சென்னை: மேலடுக்கு காற்று சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் வரும் 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதத்துடன் வடகிழக்கு பருவ மழை நிறைவடைந்து தமிழ்நாடு முழுவதும் பெரிய அளவில் மழை இல்லை. தற்போது அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் அதிகமாக பனி இருந்தாலும் பகலில் வெயிலுடன் மிதமான காற்று வீசி வருகிறது.
இந்த நிலையில் காற்று சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் ஜனவரி 12 முதல் 16 ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மாஞ்சோலை வனப்பகுதியில் மட்டும் கனமழை பெய்யும். இது இந்த சமயத்தில் பொதுவான நிகழ்வு.
சென்னை முதல் டெல்டா மற்றும் தூத்துக்குடி வரையிலான கடலோர பகுதிகளில் மழை இருக்கும். தமிழ்நாட்டில் உள் பகுதிகளிலும் கூட மழை பெய்யும். இது விடுமுறை காலம் என்பதால் மழையால் விடுமுறை பயணம் பாதிக்கப்படாது. ஜனவரி 14 முதல் 15ஆம் தேதி வரை மாஞ்சோலை மற்றும் குற்றாலத்தின் சில பகுதிகளில் நீர்ப்பெருக்கு அதிகரிப்பைக் காணலாம்.
மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் முதல் கட்டமாக, 12 முதல் 16ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை மழை பெய்யும்.
அதேபோல் தமிழ்நாட்டில் இரண்டாவது கட்டமாக, 19ம் தேதி முதல் 21 ஆம் தேதிகளில் குறைந்த அளவிலான மழை பெய்யக்கூடும். குறிப்பாக டெல்டா முதல் தென் மாவட்டங்கள் வரை கனமழை பெய்யக்கூடும். அதே சமயம் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யாது என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
ஏகாம்பரநாதர் கோவிலில் கும்பாபிஷேகம்.. பக்தி வெள்ளத்தில் மூழ்கிய கோவில் நகரம் காஞ்சிபுரம்!
சின்னசேலம் தமிழ் சங்கம் சார்பில் மாபெரும் ஹைக்கூ திருவிழா
{{comments.comment}}