சென்னை: கடுமையான வயிற்று வலி காரணமாக நடிகர் ரஜினிகாந்த் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பயப்படும்படி எதுவும் இல்லை என்று அவரது மனைவி லதா ரஜினிகாந்த் விளக்கியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் படம் தயாராக உள்ளது. இந்த மாதம் வேட்டையன் திரைக்கு வரவுள்ளது. இதற்கான முஸ்தீபுகளில் படக் குழு தீவிரமாக உள்ளது. இப்படத்தின் மனசிலாயோ பாடலும் கூட வெளியாகி வைரலானது. சமீபத்தில் இதன் ஆடியோ வெளியீட்டு விழாவும் கூட கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிலையில் ரஜினிகாந்த்துக்கு நேற்று நள்ளிரவுக்கு மேல் திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. கடுமையான வலியால் அவதிப்பட்ட அவர் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.
இதுகுறித்து ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்ததிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோது, கவலைப்படும்படி, பயப்படும்படி எதுவும் இல்லை என்று அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, ரஜினிகாந்த்துக்கு இன்று பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருதயவியல் நிபுணர் டாக்டர் சாய் சதீஷ் இன்று ரஜினிக்கு பரிசோதனைகளை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்ததும் அவரது ரசிகர்கள் கவலை அடைந்தனர். விரைவில் அவர் குணம் பெற வேண்டும் என்று பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. அனைவருக்குமான பாடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பீகார் தேர்தல் முடிஞ்சாச்சு.. பாஜக.,வின் அடுத்த கவனம் எங்கு தெரியுமா.. இங்கு தான்!
நயினார் நாகேந்திரனுக்கு பாஜக தலைமை கொடுத்த 'அசைன்மென்ட்' இது தானாமே!
புதிய காற்றழுத்த தாழ்வு.. நவம்பர் 17ம் தேதி 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு - வானிலை மையம்
10 ஆண்டுகளில் பாஜக.வின் அசுரத்தனமான வளர்ச்சி... யாருக்கெல்லாம் ஆபத்து?
எங்களை அழைக்காமல் கூட்டம் போட்டால் எப்படி.. தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கேள்வி
74 வயதிலும் டப் கொடுக்கும் நிதீஷ் குமார்.. தேஜஸ்வி, காங்கிரஸ் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு!
தூய்மையின் வடிவம் மற்றும் புத்திசாலித்தனத்தின் அற்புதம் (குழந்தைப் பருவம்)
கல்வி கற்பதின் நோக்கம் பணம் சம்பாதிக்க மட்டுமல்ல.. விட்டுக்கொடுத்தும், பற்றி வாழ்தலுமே!
{{comments.comment}}