22ம் தேதி உருவாகும் தாழ்வு.. புயலாக மாறும்.. ஆனால் அது நமக்கு இல்லை.. தமிழ்நாடு வெதர்மேன்

Oct 19, 2024,07:24 PM IST

சென்னை:   வங்கக்கடலில் வரும் 22ஆம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளது. ஆனால் இந்த புயல் தமிழகத்திற்கு இல்லை.  இது ஆந்திரா மற்றும் ஒடிசா பகுதிகளுக்கு செல்லும். வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும் இன்றும் நாளையும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்க சுழற்சி மற்றும் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நேற்று பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக விழுப்புரம் ஈரோடு திருவண்ணாமலை உளுந்தூர்பேட்டை மதுரை உள்ளிட்ட பல பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்துள்ளது.




இந்த நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் இன்று தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்புள்ளது என்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:


சென்னை உட்பட வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தின் சில பகுதிகளிலும் நேற்று நல்ல மழை பெய்துள்ளது. நாளையும் இதே சூழலில் மீண்டும் இரவு முதல் காலை வரை மழை நீடிக்கும்.


குறிப்பாக வட தமிழகத்திற்கு ஞாயிற்றுக்கிழமை காலையிலும், இரவு முதல் காலை வரையும் மழை தொடர வாய்ப்புள்ளது. இந்த மழையால் பாதிப்புகள் ஏற்படாது. அடுத்த சில நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கும் இதுபோன்ற மழைக்கு வாய்ப்புள்ளது. 


மேலும் அக்டோபர் 22ஆம் தேதி உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 24 ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய உள்ளது. இதனை தொடர்ந்து இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறக்கூடும். ஆனால் இந்தப் புயல் தமிழகத்திற்கு  இல்லை. இது தொடர்பாக வரும்  வதந்திகளை நம்ப வேண்டாம். இந்த புயல் ஆந்திரா மற்றும் ஒடிசா பகுதிகளுக்கு நோக்கி செல்லும். இதனால் அப்பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது  என தமிழ்நாடு வெதர்மேன்  தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்