- பாரதிராஜன்
காலையில் மளிகைக்கடை திறந்ததும் வந்த ஒரு விதவைப் பெண்மணி,கடை முதலாளியிடம், நான் நேற்றுப் பொருட்கள் வாங்கினேன், மீதம் கொடுக்கும் போது 10 ரூபாய் அதிகமாக கொடுத்து விட்டீர்கள், அதை திரும்ப தர வந்தேன் என்றாள் அந்தப் பெண்மணி.
கடைமுதலாளி ஏம்மா நீ தானே விலை குறைவாகக் கொடுக்கச் சொல்லி சத்தம் போட்டே, இப்ப வந்து பத்து ரூபாய் திரும்பத் தரேன் என்றதும் அந்த விதவைப்பெண், விலை குறைவாக கேட்கலாம் ஆனால் உங்களுடைய பொருள் எனக்கு வேணடாம், என் தந்தை மற்றும் என் கணவர் என்னிடம் அடுத்தவர் பொருளுக்கோ, பொன்னுக்கோ ஆசைப்படாதே, நமக்கு மேல் இருப்பவன் நம்மை சும்மா விடமாட்டான் என்ற படியே பணத்தை திரும்ப கொடுக்க அவர், நீ எங்கிருந்து வரே என்றதும், நகரில் இருந்து 6 கி.மீ தூரமுள்ள நகர் என்றாள்.
நேற்று இரவு வந்தேன் கடை பூட்டி யிருந்ததால் காலை வந்தேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினாள். என்னம்மா இந்த ப்பெண் இந்த பத்து ரூபாய் திரும்ப த்தர இரண்டு முறை வந்திருககே என்ற படியே, முதலாளி கடைப் பையனிடம், டேய் கடையைப் பார்த்துக்கோ. இதோ வரேன் என கல்லாவில் இருந்து ரூ. 5,00/__எடுத்துக் கொண்டு, பிரகாஷ் என்ற நபரிடம், நீ நேற்று வாங்கிய பொருட்கள் சிலவற்றுக்கு அதிக விலை சொல்லிவிட்டேன், அதனால் அதன் சரியான விலைப்படி உனக்கு சேர வேண்டிய தொகை எனக்கூறி கொடுக்க, ஏன் நீ இதை கொடுக்க வேண்டிய அவசியமா என்ன? என்றதற்கு, அப்பா நாம் அடுத்த வர் பொருளுக்கு ஆசைப்பட்டால், நமக்கு மேலே இருப்பவன் சும்மா இருக்க மாட்டான் என்றபடியே கடை முதலாளி கிளம்பினார்.

பிரகாஷ்க்கு திடீரென ஷாக் அடித்த மாதிரி இருந்தது. ஆம் கொஞ்ச வருடத்திற்கு முன் பிரகாஷ் ஒரு நண்பரிடம் ரூ. இரண்டு லட்சம் கடனாக வாங்கி இருந்தான். பணம் கொடுத்தவனிடம் பிரகாஷ் எதுவும் எழுதிக்கொடுக்கவில்லை. பிரகாஷ் ஆஹா நல்ல விஷயம் நண்பன் காலமாகி விட்டான், பணத்தை திரும்ப த்தராமல் இருக்க முடிவு செய்தான் பிரகாஷ். இப்ப இந்த முதலாளி பணம் ரூ 5,00/_திரும்பக் கொடுத்ததால்,பிரகாஷ்க்கு இரவு முழுக்க தூக்கம் வரவே இல்லை, காலையில் எழுந்ததும் முதலில் அந்த நண்பன் வீட்டுக்குப்போக முடிவுசெய்து பிரகாஷ் பத்து இலட்சம்
பணத்துடன் நண்பன் வீட்டைத்தேடி நண்பன் மனைவியிடம் காலில் விழுந்து மன்னிப்புக்கேட்டு பணத்தைக் கொடுத்தான் நண்பன் மனைவியிடம்.
யார் அந்தப்பெண் என்றால் கடை முதலாளியிடம் பத்து ரூபாயைத் திரும்பக் கொடுத்தவள்.
(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)
சிந்தனைச் சிதறல்.. இன்றைய எதிர்பார்ப்புகளே நாளைய மகிழ்வைத் தீர்மானிக்கும்!
மேம்.. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.. அவளின் (ல்) அவன்! (16)
Things We Can Learn from CM Vijay.. முதல்வர் விஜய்யிடமிருந்து நாம் கத்துக்க வேண்டியவை!
Tamil Short Story: 10 ரூபாய்க்கு 13 லட்சம்!
Summer special Mango Icecream.. மாம்பழ ஐஸ்க்ரீ்ம்.. கேட்கவே ஸ்வீட்டா இருக்குல்ல!
Time is Borrowed, Use It Well
When life is easy thank God When life is tough trust in God.. கடவுளைத் திட்டாதீங்கப்பா!
சாமானிய மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அம்மா உணவகங்களைப் புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
தற்காலிக ஓய்வு.. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடிதத்தில் உள்ளது என்ன.. யாருக்கான மெசேஜ் இது?
{{comments.comment}}