10 வருடங்களுக்கு பிறகு‌‌.. ஏப்ரல் மாதத்தில் சென்னையில் பலத்த மழை .. தமிழ்நாடு வெதர்மேன்!

Apr 16, 2025,06:49 PM IST

சென்னை: ஏப்ரல் மாதத்தில் சுமார் பத்து வருடத்திற்கு பிறகு சென்னையில் தற்போது கன மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக பள்ளிக்கரணை நாராயணபுரத்தில் 156.6 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


சென்னை உள்ளிட்ட வட தமிழ்நாட்டில் சமீப காலமாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், தற்போது பல வானிலை மாற்றம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று  திடீரென கனமழை பெய்து வருகிறது. சுமார் ஒரு மணி நேரமாக இந்த மழை நீடித்து வருகிறது.குறிப்பாக எம் ஆர் சி நகர், மெரினா, மந்தவெளி, அடையாறு, பட்டினப்பாக்கம், கிண்டி, அசோக் நகர், மதுரவாயில், மாதவரம், ஆவடி, புழல், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன முதல் மிதமான மழை வரை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.



சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த திடீர் மழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.  மும்பையில் இருந்து சென்னைக்கு தரையிறங்க வந்த ஏர் இந்திய விமானம் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. அதேபோல் சென்னையில் இருந்து கிளம்ப  வேண்டிய பத்திற்கு மேற்பட்ட விமானங்கள் செல்ல முடியாமல் தாமதமானது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர். மழை நின்ற பிறகு மீண்டும் தடையின்றி விமான சேவை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்து வரும் நிலையில், சென்னை மழை குறித்த அறிவிப்பை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 


அதன்படி, இன்று மதியம் 12.30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக பள்ளிக்கரணை நாராயணபுரத்தில் 156.6 மில்லி மீட்டர் மழை வெளுத்து வாங்கியது. அதேபோல்  வளசரவாக்கத்தில் 111.6 மில்லி மீட்டர் மழையும், சாலிகிராமத்தில் 106.5 மில்லி மீட்டர் மழையும், மடிப்பாக்கத்தில் 100.8 மில்லி மீட்டர் மழையும்,  பதிவாகியுள்ளது. அதேபோல் நெற்குன்றத்தில் 99.6 மில்லிமீட்டர், மணலியில் 91.8 மில்லிமீட்டர், விருகம்பாக்கத்தில் 83.6 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.


மேலும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு கோடை காலமான ஏப்ரல் மாதத்தில் தற்போது அரிதான காற்றுடன்  கனமழை பெய்துள்ளது. சென்னையில் சில இடங்களில் 100 மிமீ மழை பதிவானது. இப்போது மழை  ECR பெல்ட்டிற்கு நகர்கிறது.

சிறுசேரி, கேளம்பாக்கம், மகாபலிபுரம், பொன்மார், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

news

திருக்கடையூரில் பிறந்த குங்கிலியக் கலய நாயனார்.. 63 நாயன்மார்கள் வரலாறு!

அதிகம் பார்க்கும் செய்திகள்