மகா கும்பமேளாவில் புனித நீராடிய.. தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி..!

Feb 22, 2025,03:06 PM IST

லக்னோ: பிரயாக்ராஜ்ஜில்  நடைபெற்று வரும் மகா கும்பமேளா இன்னும் நான்கு நாட்களில் நிறைவடைய உள்ள நிலையில், தமிழக ஆளுநர் ஆர் என் ரவி அவரது குடும்பத்துடன் புனித நீராடினார்.


உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் எனும் இடத்தில் கங்கா, நர்மதா, சரஸ்வதி, என்ற மூன்று ஆறுகள் சந்திக்கும் திரிவேணி சங்கமத்தில் பிப்ரவரி 26 ஆம் தேதி முதல்  மகாசிவராத்திரி வரை மொத்தம் 44 நாட்கள் மகா கும்பமேளா கொண்டாடப்பட்டு வருகிறது. மகா கும்பமேளாவில் புனித நீராடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. 


அதாவது 144 வருடங்களுக்குப் பிறகு தற்போது நடைபெற்று வரும் இந்த மகா கும்பமேளாவில் பண்டிதர்கள், ஞானிகள், போகிகள்,  ரிஷிகள், முக்கிய பிரபலங்கள், தலைவர்கள் மற்றும் பக்தர்கள் என பலரும் புனித நீராடி வருகின்றனர். இதுவரை 50 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் கும்பமேளாவில் நீராடி உள்ளனர். இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சி, உலகத்திலேயே மிகப்பெரிய விழாவாகவும், உலக மக்கள் ஒன்றாகக் கூடி கொண்டாடும் விழாவாகவும் UNESCO அங்கிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




இந்த நிலையில், பிரயாக்ராஜ்ஜில் தற்போது நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிறைவடைய இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி,அவரது மனைவி மற்றும் குடும்பத்தாருடன் மகா கும்பமேளாவில் புனித நீராடியுள்ளார். அங்கு நடைபெற்ற காசி தமிழ் சங்கம் விழாவிலும் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் பேசியதாவது,


பாரதம் மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து வந்த எண்ணற்ற கோடிக்கணக்கான ஹிந்துக்களுடன் சேர்ந்து, பிரயாக்ராஜ்ஜின் புண்ணிய தீர்த்தமான திவ்ய, பவ்ய மகாகும்பத்தில் புனித நீராடி, தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளின் நல்வாழ்வுக்காகவும், நமது மாபெரும் தேசமான பாரதத்தின் இணக்கமான வளத்துக்காகவும்  வேண்டி வழிபட்டேன். இங்கு காற்றில் பரவியுள்ள தீவிரமான நேர்மறை சக்தி அனைவரையும் ஆழமாகத் தொட்டு, மற்றவர்களுடன் இணைக்கிறது. சுமார் 60 கோடி சனாதனிகள் ஏற்கெனவே புனித நீராடிய இந்த தனித்துவமான மற்றும் பிரம்மாண்டமான சனாதன தர்ம விழா, மறுமலர்ச்சியடைந்த ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் உறுதியான சான்றாகும் என பேசியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எங்களை அழைக்காமல் கூட்டம் போட்டால் எப்படி.. தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கேள்வி

news

குழந்தைகளைக் கொண்டாடுவோம்.. வெறும் பேச்சளவில் இருந்தால் எப்படி...??

news

பெண்கள் கவலைப்படுவதை அல்லாஹ் ஏன் விரும்புவதில்லை?

news

அதிர்ஷ்டம்

news

விஷால் தொடர்ந்த அப்பீல் மனு.. விசாரிக்க நீதிபதி ஜெயச்சந்திரன் மறுப்பு.. வேறு பெஞ்சுக்கு பரிந்துரை

news

74 வயதிலும் டப் கொடுக்கும் நிதீஷ் குமார்.. தேஜஸ்வி, காங்கிரஸ் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு!

news

Gold price:அதிரடியாக குறைந்தது தங்கம் விலை...இன்று மட்டும் சவரனுக்கு ரூ.1,520 குறைவு!

news

தூய்மையின் வடிவம் மற்றும் புத்திசாலித்தனத்தின் அற்புதம் (குழந்தைப் பருவம்)

news

கல்வி கற்பதின் நோக்கம் பணம் சம்பாதிக்க மட்டுமல்ல.. விட்டுக்கொடுத்தும், பற்றி வாழ்தலுமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்