சென்னை: தமிழக சட்டப்பேரவை அக்டோபர் 14ம் தேதி கூடுகிறது என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
இந்தாண்டிற்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஜனவரி மாதம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அன்று ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறினார். அதன்பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் 4 நாட்கள் நடைபெற்றது. இதனையடுத்து, 2025-26ம் ஆண்டிற்கான பட்ஜெட் மார்ச் 14ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மார்ச் 15ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மார்ச் 17 முதல் மார்ச் 22 வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இதன்பின் மார்ச் 24 முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை துறை ரீதியிலான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.
இந்த நிலையில் 6 மாத இடைவெளியில் மீண்டும் சட்டப்பேரவை கூட்டப்பட வேண்டும் என்ற விதியின் அடிப்படையில், தற்போது அக்டோபர் 14ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சபாநாயகர் அப்பாவு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி காலை 9:30 கூடுகிறது. மேலும் அன்றைய தினம் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மறைமுக வால்பாறை சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர் மறுமை குறித்து இரங்கல் குறிப்பு தெரிவிக்கப்படும்.
அதேபோல் அன்றைய தினம் 2025 - 26 ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. அலுவலக கூட்டம் பேரவை கூடுவதற்கு முன்னர் ஒரு நாள் அலுவல் ஆய்வு கூடி கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது முடிவு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.
தமிழக பட்ஜெட் 2026 எப்போது?: முதலமைச்சர் விஜய் தலைமையில் துறை வாரியான ஆலோசனை
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? என்ன மு.க.ஸ்டாலின் இப்படி சொல்லிட்டார்?
தூய்மைப் பணிகள் தனியார் மயம்: பலத்த எதிர்ப்பால் டெண்டரை ரத்து செய்தது அரசு!
"நாங்கள் அஞ்சி விடமாட்டோம்" – ரெய்டு பற்றி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!
அடிச்சது யாரைத் தெரியுமா.. ஜெர்மனியை வீழ்த்திய ஈக்வடார்... நாட்டுக்கே லீவு விட்டு கொண்டாடிய அதிபர்!
மத்திய அமைச்சரவை 2 நாட்களில் மாற்றம்? நிர்மலா சீதாராமனின் இலாகா மாறுகிறதா?
தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை...சென்னையில் நாளை கனமழை வாய்ப்பு
15 ஆண்டுகளுக்குப் பிறகு 'செவ்வந்தி' அரசு பங்களாவை காலி செய்தார் இபிஎஸ்
திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
{{comments.comment}}