சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் மழைக்கும், ஒரு சில இடங்களில் வெப்பநிலை அதிகரிக்க கூடும் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நிலவும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக கடந்த சில நாட்களாகவே வெயிலும், மழையும் மாறி மாறி நிலவி வருகிறது. குறிப்பாக தென் மாவட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அதே சமயத்தில் வட தமிழ்நாடு மற்றும் உள்புறப்பகுதிகளில் வெயிலின் தாக்கமும் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் இன்றைய தமிழ்நாட்டின் மழை, வெயில் நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில்,
நேற்றைய வானிலை ஆய்வு மையத்தின் நிலவரப்படி, அதிகபட்ச வெப்பநிலையில் வேலூர் மாவட்டம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

அதன்படி, நேற்று வேலூரில் அதிகபட்சமாக 40.2 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தியது.மேலும்
கரூரில் 40.0,
திருச்சி 39.7,
மதுரை விமான நிலையம் 39.5,
திருத்தணி 39.2,
சேலம் 39.0,
தர்மபுரி 39.0,
மதுரை நகரம் 38.6,
சென்னை விமான நிலையம் 38.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
இன்று வெப்பநிலை:
இன்று கரூர் மற்றும் ஈரோட்டில் வெயிலின் தாக்கம் வேலூரை விட அதிகமாக இருக்கும். திருச்சி, தஞ்சாவூர், மதுரை, சேலம், திருத்தணி போன்ற பிற பகுதிகள் 39 டிகிரி செல்சியஸ் விட சற்று கூடுதலாகவும், அல்லது -1 டிகிரி செல்சியஸ் வரை குறைந்தும் இருக்கும்.
இன்று மழை:
கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, நெல்லை போன்ற தென் தமிழக மாவட்டங்களில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. தெற்கு கேரளாவிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சென்னை வெயில்:
சென்னை விமான நிலையத்தில் 38.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சென்னை நகரின் உட்புற பகுதியில் 37.5 முதல் 38.5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை தொடர்ந்து இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
திருக்கடையூரில் பிறந்த குங்கிலியக் கலய நாயனார்.. 63 நாயன்மார்கள் வரலாறு!
{{comments.comment}}