முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

Jul 26, 2025,05:14 PM IST

சென்னை : தமிழகம் வரும் பிரதமரிடம், முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கோரிக்கைகள் அடங்கிய தமிழக அரசின் மனுவை யார் வழங்க போகிறார் என்ற தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 


லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அவருக்கு இதயத்துடிப்பில் மாற்றங்கள் இருந்ததால் ஆஞ்சகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர் நலமுடன் இருந்தாலும் இன்னும் ஓரிரு நாட்கள் ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருந்தால் மருத்துவமனையில் இருந்தபடியே தனது அலுவல்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனித்து வருகிறார். அமைச்சர்களுடன் ஆலோசனை, மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை ஆகியவற்றை செய்து வருகிறார்.




இந்நிலையில் 6வது நாளாக மருத்துவமனையில் சகிச்சை பெற்று வரும் முதல்வர் ஸ்டாலினை திமுக எம்.பி., கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் நேரில் சென்று இன்று சந்தித்துள்ளனர். இதற்கிடையில் தூத்துக்குடியில் நலத்திட்டங்கள் பலவற்றை துவக்கி வைப்பதற்காக, மூன்று மாதங்களுக்கு பிறகு பிரதமர் மோடி இன்று தமிழகம் வர உள்ளார். தமிழகம் வரும் முதல்வரை வரவேற்க முதல்வரால் செல்ல முடியாத காரணத்தால் அவருக்க பதில் யார் பிரதமரை வரவேற்று, அவரிடம் தமிழக அரசின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்க போகிறார் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


அதாவது, மருத்துவமனையில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை தலைமை செயலாளர் மூலமாக கொடுத்து அனுப்பி உள்ளார். தலைமை செயலாளரிடம் இருந்து கோரிக்கை மனுவை பெற்று, அமைச்சர் தங்கம் தென்னரசு, பிரதமர் மோடியிடம் அளிப்பார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தவெக ஆட்சியமைப்பது உறுதியானது.. தொடங்குகிறது விஜய் சகாப்தம்!

news

தமிழகத்தில் ஆட்சி அமைக்க முயற்சி செய்யவில்லை.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

news

பிளஸ்டூ தேர்வு முடிவுகள்: ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகளில் அசத்தலான தேர்ச்சி விகிதம்!

news

ஆட்சியமைப்பதில் சிக்கல்.. இப்போது கூட விஜய் பேசாமல் இருப்பது ஏன்.. என்னதான் பிரச்சினை?

news

நல்லதே நடக்கும்.. ஒரு நிமிடக் கதை (8)

news

மாணிக்க மகனே மரகத செல்வா.. மகனுக்கு ஓர் மடல்!

news

மே 1ம் தேதி மட்டுமல்ல.. எப்போதுமே கொண்டாடுவோம் தொழிலாளர்களை!

news

எண்ணங்களை நிறுத்துவது எப்படி? (How to Stop Thoughts?)

news

சென்னை ஹஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி +2 பொதுத்தேர்வில் 98.10% தேர்ச்சி!

அதிகம் பார்க்கும் செய்திகள்