பாரதி இன்று இருந்திருந்தால், பிரதமருக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார் - தமிழிசை சௌந்தரராஜன்

Dec 11, 2025,05:40 PM IST

சென்னை: பாரதியார் இன்று இருந்திருந்தால் பிரதமர் மோடியை வாழ்த்தி பாடல் பாடியிருப்பார் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


மகாகவி  பாரதியாரின் 144வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று சென்னையில்  உள்ள பாரதியார் சிலைக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பாரதியாருக்கு வணக்கம் சொல்லும் இந்த நேரத்தில் பிரதமர் மோடிக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவில் எந்த பிரதமரும் பாரதியாருக்கும், வஉசிக்கும் மரியாதை செலுத்தியதே கிடையாது.


இன்று பாரதியார்  இருந்திருந்தால், பிரதமர் மோடியை வாழ்த்தி பாடல் பாடியிருப்பார். ஏன் என்றால் தேசியத்தையும் தெய்வீகத்தையும் பிரதமர் முன்னிறுத்திக் கொண்டிருக்கிறார். அதேபோல் அண்ணா அறிவாலயத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தேசிய கொடியை கூட திமுக ஏற்றியதே இல்லை. ஆனால் தேசப்பற்று பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் திருச்சி சிவா போன்றவர்கள் இன்று நாடகமாடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழுக்கு பிரதமர் பிரம்மாண்டமான மரியாதை செய்து கொண்டிருக்கிறார்.




ஆனால் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் டெல்லி பாதுஷா என்று அப்படி இப்படி என்று பேசிக்கொண்டு இருக்கிறார். பாரதியாருக்கு சாதியை வைத்து திமுக அரசு இதுவரை விழா எடுக்கவில்லை. 2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி வென்ற பிறகு பாரதியாரை கொண்டாடி அரசு சார்பில் பிரம்மாண்ட அளவில் விழா நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நேபாள வெள்ளப்பெருக்கு: கைலாஷ் யாத்திரை சென்ற 22 தமிழர்கள் பத்திரமாக மீட்பு

news

Mettur Dam: மேட்டூர் அணை திறப்பு...சேலம் செல்கிறாரா முதல்வர் விஜய்? அதிகாரிகள் திடீர் ஆய்வு

news

பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து...நிலங்கள் திருப்பிக் கொடுக்கப்படுமா? அமைச்சர் ராஜ்மோகன் பதில்

news

தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் பரவல் அதிகரிப்பு.. இந்த அறிகுறிகள் இருந்தால்.. காதாரத்துறை எச்சரிக்கை

news

குழந்தை பெற்றால் ரூ.55 லட்சம் நிதியுதவி...பிறப்பு விகிதத்தை உயர்த்த சிங்கப்பூர் அரசு அதிரடி

news

சென்னை மழை முன்னெச்சரிக்கை பணிகள்: 15 மண்டலங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

news

திருஞானசம்பந்தருக்கு முத்துப் பல்லாக்கு கொடுக்கச் சொன்ன சிவபெருமான்!

news

வள்ளிமயிலும்.. கேஸ் கம்பெனியின் eKYC யும்!

news

சிந்தனைச் சிதறல்... மதிப்பு என்பது நாம் வகிக்கும் பதவியைப் பொறுத்து வருவதில்லை!

அதிகம் பார்க்கும் செய்திகள்