சென்னை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்பட்டு வரும் பொங்கல் பரிசுத் தொகுப்பை, இதுவரை வாங்கத் தவறியவர்களுக்காக நாளையும் (ஜனவரி 14) நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டுக்கான பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 8-ம் தேதி தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ், பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் ரூ.3000 ரொக்கப்பணம் உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பு தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகள் (ரேஷன் கடைகள்) மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான மக்கள் கடந்த சில நாட்களில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரங்களில் இந்தப் பரிசுகளைப் பெற்றுக் கொண்டனர். இருப்பினும், வேலை நிமித்தமாகவோ அல்லது வெளியூர் சென்ற காரணத்தினாலோ ஒருசில குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்குரிய பரிசுத் தொகுப்பினைப் பெற முடியாமல் போயிருக்கலாம் என்பதைக் கருத்தில் கொண்டு, அரசு இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, "கடந்த 8-ம் தேதி முதல் நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை இந்தப் பரிசினைப் பெறாத விடுபட்ட பயனாளிகளுக்காக நாளையும் (14.01.2026) பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், இதுவரை பரிசுத் தொகுப்பு வாங்காத பொதுமக்கள் நாளை தங்கள் பகுதிக்கு உட்பட்ட நியாய விலைக் கடைகளுக்குச் சென்று பொங்கல் தொகுப்பினைப் பெற்றுக் கொள்ளலாம். நாளை பொங்கல் பண்டிகையின் தொடக்கமான போகிப் பண்டிகை மற்றும் தை முதல் நாள் நெருங்குவதால், விடுபட்ட அனைவரும் பயன்பெறும் வகையில் இந்த காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பு, கடைசி நேரத்தில் பரிசுத் தொகுப்பைப் பெறக் காத்திருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
{{comments.comment}}