சென்னை: கடுமையான வயிற்று வலி காரணமாக நடிகர் ரஜினிகாந்த் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பயப்படும்படி எதுவும் இல்லை என்று அவரது மனைவி லதா ரஜினிகாந்த் விளக்கியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் படம் தயாராக உள்ளது. இந்த மாதம் வேட்டையன் திரைக்கு வரவுள்ளது. இதற்கான முஸ்தீபுகளில் படக் குழு தீவிரமாக உள்ளது. இப்படத்தின் மனசிலாயோ பாடலும் கூட வெளியாகி வைரலானது. சமீபத்தில் இதன் ஆடியோ வெளியீட்டு விழாவும் கூட கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிலையில் ரஜினிகாந்த்துக்கு நேற்று நள்ளிரவுக்கு மேல் திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. கடுமையான வலியால் அவதிப்பட்ட அவர் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.
இதுகுறித்து ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்ததிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோது, கவலைப்படும்படி, பயப்படும்படி எதுவும் இல்லை என்று அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, ரஜினிகாந்த்துக்கு இன்று பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருதயவியல் நிபுணர் டாக்டர் சாய் சதீஷ் இன்று ரஜினிக்கு பரிசோதனைகளை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்ததும் அவரது ரசிகர்கள் கவலை அடைந்தனர். விரைவில் அவர் குணம் பெற வேண்டும் என்று பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு...மாவட்ட வாரியாக நீக்கப்பட்டவர்கள் விபரம்
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முழுமையாக ஒழிக்கவே பெயர் மாற்றம் - திருமாவளவன்
செவிலியர்களுக்கு காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்
திமுக அரசால் பணிநீக்கம் செய்யபட்ட செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும்:எடப்பாடி பழனிச்சாமி
அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா? இல்லையா?... இதோ வானிலை கொடுத்த அப்டேட்!
பிட்புல், ராட்வைலர் நாய்களை வளர்க்கக் கூடாது... மீறினால் 1 லட்சம் அபராதம்: மேயர் பிரியா!
வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை...நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு
விஜய் தான் களத்தில் இல்லை.. திடீரென வருகிறார்.. திடீரென காணாமல் போகிறார்: தமிழிசை செளந்தரராஜன்
ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள்... ஜன.,5ம் தேதிக்குள் வெளியிட சென்னை ஐகோர்ட் உத்தரவு!
{{comments.comment}}