சென்னை: இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெறும் கோலாகலமான பாராட்டு விழா இன்று மாலை சென்னையில் நடைபெற்றது.
இசைஞானி இளையராஜா திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 50 ஆண்டு கால இசைப் பயணத்தில் அவர் செய்துள்ள சாதனைகள் 100 ஆண்டுகளையும் தாண்டி நீளும். அந்த அளவுக்கு வரலாறு படைத்துள்ள இசைஞானிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி பாராட்டு விழா இன்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

சிம்பொனி சிகரம் தொட்ட தமிழ் இசைஞானி இளையராஜா பொன் விழா ஆண்டு 50- என்ற தலைப்பில் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பிக்கள், ரஜினிகாந்த், கமல்ஹாசன், கங்கை அமரன் உள்ளிட்ட திரைத்துறையினர், பல்துறைப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே பாடலை இளையராஜா தனது இருக்கையில் அமர்ந்தபடி குழுவினருடன் பாடினார். அப்போது தனக்கு அருகே அமர்ந்திருந்த கமல்ஹாசனையும் கூடப் பாடுமாறு அவர் சைகை காட்ட, கமலும் இணைந்து பாடி மகிழ்ந்தார். தொடர்ந்து இளையராஜாவின் இசையில் உருவான சூப்பர் ஹிட் பாடல்களை இசைக் குழுவினர் இசைத்து வருகின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்து கொடுத்த பாடல்களை இளையராஜா இசைக்குழுவினர் பாடினர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நீடித்தி இந்த இசை மழை அத்தனை பேரையும் நெகிழ வைத்தது. கமல்ஹாசன், ரஜினிகாந்த் பாடல்கள்தான் பெரும்பாலும் அதில் இடம் பெற்றிருந்தது.
தற்காலிக ஓய்வு.. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடிதத்தில் உள்ளது என்ன.. யாருக்கான மெசேஜ் இது?
மே 20ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் - அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
பேரம் பேச வேண்டிய அவசியமில்லை – விசிக தலைவர் திருமாவளவன் காட்டம்
இதுதான் உங்களது நாகரிக அரசியலா முதல்வர் விஜய் அவர்களே.. வானதி சீனிவாசன் கேள்வி
இளையராஜாவுக்கு 1540.. கார்த்திக் சுப்பராஜுக்கு 10.. ஒரு ஸ்வீட் செய்தி!
பொது வாழ்வில் இருந்து பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஓய்வு அறிவிப்பு! அதிர்ச்சியில் திமுகவினர்
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை விலகல்...காரணம் இது தான்
உயிரை உலுக்கும் பனி.. 200 வகையான சாப்பாடு.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 7)
பாரதி பாவாணர் செந்தமிழ் வானம் 4ம் ஆண்டு விழா.. முனைவர் லதாவின் 3 நூல்கள் வெளியீடு
{{comments.comment}}