மக்களே உஷார்.. தமிழ்நாட்டில் வெப்பநிலை..இயல்பை விட 2 முதல் 3 டிகிரி அதிகரிக்குமாம்..!

Mar 25, 2025,05:38 PM IST

சென்னை:  தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகரிக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவியதால் தமிழ்நாட்டில் கடந்த வாரம் பரவலாக மழை பெய்தது. இதனால், வெயில் குறைந்து குளுமையான சூழல் நிலவியது. இதனைத் தொடர்ந்து தற்போது நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.




இருப்பினும் மேற்கு தொடர்ச்சி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. அதே சமயத்தில் தமிழ்நாடு, மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி வருவதால் மதியம் வேளையில் வெப்ப அலை அதிகமாக இருக்கிறது. மக்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.


இந்த நிலையில், தமிழ்நாட்டின் வெயில் நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 29ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும். அப்போது அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டியும், ஒரு சில இடங்களில் இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கக்கூடும்.


மேலும் மார்ச் 27 முதல் 29ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்த வெப்பநிலை ஒரு சில இடங்களில் இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடிய நிலையில், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Weather Update: தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்: வானிலை மையம் தகவல்!

news

இஸ்ரேலுக்கு கருணை காட்ட மாட்டோம்.. போர் தொடங்கி விட்டது.. ஈரான் மதத் தலைவர் கமேனி ஆவேசம்!

news

கீழடி அகழாய்வை நிராகரித்தால் .... முதல் குரலாக அதிமுகவின் குரல் ஒலிக்கும்: ஆர்.பி.உதயகுமார்

news

வாசக் கருவேப்பிலையே.. எடுத்து எரியாதீங்க.. அப்படியே சாப்பிடுங்க.. ரொம்ப நல்லது!

news

தொழில்துறை வளரவில்லை.. அமைச்சர் பிடிஆர் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன.. அன்புமணி கேள்வி!

news

SMART WATER ATM: சென்னையில் கட்டணமில்லா குடிநீர் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

news

3ம் நாட்டின் மத்தியஸ்தத்தை எப்போதும் இந்தியா ஏற்காது.. டிரம்ப்பிடம் கூறிய பிரதமர் மோடி

news

ரயில்வேயில் 6180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு

news

காலையிலேயே வருமான வரித்துறை அதிரடி.. சீஷெல் ஹோட்டல்களில் ரெய்டு.. சிக்கியது என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்