிகளை கொண்ட இலங்கையில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் இன்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது இலங்கையின் 17 வது நாடாளுமன்ற தேர்தலாகும். இந்த தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நிறைவு பெற்ற உடனேயே வாக்குகள் எண்ணும் பணி தொடங்க இருக்கிறது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடு தீவிர படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்காக 13,421 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் அரசியல் கட்சியை சார்ந்த வேட்பாளர்கள் 5,464 பேரும், சுயேச்சை வேட்பாளர்கள் 3,357 என மொத்தம் 8,821 பேர் போட்டியிடுகின்றனர். குறிப்பாக இதில் மூத்த அரசியல் கட்சியைச் சார்ந்த தலைவர்கள் போட்டியிடுவதை விட சுயேச்சையாக களம் காணும் வேட்பாளர்களே அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற தேர்தல் இன்று காலை 4 மணிக்கு தொடங்கி அமைதியான முறையில் வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகிறது. இதற்காக பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வந்து வரிசையில் காத்திருந்து தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். நாடாளுமன்றத்தை ஜனாதிபதியின் அனுரா கட்சி கைப்பற்றினால், ஆட்சி நிர்வாகம் சிக்கல் இல்லாமல் போகும். வேறு கட்சி நாடாளுமன்றத்தைக் கைப்பற்றி விட்டால் அதிபரின் செயல்பாடுகள், திட்டங்கள் சிக்கலுக்குள்ளாகும் என்பதால் தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தாவுடா செவலை தாவு.. கட்சி விட்டு கட்சி தாவுவது.. நம்ம ஊரு அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!
பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார் தமிழக முதல்வர் விஜய்.. நாளை டெல்லி பயணம்
கொளுத்துது வெயிலு.. தமிழ்நாட்டில் பள்ளித் திறப்பை ஒத்திவைக்க வலுக்கிறது கோரிக்கை
ADMK MLAs resignation: தொடரும் அதிமுக எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்
செங்கல் சூலை உரிமையாளர்களிடம் பணம் கேட்டு மிரட்டிய.. தவெக நிர்வாகி டிஸ்மிஸ் - விஜய் அதிரடி
பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி எரிவாயு விலை அதிரடி உயர்வு.. திகைப்பில் வாகன ஓட்டிகள்!
ஆஹா.. ஜென்ம சாபல்யம் நீங்கியது.. கண்டோம் பனி லிங்கத்தை.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 9)
தனிமைக் காதலன்.. எழுதுகோலுடன் என் பொழுதுகள்!
Sasikala Viswanathan: சந்தோசம்.. ஒரு 50 நொடிக் கதை!
{{comments.comment}}