கத்திரி வெயில் நாளை தொடக்கம்.. ஆனால் தமிழ்நாட்டில் பெய்யும் மழையால் வெயில் குறையும்.. வெதர்மேன்!

May 03, 2025,10:42 AM IST

சென்னை: கத்திரி வெயில் காலம் நாளை முதல் தொடங்குகிறது, ஆனால் தமிழ்நாட்டின் பல இடங்களில் பெய்யும் மழையால் வெப்பநிலையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.


தமிழ்நாட்டில் கோடைகாலம் துவங்கி தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.  மேலும் கத்திரி வெயில் நாளை தொடங்க உள்ள நிலையில், வெயில் உச்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பருவநிலை மாற்றத்தின் காரணமாக தற்போது ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.




இந்த நிலையில்  தமிழ்நாட்டிற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதால் வெயில் குறையக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் கூறியதாவது,


02.05.2025 அன்று மாலை 5.30 மணி நிலவரப்படி, தமிழ்நாட்டில் 38 டிகிரி செல்சியஸ் மற்றும் அதற்கு மேல் வெப்பநிலை அதிகரித்ததது.


அதன்படி, கரூர் 40, வேலூர் 39.3, ஈரோடு  39.2, திருச்சி  39.1, சேலம் 38.2, மதுரை விமான நிலையம் 38.2, சென்னை விமான நிலையம்  38.1, மற்றும் திருத்தணியில் 38 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தியது.


இதனை தொடர்ந்து இன்றும் கரூர் மற்றும் வேலூரில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் முதலிடத்தில் இருக்கும்.


 கடந்த ஆண்டு (2024) ஏப்ரல் மாதத்தில் கரூர் 44 C ஐ தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.


அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஆகிய  மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த ஒரு வாரத்தில் வெப்பநிலை படிப்படியாகக் குறையும்.ஏனெனில் மழையால் தமிழ்நாட்டில் வெப்பம் குறையும்.


கத்திரி வெயில் காலம் நாளை முதல் தொடங்குகிறது, ஆனால் தமிழ்நாட்டின் பல இடங்களில் பெய்யும் மழை வெப்பநிலையைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.


கடந்த 2024ல் ஏப்ரல் மாதத்தைப் போல் இல்லாமல், இந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழகத்திற்கு மிகவும் நல்லதாக இருந்தது‌. ஏனெனில் அவ்வப்போது மழை பெய்யும்.


ஆந்திராவுக்கு அருகில் உள்ள வேலூர் பகுதியில் தொடர்ந்து 39-40 டிகிரி செல்சியஸ் இருக்கும், இது இப்பகுதிக்கு இயல்பானது. அங்கும் மழை தொடர்ந்து பெய்யும்.


இன்று வெப்பநிலை:


வேலூர்,கரூர்,ஈரோடு, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 39 முதல் 40 C ஆக இருக்கும். சென்னையின் உட்புறம் மீனம்பாக்கத்தில் சுமார் 37-38C ஆக இருக்கும்



இன்று மழை:


வடக்கு உட்புறம் பகுதிகளான வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் மேற்கு தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர்  ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் குறுகிய கால அதிக தீவிரம் கொண்டவை.


பெங்களூருவில் மழை பெய்யும் வாய்ப்புகள் மிக அதிகம்.


சென்னை அடுத்த 24 மணி நேரத்தில் நகரின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு அரி்து என பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மருத்துவர்கள் தினம்.. இரவு பகலாக மக்களின் நலனுக்காக போராடும் Warriers.. வாழ்த்துவோம்!

news

அஜித்குமார் மரண விவகாரம்: சிவகங்கை எஸ்.பி.காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

news

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே.. அது உடம்புக்கு மட்டுமில்லீங்க.. மனசுக்கும் ரொம்ப அவசியம்!

news

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... சவரனுக்கு ரூ.840 உயர்வு!

news

டிரம்ப்பின் மசோதா நிறைவேறினால் புதுக் கட்சி.. மீண்டும் முருங்கை மரம் ஏறும் எலான் மஸ்க்!

news

ஹைதராபாத் அருகே.. மருந்துத் தொழிற்சாலையில் வெடிவிபத்து. பலி எண்ணிக்கை 32 ஆனது!

news

ஜூலை பிறந்தாச்சு.. இன்று முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கும் வந்தாச்சு.. நோட் பண்ணிக்கங்க!

news

அழகான அரேகா பனை (Areca palm).. பாசிட்டிவிட்டி பரப்பும்.. ஆரோக்கியத்துக்கும் நல்லது!

news

டெல்லியா நீங்க.. வச்சிருக்கிறது பழைய வண்டியா.. அப்படீன்னா உங்களுக்கு பெட்ரோல், டீசல் கிடையாது!

அதிகம் பார்க்கும் செய்திகள்