சென்னை: மேலடுக்கு காற்று சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் வரும் 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதத்துடன் வடகிழக்கு பருவ மழை நிறைவடைந்து தமிழ்நாடு முழுவதும் பெரிய அளவில் மழை இல்லை. தற்போது அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் அதிகமாக பனி இருந்தாலும் பகலில் வெயிலுடன் மிதமான காற்று வீசி வருகிறது.
இந்த நிலையில் காற்று சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் ஜனவரி 12 முதல் 16 ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மாஞ்சோலை வனப்பகுதியில் மட்டும் கனமழை பெய்யும். இது இந்த சமயத்தில் பொதுவான நிகழ்வு.
சென்னை முதல் டெல்டா மற்றும் தூத்துக்குடி வரையிலான கடலோர பகுதிகளில் மழை இருக்கும். தமிழ்நாட்டில் உள் பகுதிகளிலும் கூட மழை பெய்யும். இது விடுமுறை காலம் என்பதால் மழையால் விடுமுறை பயணம் பாதிக்கப்படாது. ஜனவரி 14 முதல் 15ஆம் தேதி வரை மாஞ்சோலை மற்றும் குற்றாலத்தின் சில பகுதிகளில் நீர்ப்பெருக்கு அதிகரிப்பைக் காணலாம்.
மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் முதல் கட்டமாக, 12 முதல் 16ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை மழை பெய்யும்.
அதேபோல் தமிழ்நாட்டில் இரண்டாவது கட்டமாக, 19ம் தேதி முதல் 21 ஆம் தேதிகளில் குறைந்த அளவிலான மழை பெய்யக்கூடும். குறிப்பாக டெல்டா முதல் தென் மாவட்டங்கள் வரை கனமழை பெய்யக்கூடும். அதே சமயம் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யாது என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}