சென்னை: தென் தமிழகம் மற்றும் மேற்குத் தமிழகம் முழுவதும் இன்று நல்ல மழை பெய்ய கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை நவம்பர் ஐந்துக்கு மேல் தீவிரமடையும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் அனேக இடங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இன்று மதியம் சென்னை மணலி, திருவெற்றியூர், மாதவரம், வண்ணாரப்பேட்டை, எண்ணூர், மதுராந்தகம், உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. அதேபோல் கருமேகங்கள் சூழ்ந்து மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
.jpg)
இதற்கிடையே மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிவரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த நிலையில் இன்று எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் தினமும் மழை பெய்து வருகிறது. அருமனை- திருவத்தூர் பகுதிகளில் தற்போது கனமழை பெய்தது. தென் தமிழகம் மற்றும் மேற்கு தமிழகம் முழுவதும் இன்று நல்ல மழை பெய்யும்.
கன்னியாகுமரி, தேனி, தென்காசி, நெல்லை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, நாமக்கல், ஆகிய நகரங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், ஆகிய வட தமிழகத்தில் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
CSK Vs MI: சேப்பாக்கத்தில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ்.. பிரமாத வெற்றி.. கார்த்திக் சர்மா அபாரம்!
Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக
என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?
Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!
பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!
அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!
கண்ணும் கண்ணும் நோக்கினால்!
அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?
ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)
{{comments.comment}}