சென்னை: தென் தமிழகம் மற்றும் மேற்குத் தமிழகம் முழுவதும் இன்று நல்ல மழை பெய்ய கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை நவம்பர் ஐந்துக்கு மேல் தீவிரமடையும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் அனேக இடங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இன்று மதியம் சென்னை மணலி, திருவெற்றியூர், மாதவரம், வண்ணாரப்பேட்டை, எண்ணூர், மதுராந்தகம், உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. அதேபோல் கருமேகங்கள் சூழ்ந்து மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
இதற்கிடையே மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிவரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த நிலையில் இன்று எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் தினமும் மழை பெய்து வருகிறது. அருமனை- திருவத்தூர் பகுதிகளில் தற்போது கனமழை பெய்தது. தென் தமிழகம் மற்றும் மேற்கு தமிழகம் முழுவதும் இன்று நல்ல மழை பெய்யும்.
கன்னியாகுமரி, தேனி, தென்காசி, நெல்லை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, நாமக்கல், ஆகிய நகரங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், ஆகிய வட தமிழகத்தில் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}