சென்னை: தமிழ்நாட்டில் டெல்டா பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து நேற்று பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. குறிப்பாக சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி சாலைகளில் மழை நீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது.
அதேபோல் நெல்லை தூத்துக்குடி, இராமநாதபுரம், நாமக்கல், மயிலாடுதுறை,சீர்காழி, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது. நெல்லை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 10 cm மழை பதிவாகியுள்ளது. அதேபோல் நாலுமுக்கு 9.6 சென்டிமீட்டர், காக்காச்சி 8.7 சென்டிமீட்டர், மாஞ்சோலையில் 7.8 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது.

சென்னை மழை:
சென்னையில் மயிலாப்பூர்,மந்தவெளி, அடையாறு, பட்டினப்பாக்கம், அண்ணா நகர், திருவான்மியூர், கிண்டி, ஆகிய பகுதிகளில் மாலை முதல் இரவு வரை மழை விட்டு விட்டு பெய்தது. அதேபோல் சோளிங்கநல்லூர், செம்மஞ்சேரி, மேடவாக்கம், ஓஎம்ஆர் சாலை உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் இரவில் விடிய விடிய கன மழை பெய்துள்ளது.
இந்த நிலையில் தென் தமிழக மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று கன மழை:
ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, கடலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ஆகிய ஏழு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
May 1: காலத்தின் நெற்றியில் நீ இடும் கையெழுத்து.. காய்ந்த உன் கரங்களின் வியர்வை முத்து!
ரவிவர்மன் எழுதாத கலையோ.. மறக்க முடியாத ஓவிய வித்தகர்.. ராஜா ரவிவர்மா!
சித்தார்த்தனின் புத்த பூர்ணிமா!
அனுபவம் அறிவோம்.. செலவு குறைந்த புதுவிதமான சிறந்த திருமணம்!
அழகு மாறும்.. ஆன்மா அப்படியே இருக்கும்!
நல்ல பாட்டு கேட்டா.. ஆஹா.. அடடா.. Good songs are good healers!
A Silk Wrapped in Love
S Sharmila Poem: உனக்குள் ஒருவன்!
நதியும் நீயும் ஒன்றோ!
{{comments.comment}}