சென்னை: சென்னை பீச் டூ தாம்பரம் இடையேயான புறநகர் மின்சார ரயில் சேவை நாளை மறுநாள்(9.3.2025)ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை பீச் டூ எழும்பூர் இடையே அமைக்கப்பட்டுள்ள நாலாவது வழித்தடத்தில் நாளை மறுநாள் அதாவது ஞாயிற்றுக்கிழமமை ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற இருப்பதால் அப்பகுதியில் செல்லும் புறநகர் மின்சார ரயிலின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 5.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை சென்னை பீச் டூ தாம்பரம் இடையேயான புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படும்.

கூடுதலாக பயணிகளின் வசதிக்காக தாம்பரம் டூ கோடம்பாக்கம் இடையே 30 நிமிட இடைவேளையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அதேசமயம் நாளை மறுநாள் செங்கல்பட்டு- காஞ்சிபுரம்-
திருமால்புரம்- அரக்கோணம் இடையேயான புறநகர் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை மாலை 4.10 மணிக்கு பிறகு புறநகர் ரயில் சேவை அட்டவணைப்படி மீண்டும் ரயில் சேவைகள் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளது.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}