தேவகோட்டை : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா ஷுக்கள், காலணிகள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா ஷுக்கள், காலணிகள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்களின் பெற்றோர்களும் பிற ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஆசிரியர் கழக உறுப்பினர்கள் லெட்சுமி மற்றும் கருப்பையா ஆகியோர் வழங்கினார்கள். இந்த ஷுக்கள், காலணிகளை மாணவர்களின் பெற்றோர்கள் மாணவர்களுடன் சேர்ந்து பெற்றுக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துலெட்சுமி, முத்து மீனாள் ஆகியோர் செய்து இருந்தனர்.
தமிழக பள்ளி கல்வித் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு ஷுக்கள் வழங்கப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் ஷுக்கள் பெற்றதில் மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளனர்.
கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர் -முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை... வானிலை மையம் தகவல்!
திமுக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் தான் ஆசிரியர்கள் போராடுகின்றனர்... சீமான் ஆவேசம்!
பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு விராட் கோலி விடுத்த வீடியோ அழைப்பே காரணம்.. கர்நாடக அரசு
ஏர் இந்தியா விமானத்தின் எரிபொருள் சப்ளையை கேப்டன்தான் துண்டித்தார்.. அமெரிக்க ஊடகம் தகவல்
ஆகஸ்ட் முதல் 125 யூனிட் வரை மின்சாரம் இலவசம்: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவிப்பு!
காமராஜர்.. உயிருடன் இருந்தபோது தொடங்கியது.. திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்.. அன்புமணி ராமதாஸ்
காமராஜர் குறித்து பரப்பிய கட்டுக்கதைகள்.. ஜோதிமணி வேதனை.. பெரிதுபடுத்தாதீர்கள்.. திருச்சி சிவா!
வயிறு உப்புசமா இருக்கா?.. இதுக்கு இந்த பழக்க வழக்கங்களே காரணமா இருக்கலாம்!
{{comments.comment}}