சென்னை: மேலடுக்கு காற்று சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் வரும் 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதத்துடன் வடகிழக்கு பருவ மழை நிறைவடைந்து தமிழ்நாடு முழுவதும் பெரிய அளவில் மழை இல்லை. தற்போது அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் அதிகமாக பனி இருந்தாலும் பகலில் வெயிலுடன் மிதமான காற்று வீசி வருகிறது.
இந்த நிலையில் காற்று சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் ஜனவரி 12 முதல் 16 ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மாஞ்சோலை வனப்பகுதியில் மட்டும் கனமழை பெய்யும். இது இந்த சமயத்தில் பொதுவான நிகழ்வு.
சென்னை முதல் டெல்டா மற்றும் தூத்துக்குடி வரையிலான கடலோர பகுதிகளில் மழை இருக்கும். தமிழ்நாட்டில் உள் பகுதிகளிலும் கூட மழை பெய்யும். இது விடுமுறை காலம் என்பதால் மழையால் விடுமுறை பயணம் பாதிக்கப்படாது. ஜனவரி 14 முதல் 15ஆம் தேதி வரை மாஞ்சோலை மற்றும் குற்றாலத்தின் சில பகுதிகளில் நீர்ப்பெருக்கு அதிகரிப்பைக் காணலாம்.
மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் முதல் கட்டமாக, 12 முதல் 16ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை மழை பெய்யும்.
அதேபோல் தமிழ்நாட்டில் இரண்டாவது கட்டமாக, 19ம் தேதி முதல் 21 ஆம் தேதிகளில் குறைந்த அளவிலான மழை பெய்யக்கூடும். குறிப்பாக டெல்டா முதல் தென் மாவட்டங்கள் வரை கனமழை பெய்யக்கூடும். அதே சமயம் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யாது என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}