கவினும் நானும் உண்மையாக காதலித்தோம்... எங்க அப்பா அம்மாவுக்கு தொடர்பில்லை... சுபாஷினி விளக்கம்!

Jul 31, 2025,06:56 PM IST

நெல்லை:  திருநெல்வேலியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுர்ஜித் என்பவரால் பட்டியலின இளைஞர் கவின் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கவின், சுர்ஜித்தின் அக்காவுடன் பழகிய ஆத்திரத்தில், அவரை ஆணவக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு, உதவி ஆய்வாளர்களான சுர்ஜித்தின் தந்தை சரவணன் மற்றும் தாயார் கிருஷ்ணகுமாரி ஆகிய இருவரும் உடந்தையாக இருந்ததாக கவினின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.


இந்த வழக்கில் சுர்ஜித் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.  சுர்ஜித் மட்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது பெற்றோர்களையும் கைது செய்ய கவினின் குடும்பத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி,  அதுவரை உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். கவின் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையை தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.




 இந்நிலையில் கவின் காதலித்ததாக கூறப்படும் சுபாஷினி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், எனக்கும் கவினுக்கும் என்ன நடந்தது என்பது பற்றி எங்கள் இருவருக்கும் தான் தெரியும்.  எனக்கும் கவினுக்கும் இடையிலான உறவு குறித்து தெரியாமல் தவறாக கருத்துகளை தெரிவிக்க வேண்டாம்.  கவினும், நானும் உண்மையாக காதலித்தோம். 


எங்கள் ரிலேஷன்ஷிப் பற்றி யாரும் பேச வேண்டாம். 6 மாதம் கழித்து வீட்டில் கூறுமாறு கவின் சொ்லியதால், காதல் விவகாரத்தை என் தந்தையிடம் சொல்லவில்லை. வீட்டுக்கு பெண் கேட்க வருமாறு சுர்ஜித்தான், கவினை அழைத்தான்.கவின் கொலைக்கும் எங்கள் அப்பா அம்மாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவர்களை தண்டிக்க வேண்டும் என நினைப்பது தவறு. அவர்களை விட்டுவிடுங்கள். இந்த சூழலில் என்னுடைய உணர்வுகளுக்கும், நான் என்ன நினைக்கிறேன் என்பதற்கும் மதிப்பளியுங்கள் என கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

காங்கிரஸ் செய்த தவறுகளைத் திருத்தவே எங்களுக்கு நேரம் போதவில்லை.. பிரதமர் மோடி

news

பிரதமர் மீது தாக்குதல் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டம்...பகீர் கிளப்பிய சபாநாயகர் ஓம் பிர்லா

news

சபாநாயகர் சொன்னது மிகப்பெரிய பொய்...காங்கிரஸ் எம்.பி சுதா காந்திமதிநாதன் காட்டம்

news

பார்லிமென்ட்டில் புயலை கிளப்பிய திமுக அமைச்சரின் பேச்சு...திமுக-காங்கிரஸ் கடும் மோதல்

news

"அந்தப் பெரிய இடம் யார்?" - மடப்புரம் அஜித்குமார் மரண விவகாரத்தில் தாய் ஆவேச பேட்டி

news

மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு

news

தவெக தேர்தல் அறிக்கைக்காக மக்களிடம் கருத்து கேட்க புதிய இணையதளம்

news

தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம்: பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு

news

பீகார் தேர்தல் முடிவுகளை ரத்து செய்யுங்க...சுப்ரீம் கோர்ட்டில் பிரசாந்த் கிஷோர் மனு

அதிகம் பார்க்கும் செய்திகள்