தேவகோட்டை : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா ஷுக்கள், காலணிகள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா ஷுக்கள், காலணிகள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்களின் பெற்றோர்களும் பிற ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஆசிரியர் கழக உறுப்பினர்கள் லெட்சுமி மற்றும் கருப்பையா ஆகியோர் வழங்கினார்கள். இந்த ஷுக்கள், காலணிகளை மாணவர்களின் பெற்றோர்கள் மாணவர்களுடன் சேர்ந்து பெற்றுக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துலெட்சுமி, முத்து மீனாள் ஆகியோர் செய்து இருந்தனர்.

தமிழக பள்ளி கல்வித் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு ஷுக்கள் வழங்கப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் ஷுக்கள் பெற்றதில் மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளனர்.
மீனவர்களை விடுவிக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
SIR வேண்டாம் என்று திமுக உச்ச நீதிமன்றம் சென்றால், அதிமுக SIR வேண்டும் என செல்வோம்: ஜெயக்குமார்
தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை விஜய் வலியுறுத்தல்!
கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சென்னை தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை!
அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்.. நவ., 6ல் அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழ்நாடு அரசு!
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்!
கோவை விமான நிலையம் அருகே அதிர்ச்சி... மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
'NO' சொல்ல தயக்கமா?.. தயங்காமல் சொல்லுங்க.. சொல்ல வேண்டிய இடத்தில்!
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே.. இரவானால் பகல் ஒன்று வந்திடுமே!
{{comments.comment}}