சென்னை: பாரதியார் இன்று இருந்திருந்தால் பிரதமர் மோடியை வாழ்த்தி பாடல் பாடியிருப்பார் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மகாகவி பாரதியாரின் 144வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று சென்னையில் உள்ள பாரதியார் சிலைக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பாரதியாருக்கு வணக்கம் சொல்லும் இந்த நேரத்தில் பிரதமர் மோடிக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவில் எந்த பிரதமரும் பாரதியாருக்கும், வஉசிக்கும் மரியாதை செலுத்தியதே கிடையாது.
இன்று பாரதியார் இருந்திருந்தால், பிரதமர் மோடியை வாழ்த்தி பாடல் பாடியிருப்பார். ஏன் என்றால் தேசியத்தையும் தெய்வீகத்தையும் பிரதமர் முன்னிறுத்திக் கொண்டிருக்கிறார். அதேபோல் அண்ணா அறிவாலயத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தேசிய கொடியை கூட திமுக ஏற்றியதே இல்லை. ஆனால் தேசப்பற்று பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் திருச்சி சிவா போன்றவர்கள் இன்று நாடகமாடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழுக்கு பிரதமர் பிரம்மாண்டமான மரியாதை செய்து கொண்டிருக்கிறார்.

ஆனால் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் டெல்லி பாதுஷா என்று அப்படி இப்படி என்று பேசிக்கொண்டு இருக்கிறார். பாரதியாருக்கு சாதியை வைத்து திமுக அரசு இதுவரை விழா எடுக்கவில்லை. 2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி வென்ற பிறகு பாரதியாரை கொண்டாடி அரசு சார்பில் பிரம்மாண்ட அளவில் விழா நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு சட்டசபைக்கு ஏப்ரல் 23, புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ம் தேதி தேர்தல்.. மே 4ல் வாக்கு எண்ணிக்கை
TN Assembly Elections: தமிழ்நாட்டில் 75,032 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.. தேர்தல் ஆணையம்
தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள்.. இதையெல்லாம் பின்பற்றணும்!
விஜய் பையில் கத்திரிக்கோல்.. ஆதவ் அர்ஜூனாவிடம் மது பாட்டில்.. பரபரத்த சென்னை ஏர்போர்ட்!
எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிப்பு...தமிழகத்தில் வேகமெடுக்கும் அரசு பணிகள்
Iran-Israel War: மேற்கு ஆசியப் போர் எதிரொலி - சமையல் எண்ணெய் விலை அதிரடி உயர்வு
10 ஏவுகணைகளை ஏவி அதிரடி காட்டிய கிம்மின் வடகொரியா.. கிலியில் அண்டை நாடுகள்!
வணிக பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடு: உணவகங்களுக்கு மின்சார மானியம் அறிவிப்பு
மதுரை விமான நிலையம்.. திருத்தம்.. மதுரை சர்வதேச விமான நிலையம்.. மத்திய அரசு ஆணை!
{{comments.comment}}