மக்களே உஷார்.. தமிழ்நாட்டில் வெப்பநிலை..இயல்பை விட 2 முதல் 3 டிகிரி அதிகரிக்குமாம்..!

Mar 25, 2025,05:38 PM IST

சென்னை:  தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகரிக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவியதால் தமிழ்நாட்டில் கடந்த வாரம் பரவலாக மழை பெய்தது. இதனால், வெயில் குறைந்து குளுமையான சூழல் நிலவியது. இதனைத் தொடர்ந்து தற்போது நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.




இருப்பினும் மேற்கு தொடர்ச்சி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. அதே சமயத்தில் தமிழ்நாடு, மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி வருவதால் மதியம் வேளையில் வெப்ப அலை அதிகமாக இருக்கிறது. மக்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.


இந்த நிலையில், தமிழ்நாட்டின் வெயில் நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 29ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும். அப்போது அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டியும், ஒரு சில இடங்களில் இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கக்கூடும்.


மேலும் மார்ச் 27 முதல் 29ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்த வெப்பநிலை ஒரு சில இடங்களில் இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடிய நிலையில், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

செப்டம்பர் மாதம் வெளிநாடு செல்கிறேன்.. களப் பணிகளுக்குத் தயாராகுங்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த ஹைகோர்ட் உத்தரவு

news

மதுரை சொத்து வரி முறைகேடு வழக்கில் இருவர் கைது: பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு!

news

கத்திக் குத்து, அரிவாள், கல்லூரிக்குள் நாட்டு வெடிகுண்டு... இது தான் திமுக அரசு: எடப்பாடி பழனிச்சாமி

news

2030 காமன்வெல்த் போட்டி.. அகமதாபாத்தில் நடத்த இந்தியா திட்டம்.. ஒப்புதல் அளித்தது IOA

news

தொடர்ந்து 4வது நாளாக குறைந்தது தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பச்சை சன்னா, கொத்தவரங்காய் கிரேவி.. டேஸ்ட்டியானது.. ஹெல்த்தியானது.. லஞ்ச்சுக்கு பெஸ்ட் ரெசிப்பி!

news

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில்.. அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்தார் டாக்டர் மைத்ரேயன்

news

பாகிஸ்தான் நம்மை அழிக்க நினைப்பதற்குள்.. பாதி பாகிஸ்தான் காலி.. இந்தியாவின் பலம் இதுதான்!

அதிகம் பார்க்கும் செய்திகள்