முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

Jul 26, 2025,05:14 PM IST

சென்னை : தமிழகம் வரும் பிரதமரிடம், முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கோரிக்கைகள் அடங்கிய தமிழக அரசின் மனுவை யார் வழங்க போகிறார் என்ற தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 


லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அவருக்கு இதயத்துடிப்பில் மாற்றங்கள் இருந்ததால் ஆஞ்சகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர் நலமுடன் இருந்தாலும் இன்னும் ஓரிரு நாட்கள் ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருந்தால் மருத்துவமனையில் இருந்தபடியே தனது அலுவல்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனித்து வருகிறார். அமைச்சர்களுடன் ஆலோசனை, மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை ஆகியவற்றை செய்து வருகிறார்.




இந்நிலையில் 6வது நாளாக மருத்துவமனையில் சகிச்சை பெற்று வரும் முதல்வர் ஸ்டாலினை திமுக எம்.பி., கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் நேரில் சென்று இன்று சந்தித்துள்ளனர். இதற்கிடையில் தூத்துக்குடியில் நலத்திட்டங்கள் பலவற்றை துவக்கி வைப்பதற்காக, மூன்று மாதங்களுக்கு பிறகு பிரதமர் மோடி இன்று தமிழகம் வர உள்ளார். தமிழகம் வரும் முதல்வரை வரவேற்க முதல்வரால் செல்ல முடியாத காரணத்தால் அவருக்க பதில் யார் பிரதமரை வரவேற்று, அவரிடம் தமிழக அரசின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்க போகிறார் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


அதாவது, மருத்துவமனையில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை தலைமை செயலாளர் மூலமாக கொடுத்து அனுப்பி உள்ளார். தலைமை செயலாளரிடம் இருந்து கோரிக்கை மனுவை பெற்று, அமைச்சர் தங்கம் தென்னரசு, பிரதமர் மோடியிடம் அளிப்பார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

காங்கிரஸ் செய்த தவறுகளைத் திருத்தவே எங்களுக்கு நேரம் போதவில்லை.. பிரதமர் மோடி

news

பிரதமர் மீது தாக்குதல் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டம்...பகீர் கிளப்பிய சபாநாயகர் ஓம் பிர்லா

news

சபாநாயகர் சொன்னது மிகப்பெரிய பொய்...காங்கிரஸ் எம்.பி சுதா காந்திமதிநாதன் காட்டம்

news

பார்லிமென்ட்டில் புயலை கிளப்பிய திமுக அமைச்சரின் பேச்சு...திமுக-காங்கிரஸ் கடும் மோதல்

news

"அந்தப் பெரிய இடம் யார்?" - மடப்புரம் அஜித்குமார் மரண விவகாரத்தில் தாய் ஆவேச பேட்டி

news

மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு

news

தவெக தேர்தல் அறிக்கைக்காக மக்களிடம் கருத்து கேட்க புதிய இணையதளம்

news

தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம்: பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு

news

பீகார் தேர்தல் முடிவுகளை ரத்து செய்யுங்க...சுப்ரீம் கோர்ட்டில் பிரசாந்த் கிஷோர் மனு

அதிகம் பார்க்கும் செய்திகள்