சென்னை: பாரதியார் இன்று இருந்திருந்தால் பிரதமர் மோடியை வாழ்த்தி பாடல் பாடியிருப்பார் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மகாகவி பாரதியாரின் 144வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று சென்னையில் உள்ள பாரதியார் சிலைக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பாரதியாருக்கு வணக்கம் சொல்லும் இந்த நேரத்தில் பிரதமர் மோடிக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவில் எந்த பிரதமரும் பாரதியாருக்கும், வஉசிக்கும் மரியாதை செலுத்தியதே கிடையாது.
இன்று பாரதியார் இருந்திருந்தால், பிரதமர் மோடியை வாழ்த்தி பாடல் பாடியிருப்பார். ஏன் என்றால் தேசியத்தையும் தெய்வீகத்தையும் பிரதமர் முன்னிறுத்திக் கொண்டிருக்கிறார். அதேபோல் அண்ணா அறிவாலயத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தேசிய கொடியை கூட திமுக ஏற்றியதே இல்லை. ஆனால் தேசப்பற்று பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் திருச்சி சிவா போன்றவர்கள் இன்று நாடகமாடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழுக்கு பிரதமர் பிரம்மாண்டமான மரியாதை செய்து கொண்டிருக்கிறார்.

ஆனால் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் டெல்லி பாதுஷா என்று அப்படி இப்படி என்று பேசிக்கொண்டு இருக்கிறார். பாரதியாருக்கு சாதியை வைத்து திமுக அரசு இதுவரை விழா எடுக்கவில்லை. 2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி வென்ற பிறகு பாரதியாரை கொண்டாடி அரசு சார்பில் பிரம்மாண்ட அளவில் விழா நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்
மீண்டும் வரலாறு .. ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத் தேர்தல்.. தவெகவுக்கு முதல் எம்.பி. கிடைக்க வாய்ப்பு!
திமுகவிடம் கண்ணியம் இல்லை; ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்: ஆதவ் அர்ஜூனா ஆவேசம்
ஒரு புதிய வரலாறு.. முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்த விசிக, முஸ்லீம் லீக்!
சாதாரணத்தில் இருந்து அ(மிக)சாதாரணத்திற்கு… (Ordinary to Extraordinary..)
ஆஹா, உன்னைக் காண இதோ வந்து கொண்டே இருக்கிறேன்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 8)
கோடை வெயில் ஆபத்தாகாமல் இருக்க வீட்டில் இந்த 10 தவறுகளை செய்துடாதீங்க
வைகாசி விசாகம் 2026.. முருகப் பெருமானுக்குரிய முக்கிய தினம்.. மிக மிக சிறப்பு!
தாயன்பு !
All Is Well.. சவால்களை நம்பிக்கையுடன் சந்திப்போம்!
{{comments.comment}}