முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

Jul 26, 2025,05:14 PM IST

சென்னை : தமிழகம் வரும் பிரதமரிடம், முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கோரிக்கைகள் அடங்கிய தமிழக அரசின் மனுவை யார் வழங்க போகிறார் என்ற தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 


லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அவருக்கு இதயத்துடிப்பில் மாற்றங்கள் இருந்ததால் ஆஞ்சகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர் நலமுடன் இருந்தாலும் இன்னும் ஓரிரு நாட்கள் ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருந்தால் மருத்துவமனையில் இருந்தபடியே தனது அலுவல்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனித்து வருகிறார். அமைச்சர்களுடன் ஆலோசனை, மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை ஆகியவற்றை செய்து வருகிறார்.




இந்நிலையில் 6வது நாளாக மருத்துவமனையில் சகிச்சை பெற்று வரும் முதல்வர் ஸ்டாலினை திமுக எம்.பி., கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் நேரில் சென்று இன்று சந்தித்துள்ளனர். இதற்கிடையில் தூத்துக்குடியில் நலத்திட்டங்கள் பலவற்றை துவக்கி வைப்பதற்காக, மூன்று மாதங்களுக்கு பிறகு பிரதமர் மோடி இன்று தமிழகம் வர உள்ளார். தமிழகம் வரும் முதல்வரை வரவேற்க முதல்வரால் செல்ல முடியாத காரணத்தால் அவருக்க பதில் யார் பிரதமரை வரவேற்று, அவரிடம் தமிழக அரசின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்க போகிறார் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


அதாவது, மருத்துவமனையில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை தலைமை செயலாளர் மூலமாக கொடுத்து அனுப்பி உள்ளார். தலைமை செயலாளரிடம் இருந்து கோரிக்கை மனுவை பெற்று, அமைச்சர் தங்கம் தென்னரசு, பிரதமர் மோடியிடம் அளிப்பார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?

news

வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

பாமக கட்சியும்,மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம்: எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி!

news

தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி

news

அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

news

அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்

news

ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?

news

10 நாள் கெடு முடிந்தது.. யாருக்கு புரிய வேண்டுமோ புரியும்.. செங்கோட்டையனின் புதிய மெசேஜ்

news

அன்புக்கரங்கள்.. இரு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டம்.. இன்று முதல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்