சென்னை: வங்கக்கடலில் வரும் 22ஆம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளது. ஆனால் இந்த புயல் தமிழகத்திற்கு இல்லை. இது ஆந்திரா மற்றும் ஒடிசா பகுதிகளுக்கு செல்லும். வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும் இன்றும் நாளையும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்க சுழற்சி மற்றும் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நேற்று பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக விழுப்புரம் ஈரோடு திருவண்ணாமலை உளுந்தூர்பேட்டை மதுரை உள்ளிட்ட பல பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
.jpg)
இந்த நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் இன்று தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்புள்ளது என்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
சென்னை உட்பட வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தின் சில பகுதிகளிலும் நேற்று நல்ல மழை பெய்துள்ளது. நாளையும் இதே சூழலில் மீண்டும் இரவு முதல் காலை வரை மழை நீடிக்கும்.
குறிப்பாக வட தமிழகத்திற்கு ஞாயிற்றுக்கிழமை காலையிலும், இரவு முதல் காலை வரையும் மழை தொடர வாய்ப்புள்ளது. இந்த மழையால் பாதிப்புகள் ஏற்படாது. அடுத்த சில நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கும் இதுபோன்ற மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும் அக்டோபர் 22ஆம் தேதி உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 24 ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய உள்ளது. இதனை தொடர்ந்து இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறக்கூடும். ஆனால் இந்தப் புயல் தமிழகத்திற்கு இல்லை. இது தொடர்பாக வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். இந்த புயல் ஆந்திரா மற்றும் ஒடிசா பகுதிகளுக்கு நோக்கி செல்லும். இதனால் அப்பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம், தனி நபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை!
சென்னை டூ பெங்களூரு, ஹைதராபாத் இடையே அதிக வேக ரயில் வழித் தடம் - பட்ஜெட்டில் அறிவிப்பு
பட்ஜெட் 20226-27ல் இடம் பெற்ற முக்கிய அறிவிப்புகள் - பழவேற்காட்டில் பறவைகள் சுற்றுலாத் திட்டம்
மத்திய பட்ஜெட் 2026: ஞாயிற்றுக்கிழமையில் ஏற்றம் காணும் பங்குச் சந்தைகள்
மத்திய பட்ஜெட்: ஏன் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது?
ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் - இது முதல் முறையா? பட்ஜெட் பாரம்பரியம் என்ன?
புடவையில் அடையாளம் சொல்லும் நிர்மலா சீதாராமன்...இந்த முறை தமிழ்நாடு காஞ்சிபுரம் பட்டு
தில்லை புராணம் கூறும் தைப்பூசத் திருநாள் சிறப்புகள்.. இத்தனையும் ஒரே நாளில் நடந்தவையா?
சட்டசபை தேர்தலை குறிவைத்த மத்திய பட்ஜெட் 2026 : தமிழ்நாட்டுக்கு பல புதுத் திட்டங்கள் அறிவிப்பு
{{comments.comment}}