சென்னை பீச் டூ தாம்பரம் இடையே ..ஞாயிற்றுக்கிழமை புறநகர் ரயில் சேவை ரத்து.. தெற்கு ரயில்வே!

Mar 08, 2025,06:16 PM IST

சென்னை: சென்னை பீச் டூ தாம்பரம் இடையேயான புறநகர் மின்சார ரயில் சேவை நாளை மறுநாள்(9.3.2025)ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.



சென்னை பீச் டூ எழும்பூர் இடையே அமைக்கப்பட்டுள்ள நாலாவது வழித்தடத்தில் நாளை மறுநாள் அதாவது ஞாயிற்றுக்கிழமமை ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற இருப்பதால் அப்பகுதியில் செல்லும் புறநகர் மின்சார ரயிலின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


அதன்படி, வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 5.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை சென்னை பீச் டூ தாம்பரம் இடையேயான புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படும்.




கூடுதலாக பயணிகளின் வசதிக்காக தாம்பரம் டூ கோடம்பாக்கம் இடையே 30 நிமிட இடைவேளையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அதேசமயம் நாளை மறுநாள் செங்கல்பட்டு- காஞ்சிபுரம்-

திருமால்புரம்- அரக்கோணம் இடையேயான புறநகர் ரயில் சேவைகளும்  ரத்து செய்யப்பட்டுள்ளன.


ஞாயிற்றுக்கிழமை மாலை 4.10 மணிக்கு பிறகு புறநகர் ரயில் சேவை அட்டவணைப்படி மீண்டும் ரயில் சேவைகள் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்