சென்னை: தென் தமிழகம் மற்றும் மேற்குத் தமிழகம் முழுவதும் இன்று நல்ல மழை பெய்ய கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை நவம்பர் ஐந்துக்கு மேல் தீவிரமடையும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் அனேக இடங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இன்று மதியம் சென்னை மணலி, திருவெற்றியூர், மாதவரம், வண்ணாரப்பேட்டை, எண்ணூர், மதுராந்தகம், உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. அதேபோல் கருமேகங்கள் சூழ்ந்து மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
இதற்கிடையே மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிவரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த நிலையில் இன்று எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் தினமும் மழை பெய்து வருகிறது. அருமனை- திருவத்தூர் பகுதிகளில் தற்போது கனமழை பெய்தது. தென் தமிழகம் மற்றும் மேற்கு தமிழகம் முழுவதும் இன்று நல்ல மழை பெய்யும்.
கன்னியாகுமரி, தேனி, தென்காசி, நெல்லை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, நாமக்கல், ஆகிய நகரங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், ஆகிய வட தமிழகத்தில் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?
செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!
தக்லைஃப் படத்தின் வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர்.. நிக்கோலஸ் பூரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!
இந்திய மாணவருக்கு கைவிலங்கிட்டு.. தரையில் கிடத்தி.. அமெரிக்க விமான நிலையத்தில் அராஜகம்
தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!
35 புதிய கல்லூரிகள் புதிதாக திறந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்
{{comments.comment}}