வங்கக் கடலில் உருவானது.. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு

Dec 16, 2024,05:57 PM IST

சென்னை: தெற்கு வங்க கடலில் பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


தெற்கு வங்ககடல் மத்தியில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று காலை எட்டு மணி அளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அடுத்த இரண்டு நாட்களில் அதாவது 48 மணி நேரத்தில்  மேற்கு வடமேற்கு திசையில் தமிழ்நாட்டு கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.




இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டை நோக்கி நகர இருப்பதால் நாளை முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்புள்ளது.நாளை மற்றும் நாளை மறுநாள் ஒரு சில இடங்களில்  மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழக கடலோரப் பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


நாளை மிக கனமழை: 


செங்கல்பட்டு, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


சென்னையில் நாளை கனமழை: 


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், ஆகிய ஐந்து மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 


சென்னை -  நாளை மறுநாள் மிக கனமழை: 


சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், ஆகிய ஆறு மாவட்டங்களில் நாளை மறுநாள் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது .


நாளை மறுநாள் கனமழை:


ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், அரியலூர், மயிலாடுதுறை, ஆகிய 6 மாவட்டங்களில் நாளை மறுநாள் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


சென்னை மழை: 


சென்னையில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


மிதமான மழை: 


தமிழ்நாட்டில் டிசம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையை எதிர்பார்க்கலாம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இந்திய நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு.. ஜூலை 16ல் ஏமனில் மரண தண்டனை?.. கவலையில் குடும்பம்!

news

அதிகரித்து வரும் காற்று மாசு.. திக்கித் திணறும் தலைநகர் டெல்லி.. கவலையில் மத்திய அரசு!

news

Bharat Bandh: நாடு முழுவதும் 25 கோடித் தொழிலாளர்கள் ஸ்டிரைக்.. முடங்கும் முக்கிய சேவைகள்!

news

காமத் தீயில் வெந்து போனது காமுகனின் மனசு.. கலையின் ஹைக்கூ கவிதைகள்!

news

2 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 09, 2025... இன்று நல்ல நேரம் தேடி வரும் ராசிக்காரர்கள்

news

பாரத் பந்த்.. நாளை நாடு தழுவிய அளவில்.. தொழிற்சங்கங்களின் போராட்டம்.. பாதிப்பு வரமா?

news

அமெரிக்காவில் பெரும் சோகம்.. சுற்றுலா சென்ற இந்தியர், மனைவி, 2 பிள்ளைகளுடன் விபத்தில் சிக்கி பலி

news

வாய்க்கு வந்ததை வாக்குறுதி என அளித்துவிட்டு, மக்களையும் ஏமாற்றும் திமுக அரசு: எடப்பாடி பழனிச்சாமி!

news

21 நாட்களில் பணம் இரட்டிப்பு.. பெங்களூரைக் கலக்கிய கேரள தம்பதி தலைமறைவு.. அதி நவீன மோசடி!

அதிகம் பார்க்கும் செய்திகள்