சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் மழைக்கும், ஒரு சில இடங்களில் வெப்பநிலை அதிகரிக்க கூடும் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நிலவும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக கடந்த சில நாட்களாகவே வெயிலும், மழையும் மாறி மாறி நிலவி வருகிறது. குறிப்பாக தென் மாவட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அதே சமயத்தில் வட தமிழ்நாடு மற்றும் உள்புறப்பகுதிகளில் வெயிலின் தாக்கமும் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் இன்றைய தமிழ்நாட்டின் மழை, வெயில் நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில்,
நேற்றைய வானிலை ஆய்வு மையத்தின் நிலவரப்படி, அதிகபட்ச வெப்பநிலையில் வேலூர் மாவட்டம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

அதன்படி, நேற்று வேலூரில் அதிகபட்சமாக 40.2 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தியது.மேலும்
கரூரில் 40.0,
திருச்சி 39.7,
மதுரை விமான நிலையம் 39.5,
திருத்தணி 39.2,
சேலம் 39.0,
தர்மபுரி 39.0,
மதுரை நகரம் 38.6,
சென்னை விமான நிலையம் 38.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
இன்று வெப்பநிலை:
இன்று கரூர் மற்றும் ஈரோட்டில் வெயிலின் தாக்கம் வேலூரை விட அதிகமாக இருக்கும். திருச்சி, தஞ்சாவூர், மதுரை, சேலம், திருத்தணி போன்ற பிற பகுதிகள் 39 டிகிரி செல்சியஸ் விட சற்று கூடுதலாகவும், அல்லது -1 டிகிரி செல்சியஸ் வரை குறைந்தும் இருக்கும்.
இன்று மழை:
கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, நெல்லை போன்ற தென் தமிழக மாவட்டங்களில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. தெற்கு கேரளாவிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சென்னை வெயில்:
சென்னை விமான நிலையத்தில் 38.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சென்னை நகரின் உட்புற பகுதியில் 37.5 முதல் 38.5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை தொடர்ந்து இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}