சர்தார் 2 படப்பிடிப்பில் விபரீதம்.. கிரேன் விழுந்து விபத்து.. சண்டை பயிற்சியாளர் ஏழுமலை மரணம்

Jul 17, 2024,09:14 PM IST

சென்னை :  சர்தார் 2 படத்தின் சண்டைக்காட்சிகள் பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்று வந்த நிலையில், திடீரென  ஏற்பட்ட விபத்தில்  சண்டை பயிற்சியாளர் ஏழுமலை என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.  படக்குழுவினர் மிகுந்த மன வேதனை அடைந்தனர்.


ப்ரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பு பெற்றது. இது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.  இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில், கார்த்தி இப்படத்தில் அப்பா மகன் என்ற இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இவருடன் ரிஷி கண்ணா, லைலா, முனிஷ்காந்த் மற்றும் பலர் நடித்திருந்தனர். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.




இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாகம் தயாரிக்கப்படும் என ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.  அதன்படி, யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகும் சர்தார் 2 திரைப்படம் கடந்த வாரம் ஜூலை 12ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது. மேலும் இப்படத்தில் கார்த்தியுடன், எஸ் ஜே சூர்யாவும் இணைந்து நடிக்கவுள்ளார். 


இப்படத்தின் சண்டைக் காட்சிகள் சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டு வந்தது. அப்போது ஸ்டண்ட் பயிற்சியாளர் ஏழுமலை என்பவர் சண்டை பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.  சண்டை பயிற்சியின் எவ்வித  தற்காப்பும் இல்லாமல் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென 20 அடி உயரத்திலிருந்து கீழே தவறி விழுந்தார். 


கீழே விழுந்ததில் பலத்த அடிபட்டு ஏழுமலை உயிருக்குப் போராடினார். அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் உடனடியாக அவரை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் ஏழுமலை பரிதாபாக உயிரிழந்தார்.  மேலிருந்து கீழே விழுந்ததில் மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு நுரையீரலில் ரத்தம் கசிந்து அவர் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 


விருகம்பாக்கம் போலீசார் சம்பவ  இடத்திற்கு விரைந்து வந்து விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழக கோயில்களில் புதிய கட்டுப்பாடுகள்: செப்டம்பர் 01 முதல் செல்போன்களுக்குத் தடை

news

முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்பி.,க்கள் கூட்டம்: 37 எம்.பி.க்கள் புறக்கணிப்பு

news

முதல்வர் விஜய் அழைப்பு விடுத்த எம்.பிக்கள் கூட்டம்.. திமுக, அதிமுக புறக்கணிப்பு.. தேமுதிகவும் வராது

news

கரூர் அரசுப் பணி ரத்து வழக்கு: வரும் 14-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு விசாரணை

news

இலங்கை டெஸ்ட் தொடர்: காயத்தால் சாய் சுதர்சன் விலகலா?

news

‘ஃபார்ச்சூன்’ நிறுவனத்திற்கு அபராதம்: தரம் குறைந்த எண்ணெய் விற்பனையால் நடவடிக்கை

news

10 நிமிட டெலிவரி ஆப்களும்... ஓவர் 'ஸ்மார்ட்' வாடிக்கையாளர்களும்!

news

செக் மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

news

கத்திக் கரைகிறது கூட்டமாக சேர்ந்து

அதிகம் பார்க்கும் செய்திகள்