ஹைதராபாத் அருகே.. மருந்துத் தொழிற்சாலையில் வெடிவிபத்து. பலி எண்ணிக்கை 32 ஆனது!

Jul 01, 2025,12:09 PM IST

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் அருகே உள்ள பஷாமயிலாரத்தில் மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் சுமார் 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 


திங்கள்கிழமையன்று சிகாச்சி இன்டஸ்ட்ரியல்  நிறுவனத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் பலர் காயம் அடைந்தனர். மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து இடிபாடுகளில் உடல்களைத் தேடி வருகின்றனர்.


சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள பஷாமயிலாரம் தொழிற்பேட்டையில் இந்த விபத்து நடந்தது. ஹைதராபாத்தில் இருந்து சுமார் 50 கி.மீ தூரத்தில் இந்த இடம் உள்ளது. மைக்ரோ கிரிஸ்டலின் செல்லுலோஸ் (MCC) உலர்த்தும் பிரிவில் ஏற்பட்ட வெடி விபத்தில் 35 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். அவர்களில் 11 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இன்னும் 27 தொழிலாளர்களை காணவில்லை. அவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.




மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), ஹைதராபாத் பேரிடர் மீட்பு மற்றும் சொத்து பாதுகாப்பு அமைப்பு (HYDRAA), வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து இடிபாடுகளை அகற்றி வருகின்றனர். விபத்தில் இறந்தவர்களில் பெரும்பாலானோர் பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஆவர். வெடி விபத்து நடந்தபோது தொழிற்சாலையில் 108 தொழிலாளர்கள் இருந்தனர். இந்த வெடிச்சத்தம் சுமார் 5 கி.மீ தூரம் வரை கேட்டது.


வெடி விபத்தின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க 15 தீயணைப்பு வண்டிகள் பயன்படுத்தப்பட்டன. வெடி விபத்தின் தாக்கத்தால் தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டு பல மீட்டர் தூரத்தில் விழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். சிலரது உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்துள்ளதால், அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த டிஎன்ஏ பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.


முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி செவ்வாய்க்கிழமை அன்று விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட உள்ளார். மேலும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூற உள்ளார். வெடி விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்று சுகாதார அமைச்சர் தாமோதர் ராஜா நரசிம்மா திங்களன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த நிறுவனம் 40-45 வருடங்களாக மைக்ரோ கிரிஸ்டலின் செல்லுலோஸ் தயாரித்து வருகிறது என்று அவர் கூறினார்.


இது ரியாக்டர் வெடி விபத்து இல்லை என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஜி. விவேக் தெரிவித்தார். ஏர் ட்ரையர் சிஸ்டத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வெடி விபத்து மற்றும் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த விபத்து மற்றும் அதன் காரணங்கள் குறித்து விசாரிக்க மாநில அரசு உயர்நிலைக் குழுவை அமைத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் காலை நேரப் பனிமூட்டம் நீடிக்கும்...சென்னை வானிலை மையம் தகவல்

news

திமுக.,வின் அடுத்த தலைவர் உதயநிதியா?...முதல்வர் பேசியதற்கு என்ன அர்த்தம்?

news

செங்கோட்டையன் செல்லாத நோட்டு... விஜயை எந்த நாட்டுக்கு முதல்வராக்க போகிறார்: செல்லூர் ராஜூ பேட்டி

news

வெற்று வாக்குறுதியளித்து ஊராட்சி செயலாளர்களை வஞ்சிக்கும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் தாக்கு!

news

விஜய் பேசினால் எதிர்க்கட்சிகளின் கதை முடிந்துவிடும்...செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு

news

பாமக யாருக்கு? அன்புமணி தரப்பிற்கு அங்கீகாரம் வழங்கி வழக்கு முடித்து வைப்பு

news

மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எதிராக திமுக எம்.பி., திருச்சி சிவா உரிமை மீறல் நோட்டீஸ்

news

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மருத்துவமனையில் அனுமதி

news

ஜனநாயகன் படத்திற்கு புதிய சிக்கல்: மறுதணிக்கைக்கு அனுப்ப சென்னை ஐகோர்ட் உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்