சென்னை: தமிழக சட்டப்பேரவை அக்டோபர் 14ம் தேதி கூடுகிறது என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
இந்தாண்டிற்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஜனவரி மாதம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அன்று ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறினார். அதன்பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் 4 நாட்கள் நடைபெற்றது. இதனையடுத்து, 2025-26ம் ஆண்டிற்கான பட்ஜெட் மார்ச் 14ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மார்ச் 15ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மார்ச் 17 முதல் மார்ச் 22 வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இதன்பின் மார்ச் 24 முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை துறை ரீதியிலான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.
இந்த நிலையில் 6 மாத இடைவெளியில் மீண்டும் சட்டப்பேரவை கூட்டப்பட வேண்டும் என்ற விதியின் அடிப்படையில், தற்போது அக்டோபர் 14ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சபாநாயகர் அப்பாவு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி காலை 9:30 கூடுகிறது. மேலும் அன்றைய தினம் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மறைமுக வால்பாறை சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர் மறுமை குறித்து இரங்கல் குறிப்பு தெரிவிக்கப்படும்.
அதேபோல் அன்றைய தினம் 2025 - 26 ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. அலுவலக கூட்டம் பேரவை கூடுவதற்கு முன்னர் ஒரு நாள் அலுவல் ஆய்வு கூடி கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது முடிவு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.
ஐப்பசி மாத தேய்பிறை சஷ்டி.. நல்ல ஆரோக்கியத்தையும் ஆன்மீக சக்தியையும் அளிக்கும்!
ஒரே சூரியன் .. ஒரே சந்திரன்.. ஒரே திமுக... பாட்ஷா ஸ்டைலில் அதிரடி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின் இடத்துக்கு நிச்சயமாக உதயநிதி வருவார்: துரைமுருகன் புகழாரம்!
இளைஞர்களை ரவுடிகளாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி...பிரதமர் கடும் குற்றச்சாட்டு
நடிகை கௌரி கிஷனின் உடல் எடை குறித்த கேள்வி... வருத்தம் தெரிவித்து யூடியூபர் வீடியோ வெளியீடு!
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் ஆரம்பம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து.. வெளியேறுகிறாரா சஞ்சு சாம்சன்.. சிஎஸ்கேவுக்கு வருவாரா?
தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்!
மனித நேயமும் மாற்றுத்திறனாளிகளும்.. தன்னம்பிக்கையும், தைரியமும் அவர்களை வழி நடத்தும்!
{{comments.comment}}